Category: எதிர்வினை

புதுக்கவிதை நதிக்கரை: ஓர் எதிர்வினை

‘புதுக்கவிதை நதிக்கரை’ என்ற இணைய சந்திப்பின் காணொலியைப் பார்க்க நேர்ந்தது. ஊரடங்கு காலத்தில் இவ்வாறான நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது முக்கியமானது. அவ்வகையில் கவிஞர் மனஹரன் மற்றும் சுதந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஆனால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதோடு மட்டுமல்லாமல் தரமான பேச்சாளர்களை, ஆய்வாளர்களை அடையாளம் கண்டு நிகழ்ச்சியைக் கட்டமைத்தால் இதுபோன்ற முயற்சிகள் மேலும் சிறந்த பலனைக் கொடுக்கும். …

‘பேய்ச்சி’ சர்ச்சை

பேய்ச்சி நாவல் குறித்து தமிழ் மலர் நாளிதழில் சிலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். வல்லினம் தரப்பில் இருந்து தமிழ் மலர் நாளிதழுக்கு அந்நாவல் குறித்த நேர்மறையான பார்வைகள் வழங்கப்பட்டும் அந்த நாளிதழின் தர்மத்தின்படி அவை பிரசுரிக்க மறுக்கப்பட்டன. எனவே பேய்ச்சி நாவல் குறித்த பல்வேறு தரப்புகளின் இருந்து கருத்துகள் தொகுக்கப்பட்டு வல்லினத்தில் பதிவிடப்படுகிறது. காழ்ப்பின் குரல்கள்…

எதிர்வினை

அண்மையில் முகநூலில் வல்லினம் செயல்பாடுகள் குறித்த சில சர்ச்சைகள் எழுந்தன. பதிப்புரிமை, ராயல்டி குறித்து அவை இருந்ததால் பொது வாசகர்களின் குழப்பங்களைப் பொருட்படுத்தி அவர்கள் கேள்விகளுக்கான பதிலை வழங்கியுள்ளோம். அவதூறுகளைக் எளியக் கேள்விகளாக மாற்றி அவற்றுக்கான பதில்களை இணைத்துள்ளது மேலும் தெளிவடைய உதவும் என நம்புகிறோம். – ஆசிரியர் வல்லினம் 100க்கு தேசிய நிலநிதி கூட்டுறவு…

சுப்ரபாரதி மணியன் எதிர்வினையும் அசட்டுத்தனமும்

குறிப்பு: ஜனவரி வல்லினத்தில் கடவுச்சீட்டு என்னும் கள்ளச்சீட்டு எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. கடவுச்சீட்டு எனும் நாவலை எழுதிய சுப்ரபாரதிமணியன் அக்கட்டுரைக்கு தனது எதிர்வினையை அனுப்பியுள்ளார். இலக்கிய விமர்சனமாக இருக்கும் பட்சத்தில் இந்த எதிர்வினைக்கு அடுத்த மாதம் வல்லினம் தரப்பில் இருந்து பொறுமையாக பதில் கூறியிருப்போம். ஆனால் முற்றிலும் மலினமான அவதூறை தாங்கியுள்ள இந்தக்…

கடவுச்சீட்டு என்னும் கள்ளச்சீட்டு

மலேசிய பின்னணி நாவல் என்றும் மலேசிய மக்களின் வாழ்வை கூர்ந்து கவனித்து எழுதப்பட்டது என்றும் பின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்ததால், தமிழக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘கடவுச்சீட்டு’ நாவலை விடுமுறையில் நேரம் ஒதுக்கி வாசித்தேன். ‘கடவுச்சீட்டு’ மிக எளிய கதையமைப்பைக் கொண்ட நாவல். தமிழக கிராமம் ஒன்றில் வளர்ந்த பெண்ணை மலேசிய இளைஞன்  ஒருவன்,  (சில சமாதானங்களைச்…

பொதுத்தேர்தலின் முடிவும் எழுத்தாளர் சங்கத்தின் வாக்குறுதியும்.

2017இல் எழுத்தாளர் சங்க தேர்தலுக்குப் பிறகு மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் எழுதியிருந்தேன். ஒரு சுரண்டலுக்குக் கல்வித்துறையின் வழி அவர் சம்பாதித்த நற்பெயரை ஆயுதமாக வழங்கியிருந்ததை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட மடல் அது. எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் ஒவ்வொரு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி பயம் நெருக்கும் போது புதிதாகச் சில திட்டங்களை ஆண்டுக்கூட்டத்தில் கூறுவார்.…

வல்லினம் 100 : சர்ச்சைகள், கேள்விகள், விவாதங்கள்

தமிழ் நூல்களைப் பதிப்பித்தல், அதனை விற்பனைக்குக் கொண்டு வருதல் போன்றவை மலேசிய இலக்கியச் சூழலில் ஆபத்தான காரியங்களாகவே பலகாலமாக வர்ணிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் ஒருவர் பெரும் நஷ்டங்களைச் சந்திக்க நேரும் எனவும் அதனை சரிகட்ட அரசியல்வாதிகள் அல்லது தனவந்தர்களை முன்னிலைப்படுத்துவதன் மூலமாகவே தமிழ் நூல் பதிப்புத்துறையில் இயங்குபவர்களும் எழுத்தாளர்களும் காக்கப்பட முடியும் எனவும்…

மன்னர் மன்னனுக்கு ஒரு திறந்த மடல்.

மதிப்பிற்குறிய மன்னர் மன்னன் அவர்களுக்கு. தங்கள் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. தாங்கள் பல ஆசிரியர்களை உருவாக்கிய ஆசிரியர். அவ்வகையில் உங்களைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் நல்லனவற்றையே கூறியுள்ளனர். எனவே தாங்கள் சார்ந்த துறை மீதும் அதில் தாங்கள் காட்டிய நாட்டம் மீதும் எனக்கு மதிப்புண்டு. நீங்கள் ஒரு நல்லாசிரியர். அதேபோல தாங்கள் மலேசியத்தமிழ்…

ஜெயமோகன், மாலன் மற்றும் மலேசிய – சிங்கை இலக்கியம்

வாசிக்கும் முன்பு:  இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் என்னை ஜெயமோகனின் அடிவருடி என்றும் அவருக்கு ‘ஜால்ரா’ அடிக்கும் நபர் என்றும் மிக எளிதாகக் கிண்டல் அடித்துச் செல்லப்போவதை முன்னமே அனுமானித்துக்கொள்கிறேன். நான் முன்வைக்கும் கருத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத கோழைகளுக்கும் சோம்பேறிகளுக்கும் அது மட்டுமே கையில் கிடைத்திருக்கும் இறுதி ஆயுதம். எனவே அவர்களை அடையாளம் காண அந்த…

வழக்கறிஞர் பசுபதியும் பத்திரிகை அறமும்!

கடந்த சில தினங்களாக நண்பர்களிடம் இருந்து வந்த அழைப்புகள் குறுந்தகவல்கள் என பலவும் வழக்கறிஞர் பசுபதி குறித்து மலேசிய நண்பன் நாளிதழ் செய்த அவதூறுகள் தொடர்பாகவே இருந்தன. எந்த நண்பர்கள் சபையிலும் நான் பசுபதியின் பெயரை உச்சரிக்காமல் இருந்ததில்லை. நான் பெரும்பாலான சமயங்களில் செயலூக்கம் அடைவது அவரைப் பார்த்துதான். சண்முகசிவா தந்தை போன்றவர் என்றால் பசுபதி…

அ. ரெங்கசாமிக்கு மா. சண்முகசிவா கடிதம்…

அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஐயா அவர்களுக்கு… வணக்கம். தாங்கள் தங்களுடைய தந்தை மலாயா வந்தது குறித்தும் அது தொட்டு தொடரும் உங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் நூல் ஒன்று எழுதி வருவது அறிந்து மகிழ்ந்தேன். தங்களின் நினைவுச்சின்னம், இமயத் தியாகம், லங்காட் நதிக்கரை, முதலான நாவல்கள் எல்லாமே புனைவாக மட்டுமல்லாது அன்றைய காலத்தின் வரலாற்று பதிவுகளாகவும்…

பெண் எழுத்து

இலக்கியச் சர்சைகள் பொதுவாகவே இரண்டு தளங்களில் நிகழ்கின்றன. ஒன்றாவது சர்ச்சையின் சாரம் உள்ளடக்கியுள்ள மையத்தை நோக்கியதாக விவாதங்களைத் தொடர்வது. மற்றது, சர்ச்சையில் ஆங்காங்கு நீண்டிருக்கும் வெகுசன கயிறுகளைப் பிடித்துக்கொண்டு, மையத்தை விட்டு மற்றவற்றையெல்லாம் சர்ச்சைப் பொருளாக்கி கோஷம் எழுப்புவது. பொதுவாகவே தமிழ்ச்சூழலில் இரண்டாவது நிலைக்குதான் கிராக்கி அதிகம். காரணம் அப்போது போடும் கோஷம் ஒரு கூட்டத்தின்…

கார்த்திகேசுவின் வெடிகுண்டும் ராஜேந்திரனின் அக்குள் பந்தும்!

வர வர நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரிய மாட்டுது நைனா. எப்பப் பாரு யாராவது ஏதாவது புக்கு போடுறாய்ங்க. அதை வெளியிடுறேன்னு சொல்றாங்க. வெளிய வுடுறதுன்னா என்னான்னு போய் மண்டபத்துக்கு வெளியவே நின்னு பார்த்தா புக்க மண்டபத்து வெளியவே வுடமா உள்ளுக்குள்ளயே ஆளாலுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுத்து படிச்சிக்கிறாய்ங்க சிரிச்சிக்கிறாய்ங்க… ஒன்னுமே புரியல நைனா. சரி…

ராமசாமி அவர்களுக்கு…

ராமசாமி அவர்களுக்கு,எனக்கு அனுப்பப்பட்ட டிராஃப்டில் உங்கள் பெயர்களைக் காணவில்லை. அது தவிர, ஈழத் தமிழர் தோழமைக் குரலில் பங்கு பெற்ற படைப்பாளிகள் பலர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு , இந்த அறிக்கை சுற்றில் விடப்பட்டிருப்பதாகவும், அதில் நாங்கள் கையழுத்திடவில்லை என்றும் தெரிவித்திருந்ததால், அதை கருத்தில் எடுத்துக்கொண்டேன். இந்த காலகட்டத்தில், படப்பிடிப்பிற்காகவும், திரையிடலுக்காகவும் சுற்றுப்பயணத்தில் இருந்ததால்,…

எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கருத்துகள்

இலக்கியம் புனிதங்களை உடைக்கலாமா? இருப்பதை மாற்றுவது (change the status quo) என்பதும் இலக்கியத்தின் நோக்கங்களில் ஒன்றுதான் என்பதால் விமர்சனமே தவறாகாது. ஆனால் இலக்கியம் என்பது கருத்து மட்டுமல்ல, மொழியும்தான். பண்பட்ட மொழியைப் புறக்கணிக்கும் எதுவும் இலக்கியமாகிவிடாது. இலக்கியம் என்பது வக்கரங்களுக்கான வடிகால் அல்ல. அது மாற்றத்திற்கான போர் வாள். மாலன் ———————– மதம், புனிதம்,…