இதழ் 12
டிசம்பர் 2009
  கவிதை
தர்மினி
 
     
  பத்தி:

டடவாவும் ஈ ஷந்தியனும்

அகிலன்

குருநாதர் கும்பமுனியின் பொன் வாக்கும் கலைந்ததொரு கனவும்
சீ. முத்துசாமி


Bye… Bye
தோழி

மலர்ந்தது ஈழம்!
அ. ரெங்கசாமி

கட்டுரை:

உல‌கில் புதிய‌ வ‌ழித்த‌ட‌ம் - ஏபெக் மாநாடு : ஒரு பார்வை
கெ.எல்.

மக்கள் எவ்வழியோ அவ்வழியே அரசும்
நெடுவை தவத்திருமணி

ஒரு தேசாந்திரியின் யாத்திரையில்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

சிறுகதை:

அவள் - நான் - அவர்கள்
மா. சண்முகசிவா


கருப்பண்ணன்
சு. யுவராஜன்

ராதா: எண் 7, இருபத்து நான்காவது மாடி
முனிஸ்வரன்

உற்றுழி
கமலாதேவி அரவிந்தன்

கார்ட்டூன் வரைபவனின் கதை
ம. நவீன்

நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!
கோ. முனியாண்டி

சிகப்பு விளக்கு
விக்னேஸ் பாபு

தொடர்:


செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...9
சீ. முத்துசாமி

பரதேசியின் நாட்குறிப்புகள் ...5
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...5
இளைய அப்துல்லாஹ்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...3


எம். ரிஷான் ஷெரீப்


தீபச்செல்வன்

தர்மினி

ஏ.தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

பதிவு:

"நா கோவிந்தசாமி எனும் படைப்பாளி"
புஷ்பலதா கதிரவேலு

குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
மணிமாலா

இதழ் அறிமுகம்:

மரங்கொத்தி
மன்னார் அமுதன்

நேர்காணல்
பவுத்த அய்யனார்

புத்தகப்பார்வை:

குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி... (குறுநாவல் தொகுதி)
முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன்
     
     
 

இரக்கவாளர்களின் உடைகள்

அகதிகளுக்குக்
குடிசைகள் கட்டினர்.
அழுக்கேறிய ஒற்றை
ஆடைக்குப் பதிலாக
இரக்கவாளர்களின்
உடைகளைத் துவைத்து
அணிவித்தனர்.
அரிசி,பருப்பு,சீனி
மற்றும் மாவும்
மூடைகளாக முதுகுகளில்
ஏற்றித்
தணலாய் கிடக்கும்
வயிறுகளைக் கஞ்சியால்
கழுவ
நிவாரணந் தந்தனர்.

மேலுஞ் சில
ரூபாய்களைப் பொத்திக்
கொடுத்துப்
புகைப்படங்களும்
பிடித்தனர்.

உழுத நிலத்தைக் கறவை
மாடுகளை
குளத்து மீன்களை
குடியிருந்த துண்டு
நிலத்தைக்
குண்டுகள் கொட்டிக்
குலைத்து
தின்ற சோற்றைத்
தட்டிக் கொட்டி
வரிசையாக நிறுத்தி
வள்ளல்களாய்
நிவாரணங்கள்
வழங்குதலில்
தீர்ந்தது தீர்வு.

மனிதர்களை
விலங்குகளை
முக்கால் உயிருடன்
மணலள்ளி மூடி
தப்பியோடுகையில்
முதுகிற் சுடுபட்டு
தண்ணீரிற் செத்துக்
குவிந்த சாம்பலில்
கொட்டுகின்றனர்
தங்கள் இரக்கங்களை.

பிணக்காட்டிற்
செத்துக்கிடந்த
பிள்ளைகளை
பெற்றவரை
துணையை
அயலவரை
நீள் வரிசைகளில்
நின்று கேட்கின்றனர்.
எந்த நிவாரணத்தில்
வழங்குவீர்?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768