பட்சி

பட்சி: கடிதங்கள் 7

பட்சி ஒரு அற்புதமான கதை, பறவைகளை புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இருப்பதால் இன்னும் மனதுக்கு நெருக்கமாகிவிட்டது, பறவைகளை புகைப்படம் எடுப்பதில் இருக்கும் முக்கியமான விதி பறவையைப்போலவோ, வேறு எந்த சத்தத்தின் மூலமாகவோ ஈர்க்க முயற்சிக்கக்கூடாது என்பது, செயற்கையான ஒரு சிறிய அதிர்வுகூட பறவைகளின் சூழ்நிலையில் வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தும், இந்த விதிமீறல்தான் கதையின் முக்கியமான அம்சம்.

Continue reading

பட்சி: கடிதம் 6

பட்சி சிறுகதை

பொருட்களையும் உயிர்களையும் தனதாக்கி கொள்வதே தன் அகங்காரத்தின் இயல்பு. பெரும்பாலான நேரங்களில் அதனால் விளையும் மதிப்பொன்றுமில்லை.

மாலிக்கின் ஆசையும் அத்தகையதே. பணமிருந்து அங்கீகாரத்திற்காக ஏங்கும் ஒருவன். திறமைக்கு கிடைதத அங்கீகாரத்தை பொருட்படுத்தாமல் பணத்தேவையுடைய ஒருவன்.

Continue reading

பட்சி: கடிதங்கள் 5

சிறுகதை: பட்சி

பெரும் கொந்தளிப்புக்குப் பின் நிகழும் ஒரு பேரமைதி பட்சியை வாசித்து முடித்த கணம் மனம் முழுக்க பரவிப் படர்ந்து இருந்தது. அந்த அமைதியென்பது எண்ணங்களற்றது. இனி சொல்வதற்கும் சொல்லித் திளைப்பதற்கும் அறிவதற்கும் வேறொன்று புதிதாய் இல்லையென்ற சில கண உச்ச நிலையாக அது இருந்திருக்கலாம்.

Continue reading

பட்சி: கடிதங்கள் 4

சிறுகதை: பட்சி

அன்புள்ள நவீனுக்கு,

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். 

மனித மைய நோக்கில், உயிரினங்களின் பரிணாமப் பிரமிடின் உச்சியில் மனிதன் தன்னை வளர்த்துக் கொண்டு பொருத்தியிருக்கின்றான்  எனலாம்.  

Continue reading

பட்சி: கடிதம் 3

சிறுகதை: பட்சி

நவீன்,

தலை முறையாக காட்டை வழிபட்ட முத்துவுக்கு பச்சையம்மன் தந்த பலி இறுதியில் அந்த மஞ்சான் என வாசித்தேன். சற்று மிகைதான் என்றாலும் அங்கு செல்லும் விசை இந்த சிறுகதையில் உள்ளது. மறு புறம் முத்துவுக்கு தொண்டை புற்று என்பதும் ஒரு பலி வாங்கல் தான். பறவைகளை கள்ளக் குரலில் அழைத்ததற்கு.

Continue reading

பட்சி: கடிதம் 2

சிறுகதை: பட்சி

நவின், பட்சி கதையை வாசித்தவுடன் எனக்கு தோன்றிய முதல் எண்ணம் அது ஒலிப்பேழை சிறுகதையில் இன்னொரு வடிவம் என்பதே. வணிகம் x கலை, பொருள் x அருள், பணம் x மனம் என இரண்டு வகையான மனநிலைகள் இரு வேறு தலைமுறையில் பிளவுபட்டு இருக்கையில் மூன்றாவதாக இன்னொன்றை நோக்கிச் செல்லும் கதை அமைப்பு.

Continue reading

பட்சி: கடிதம்

சிறுகதை: பட்சி

தருமசங்கட நிலைக்குத் தள்ளப்பட்ட முத்துவை பச்சையம்மன் மன்னிக்க வேண்டும் என வேண்டிடத் தோன்றுகிறது. கதையின் பின்னனி என்னவாக இருக்கும் என ஊகிக்க முடிகிறது. அது தவறாகவும் இருக்கலாம். எந்திரன் 2.0 திரைப்படதின் வில்லன் கதாப்பாத்திரம் பட்சிராஜன் உண்மையின் ORNITHOLOGY எனப்படும் பறவைகள் ஆராய்ச்சித் துறை அறிஞர் சலீம் அலி என்பாரின் நீட்சி ஆகும்.

Continue reading

சிறுகதை: பட்சி

“சிறுவனை நீங்கள் உடன் அழைத்து வருவது, எனக்கு அவ்வளவு பாதுகாப்பாகத் தோன்றவில்லை,” என்றார் மாலிக். மேடு ஏறி வந்ததில் அவருக்கு மூச்சிரைத்தது. வாய்வழியாக நீராவிப் புகை குபுக் குபுக்கென வெளியேறிக்கொண்டிருந்தது. அவரது உதவியாளன் எங்களைப்போல் குளிருடை அணியாமல் பழுப்பு நிற டீசட்டையுடன் கனத்துத் தொங்கும் பையைத் தோள்களில் சுமந்தபடி இயல்பாக நின்றுகொண்டிருந்தான். 

Continue reading