முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 33
செப்டம்பர் 2011

  கவிதை:
மாதங்கி
 
 
       
கட்டுரை:

மரண தண்டனை என்பது மனித விழுமியங்களுக்கு எதிரான ஊழல்
ரவிக்குமார்

இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்
கே. பாலமுருகன்

மெல்ல தொடங்கும் அரசியல் விழிப்புணர்வு!
கெ. எல்.

கப்பலுக்குப் போன மச்சான்

எம். கே. குமார்

புலம்பெயர் முகங்கள்
வி. ஜீவகுமாரன்

பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
எம். ரிஷான் ஷெரீப்



பத்தி:

உயிர்ப்பு

ஷம்மிக்கா



பதிவு:

எஸ். ராமகிருஷ்ணனுடன் கழிந்த நாள்களும் கழியாத நினைவுகளும்
தயாஜி



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...15
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...23

மாதங்கி

ஆ. மாரிமுத்து

ம. நவீன்

ந. பெரியசாமி

கடலில் நடைபழகுபவள்

ஒவ்வொரு ஆண்டும்
வயது குறைந்துகொண்டே வரும்
பெண் ஒருத்தியைப் பார்த்தார்கள்

உன் வயதின் ரகசியம் என்ன என்று கேட்டபோது

பூக்களின் தேனால் பல்துலக்கி
கதிர்மாலையைப் பருகுவேன்
பூமியெங்கும் நீந்திவருவேன்
கடலைக் கண்டபோதெல்லாம்
நடை பயில்வேன்
மாகேந்திர ஜாலமுமில்லை
மந்திரதந்திரமும் இல்லை
என்னைப்போலவே இருந்தால்
ஆண்டுகள் கூடக்கூட
வயது குறைந்து வரும் என்றாள்

சரி
குறைந்து குறைந்து பூஜ்ஜியமாகிவிட்டால்
என்றார் ஒருவர்

கூடிக்கொண்டுதான் போகும்
என்றாள்
இப்படி கேட்பவர்களுக்கு


தளைதட்டல்

அவன் பிறக்கும்போது
ஆட்டுக்குட்டியாகத்தான் பிறந்தான்
அழுதான் சிரித்தான் விழித்தான்
பிற ஆட்டுக்குட்டிகளுடன்
வாஞ்சையோடு பழகினான்

சுற்றியிருப்பவர்கள் விழித்துக்கொண்டார்கள்
ஆட்டுக்குட்டியல்லவே அவன்
சிங்கம் என்று கூப்பிடத்துவங்கினார்கள்

அழுவது சிரிப்பது விழிப்பது
இதையெல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாகக்
குறைக்கச் சொல்லி
வளர்த்தார்கள்

ஓர் உன்னத நாளில்
ஓர் ஆட்டைப்பிடித்து அவனுக்கு
இணையாக்கினார்கள்

ஆட்டுக்குட்டியாகப் பிறந்தவன்
ஒரு சிங்கத்திற்குண்டான

பாவனைகளை முற்றிலுமாகக் கற்றிருந்ததால்
ஆட்டிடம்
அவனுக்கு எப்போதுமே வெற்றிதான்

சிங்கமாக அறியப்பட்டவன்
ஒரு நாள் விலங்கியல் தோட்டத்தில்
கண்டான்
சிங்கம் ஒன்றை

அது கூண்டிலிருப்பதை
உறுதிசெய்துகொண்டபின்
ஆட்டிடம்
சிங்கம்போல்
கர்சித்துக்காட்டி
உவந்துமகிழ்ந்தான்.

வியப்பு தாங்காத ஆடு
சிங்கத்தின் கூண்டைத் திறந்துவிட்டது

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768