வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட படைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவுக்கென தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கோணங்கி சிறப்பு வருகை புரிகிறார். நவீன தமிழ் இலக்கியச் சூழலில் முக்கிய புனைவெழுத்தாளரான அவரது இலக்கிய உரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். வல்லினம் பரிசுத்திட்டத்தின் கீழ் எழுதப்பட்டு இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெற்ற படைப்புகளில் சிறந்த ஒன்று இந்த விழாவில் தேர்வுபெற்று பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த விழாவில் வழக்கறிஞர் பசுபதி அவர்கள் கலந்துகொண்டு ‘வல்லினம் 100’ இதழை வெளியிடுவதுடன் சிறப்புரையும் ஆற்றுவார்.
வாழ்த்துக்கள்
றிய மின் விளக்கு அதிக வெளிச்சம் .
சாம்பல் பூத்தத் தெருக்கள் எருவாகி நந்தவனத் தெருவாகியது உங்கள் அனுபவங்கள் எனும் வாடா மலரால் .தெள்ளதெளிவான காட்சிகள் உங்கள் எழுத்துவடிவத் தொலைக்காட்சியில் நேரிடையாகக் காணமுடிந்தது . ஃபாங்க் குடித்தும் நீங்கள் நிதானத்தை இழக்கவில்லை காரணம் கட்டுப்பாடு என்னும் நிவாரணி நீங்கள் குருதியில் கலந்திருப்பதால் ,நீங்களும் காவியுடை அணிந்து புகைப்படம் எடுத்தது எனக்கு புதுமையாக வியப்பாக இருந்தது . ம்ம்ம்போனால போகட்டும் 50 ரூபாய் கொடுத்து , அந்தக் கிழவரிடம் ஃபாங்க் வாங்கியது , உண்மையான விலை 25 ஆக இருக்கலாம் , ஒரு வேளை அவ்வயோதிகர் அப் பணத்தை உறவினர்களுக்கு அல்லது தன் சீடருக்கு ஒரு கைப்பிடி உணவிற்குச் செலவழித்திருக்கலாம் …… மொத்தத்தில் உங்கள் படைப்பு ஒரு மின் விளக்கில் அதிக வெளிச்சத்தோடு ஒட்டுமொத்த நகத்தைக் காணமுடிந்ததது .
சிறிய மின் விளக்கு அதிக வெளிச்சம் சாம்பல் பூத்தத் தெருக்கள் . வாழ்த்துக்கள் 🙂