மண்புழுக்கள்

சீ.முத்துசாமி நாவல்கள்

முற்போக்கு இலக்கியம், லட்சியவாத எழுத்து ஆகியவை பிரதானமாக இருந்த 1970களின் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில், சீ.முத்துசாமியின் நுழைவு தனித்துவமானது. திட்டவட்டமான தீர்வுகள், சமூக அவலங்களை முன்வைக்கும் கதைக் கரு, முடிவுகளில் திருப்பம் வைக்கும் உத்தி, கருத்துகளைப் பிரதிநிதிக்கும் கதாபாத்திரங்கள் எனும் சட்டகங்களில் மாட்டிக்கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில், அவர் எழுதியவை முற்றிலும் புதிய பாணியிலான எழுத்துகள். குறியீடுகள் மூலம் வாசகன் அந்தரங்கமாக வேறொரு கதையைப் பின்னி உருவாக்கும் சாத்தியங்களையும் (இரைகள்) நுண்மையான அகவய சித்திரங்களால்  வாழ்வின் அர்த்தமற்றுப் போகும் தருணங்களின் இருளையும் (கருகல்) அதற்குரிய மொழியில் புனைவாக்கினார்.  1990களுக்குப் பின் அவரது மறுபிரவேசத்தில் எழுதிய ‘கல்லறை’, ‘வழித்துணை’, ‘வனத்தின் குரல்’ போன்ற சிறுகதைகள் சீ.முத்துசாமியை மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்பதற்கான அழுத்தமான சான்றுகளாகின.

Continue reading