மலேசிய தலைமையாசிரியர் மன்றம்

தலைமையாசிரியர் மன்றம்: கோஷமும் கொதிப்பும்

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்

indexவணக்கம் சார். உங்கள் கட்டுரையைப் படித்தேன். என் பள்ளிக் குழுமத்தில் பகிர்ந்தேன். கண்டிக்கப்பட்டேன். என் தோழிகள் பலருக்கும் இது நிகழ்ந்துள்ளது. இப்படித் தனித்தனியாக பேசும்போது பள்ளியில் முடக்கப்படுவோம். ஒன்றாக இணைந்து இப்போட்டியை நிராகரித்தால் என்ன? கடந்த ஆண்டும் இதே போன்ற அறிக்கையே வந்தது. வயிறு எரிகிறது. நிகழ்ச்சி அன்று அனைத்து ஆசிரியர்களும் ஒற்றுமையாக கோஷமிட்டு நிராகரித்தால் உண்டு. முன் வருவார்களா?

மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

Continue reading

கடிதங்கள் 2: தலைமை ஆசிரியர் மன்றம்

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்

நியாயமான மனதின் மனசாட்சியில் உறுத்தலை ஏற்படுத்த வாய்ப்புள்ள கேள்விகள்! பிழைப்புக்கு mail-message-latter-260nw-1067634980முன்பு அனைத்தையும் சரணடைய வைத்துவிட்டஒரு தலைமுறை ஆசிரியர் கூட்டம் இதனையும் எவ்வித எதிர்வினையுமின்றி கள்ள மௌனத்துடன் கடந்து போகலாம். சமூகநலன் சார்ந்த நியாயமான கேள்விகள் என்பதால் பொதுவெளிக்கு கொண்டு போவதே   சரி என்பது எனது அபிப்பிராயம்! அதிலும் இது நாம் புழங்குகிற மொழி என்னும் தளம் என்பதால் பொதுவெளிக்கு கொண்டு செல்கிற பொறுப்பும் வல்லினத்திற்கு உண்டு என்றே சொல்லலாம்!

எழுத்தாளர் சீ.முத்துசாமி

Continue reading

கடிதம் 1: தலைமை ஆசிரியர் மன்றம்

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்ப்பள்ளி வீழ்ச்சியும்

imagesவணக்கம்.  தமிழ் மொழி நம்பவர்களால் ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு மட்டும் என் கருத்துரையை எழுதுகிறேன்.

மொழியைக் குறித்து தாழ்வு மனப்பான்மை முதலாவது காரணம். இன்று ஏறக்குறைய தமிழில் உரையாடினால்/ எழுதினால் மதிப்பில்லை என்று தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மணிமன்றங்கள், திராவிடர் சங்கங்கள், இந்து சங்கங்கள் என்று எல்லா நிலையிலுமான தலைவர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். எனவே, மிக எளிதாக மலாய்/ ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். இதைக் குறித்து யாரும் கேள்வி கேட்டால், ‘தமிழ் எல்லாருக்கும் புரியாது’, என்ற அலட்சியமான பதிலைச் சொல்வார்கள். என்னைப் போன்றவர்கள் கேட்டால், ‘வெள்ளைக்கார பெயரைக் கொண்ட உனக்கு தமிழ் மீது என்ன அக்கறை?’ என்று கேட்பார்கள்.

Continue reading

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்

001தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ்மொழிப் பேச்சுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் வட்டார ரீதியில் போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்பர். அதில் தேர்வு பெறுபவர் மாநிலத்தைப் பிரதிநிதித்து தேசிய அளவில் நடக்கும் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்வார்கள். இப்படி நடக்கும் போட்டியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து அடங்குவதுமுண்டு. அதில் அடிப்படையான சர்ச்சைகள் இரண்டு.

Continue reading