முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  கவிதை
- செ. சுஜாதா -
 
 
 
 

வெளிச்சம்

என் கண் எட்டும் தூரத்தில் தான்
நீ நின்றுகொண்டிருந்தாய்

உன்னை நெருங்கி விடும் எத்தனிப்புடன்
நான் நகரத்தொடங்கும் தருணம்
உன் பிம்பத்தில்
அவர்கள்
முடிச்சுகள் இடத்தொடங்கினர்

உன் மௌனம் கர்வம் என அர்த்தப்படுத்தப்பட்டது
உன் உடல் மொழியில் அலட்சியம் வழிவதாய்
அவர்கள் சொன்னார்கள்
உன் தனிமையை அதிகாரத்தின் எல்லை
என்றும் அறிவுறுத்தினர்

புதிர்விளையாட்டின் முடிச்சுகளை
கலைத்துவிடும் ஆவலுடன்
உன்னுள் பயணிக்கத் தொடங்கிய என்னை
மலர் வனம் ஒன்றின்
நகரும் சிற்றோடையின் கரையில்
கொண்டுவந்து சேர்த்துவிட்டு
நீ மௌனிக்கிறாய்

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768