தேர்தல் முடிந்து இருமாதகாலம் ஆகப்போகிறது.
தேர்தல் குறித்த கணிப்பு, முடிவின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி. தங்களைக்கவர்ந்த தலைவர்கள் பதவியில் இல்லாமல் போன ஆதங்கம்.! எலெக்ஷன் கமிஷன் செய்துள்ள துரோகம்.! சிலபலரை பதவியில் இருந்து இறக்கப்போடப்படும் கோஷம்.! மாபெரும் கூட்டனிக்கட்சியான ம.சீ.சா எந்த ஒரு பதிவியையும் ஏற்க மறுத்துள்ள அதிரடி நடவடிக்கை.! எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலரைப் பிடித்து சிறையில் அடைப்பது.! தேர்தலில் நடந்த மோசடிகளுக்கு ஆதாரங்களைத் திரட்டுவது.! தேர்தல் முடிவுகள் பிடிக்காமல் கோஷம் போடுபவர்கள், நாட்டை விட்டு ஓடுங்கள் என்கிற வெட்டி எச்சரிக்கை..! நாடு உங்கப்பனுடையதா? இல்லை, இருப்பினும் அது உங்கப்பனுடையதுமில்லை என்கிற காமடி கோஷங்கள்.!
பிரிந்துகிடக்கும் தமிழர்களை ஒன்றுதிரட்டி பேதங்களற்ற ஒரே கட்சியாக நியமிக்க முயல்வது.! எங்களுக்கு இனக்கட்சியே வேண்டாம், ஒரே இனம் அதுதான் `பங்சா மலேசியா’ என்கிற அதிரடி முழக்கங்கள்!. ஐம்பத்தாறு ஆண்டுகள் அடிமைப்பட்டது போதும், ஊழல் ஆட்சியினை வீழ்த்துவோம் என்கிற வீர வசனம்.!
நாட்டின் தொடர் மேம்பாட்டுத்திட்டதிற்கு, ஒரே ஆட்சியின் கீழ் செயல்படுவதுதான் சாலச்சிறந்தது. 2020 நோக்கிப்பயணிக்கும் நாம், ஏன் தீய சக்திகளின் தூண்டுதலில் சிக்கிக்கொள்ளுதல் வேண்டும்.!? வளர்ந்த நாடு என்கிற அங்கீகாரம் நம் நாட்டிற்குக் கிடைத்துவிட்டது அதைச் சீர்குலைக்கின்ற நோக்கத்தில் தீட்டப்படுகின்ற அனைத்துத் திட்டங்களுக்கும் சமாதி கட்டுவோம், என்கிற சூலுரை. இருபத்திரண்டு ஆண்டுகள்
தேர்தலில் மோசடிகள் நிகழ்ந்துள்ளன என்பதனைச் சுட்டிக்காட்டிய பத்திரிகைகளை ஏன் பறிமுதல் செய்தீர்கள்? சீன தமிழ் பள்ளியை மூடவேண்டுமென்று சொல்வது இனவாதமில்லையா? சீனர் ஒருவர் மைக் பிடித்து மேடையேறி தேர்தலின் மோசடிகளைப் பற்றிப் பேசினால் அது இனவாதமா? பொதுமேடையில் மைக் பிடித்து, இந்து மதத்தை இழிவு செய்தவன் இன்னும் உலவுகிறானே.!? அரசாங்கத்திற்கு எதிராகக் குரல்கொடுத்த கல்லூரி மாணவனை போலிஸ் பிடித்துச்செல்கிறது.! அமைதிப்பேரணியில் குண்டர்களின் அட்டகாசம், போலிஸ் வாளா இருந்தது.! பெண் வழக்குரைஞரின் வயிற்றில் உதைத்தான் போலிஸ்..! அமைதிப்பேரணியில் போலிஸ் அராஜகம்.! ம.இ.கா, எங்களின் முன்னோர்களை ஏமாற்றியதுபோதும், இனி நாங்கள் ஏமாறுவதாக இல்லை.! ம.சீ.சவிற்கு வேலை போய் பல ஆண்டுகள் ஆகின்றன இருப்பினும் அவர்கள் ஆள் இல்லா டீக் கடையில் தவ் ஃபூ பா செய்துகொண்டிருக்கின்றார்கள்.! அம்னோ என்கிற கட்சி அம்னோவாக மட்டுமே இருக்கட்டும், எதற்கு பாரிசான் என்கிற போர்வையில் கண்கட்டி வித்தை காட்டுகிறது.!? மலேசிய மக்கள் அதிக அரசியல் பேசுவதைத் தவிர்க்கவேண்டும், கடமைக்கு முன்னுரிமை கொடுங்கள் – பிரதமர் எச்சரிக்கை.! இணையத்தலத்தில் வரும் அனைத்தும் உண்மையல்ல, அவைகளைச் சீர்தூக்கிப்பாருங்கள்…
இப்படி இன்னும் பலவிதமான சாடல்கள், எச்சரிக்கைகள், அறைகூவல்கள், செய்திகள், குறுந்தகவல்கள் மின்மடல்கள் என எழுத்துவடிவில், மேடைகோஷங்களின் வழி, இணைத்தில் வழி, சமூகவலைத்தலங்களின் வழி, வானொலி தொலைக்காட்சி வழி தொடர்ந்து வந்தவண்ணமாகவே உள்ளன.
அரசியல் குறித்த கட்டுரைகள் எழுதுவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்பார்கள். அதற்கு பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று அங்கே சொல்லப்பட்ட செய்திகளை ஆதாரங்களாகத்திரட்டி, இங்கே இப்படி நடந்தது, அங்கே ஏற்கனவே அவர் அப்படிச்சொன்னார், நடந்தது ஒன்று மேடை முழக்கம் ஒன்று, வாக்குகள் காப்பாற்றப்படவில்லை, நடந்தது என்னன்னா? வரலாறு, பார்லிமெண்ட் பேச்சு..!! போன்ற தகவல்களையெல்லாம் ஆதாரமாகத்தி
என்னைப்பொருத்தவரையில், அரசியலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஆய்வுகள் தேவையே இல்லை. நடப்புச்சூழல் என்ன சொல்கிறது? அந்த நடப்பு நமக்கு என்னமாதிரியான இன்னல்களையும் அசௌகரியங்களையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்குச்சம்பந்தப்பட்டவர் யார்? என்ன நடக்கிறது நாட்டில்.? போன்ற நடப்புச்சூழல்களில் தீர்க்கப்பா
இந்தத் தீர்க்கப்பார்வை அனைவரு
ஒரு நடப்பு நிகழ்விற்கு அதிக அளவில் மக்கள் அலையலையென திரள்கின்றனர் என்றால் அதில் எதோ ஒரு சிறப்பு இருந்திருக்கவேண்டும்தானே.! வேலைவெட்டியில்லாதவர்கள் ஒன்றுகூடி அராஜகம் செய்கிறார்கள் என்று போகிற போக்கில் புழுதிவாரி விட்டுச்சென்றால், என்ன சொல்ல.!
தனிமனிதனான ஒருவனுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது, மாதம் முடிந்தவுடன் சம்பளம் வருகிறது. ஆக, அவன் ஒருவனின் வண்டி சரியாக ஓடுகிறதென்றால் அரசியல் நடப்புகள் பற்றி எனக்கு என்ன கவலை என்கிற அவனது மெத்தனப்போக்குச் சிந்தனை மாறவேண்டாமா.?
இரவும் பகலும் படித்து நல்ல நிலையில் தேர்ச்சி பெற்ற உனது அப்பாவிப்பிளைகளுக்கு யூனிவர்சி
விலைவாசி ஏற்றத்தின் காரணமாக நாலாயிரத்தி ஐந்நூறு நிங்கிட் சம்பளம் வாங்குபவனே முப்பத்தாறு ரிங்கிட்தான் சேமிக்க முடியுமென்கிற ஆய்வு ஒன்றினை எதிர்க்கட்சி தமது இணைய ஏட்டில் இணைத்துள்ளதே, வாசித்தாயா அதை? தமிழ் பள்ளி தமிழ் பள்ளி என ஓயாமல் போராடிக் கொண்டிருக்கின்றார்களே, தமிழ்ப்
இன்னும் இருக்கின்றது, இதற்கு மேலும் யோசித்தால் எனக்கு மயக்கமே வந்துவிடும். அரசியல் என்றால் என்னவென்று தெரிந்துகொள்வதற்கு இந்த சான்றுகள் போதுமென்று நினைக்கின்றேன்..
ஓட்டுரிமை என்றால் என்னவென்று தெரியாமல் கூட பல தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது இன்னுமொரு வேதனை.
ஒரு சம்பவம், வாக்களித்த மறுநாள் வேலை. சில இடங்களில் பொதுவிடுமுறையேயானாலும் எங்களுக்கு வேலை. வேலைக்கு வந்த நான் பல சம்பவங்களால் அதிர்ந்துபோனேன்.
பலர் ஓயாமல் தேர்தல் முடிவுகள் பற்றிய ஆதங்கத்திலேயே மூழ்கியிருந்தார்கள். வருகிற கஸ்டமர்களும் தேர்தல் முடிவில் திருப்தியில்லை என்றே புலம்பிக்கொண்டிருந்தார்கள். சீனர்கள் சிலர் ஆவேச அரசியல் பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். நம்மவர்களும் சிலர் சேவை மையங்களைத் திறக்கவிருப்பதாகக் கூறி, இதை கொஞ்சம் டைப் செய்துகொடு, அதை கொஞ்சம் எடிட் செய்துகொடு என, என்னை வட்டமடித்துக்கொண்டிருந்தார்கள்
இங்கே வேலை செய்கிற நம்மவர் ஒருவர் என்னிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார். அவரின் பேச்சு என்னை வெறுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. பேச்சு இதுதான்..
என்னங்க ஓட்டு ஓட்டு.. எல்லாம் திருட்டு. இந்த ஆளுங்கட்சி எப்படி ஜெய்க்கிறாங்க தெரியுமா? ம.இ.கா உதவியுடன்தான். ஏன்னா ம.இ.கா ஒரு கேங்ஸ்டர் அரசியல் கட்சி. அந்த கேங்ஸ்டர் அரசியல் கட்சியால் மக்களை உருட்டி மிரட்டி பாரிசானுக்கு ஓட்டுப்போடவைத்து விடுவார்கள். இது வழக்கமான ஒன்றுதான். நாம் எப்படி தலைகீழாக நின்றாலும் பாரிசான்தான் ஜெய்க்கும். எங்களுக்கு தெரியும், அவர்கள் நிறைய இடத்தில் கேங்ஸ்டர்களை இறக்கி ரெடியாக வைத்துவிட்டார்கள். தோற்றுப்போயிருந்தால், ம.இ.காவுடன் சேர்ந்து ரௌடித்தனம் செய்து சீனர்களைக் கொன்றிருப்பார்கள். இதுதான் உண்மை..’ என்றான்.
“அடேய் மக்கு சாம்பராணி, அறிவிருக்காடா உனக்கு.!?” என கத்தவேண்டும்போல் இருந்தது எனக்கு. இருப்பினும் இவன்போன்ற அறிவிலிகளிடம் பேசுவது பெருத்த அவமானம் என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டு, `ஓ.. ’, என வேண்டாவெறுப்பிற்குக் குரல்கொடுத்துவிட்டு, “நேற்று
“எனக்குச் சலிச்சுப்போச்சுங்க.. ஓட்டுப்போ
எனக்கு வந்த கோபம், சொல்லி மாளாது. அறைவிடவேண்டும்போல் இருந்தது. பேசிப் பிரியோஜனமில்லை என்பதால், பைத்தியம் போல் பேசிக்கொண்டிருந்த அவனை நான் சட்டை செய்யவேயில்லை.
இன்னொரு கூத்து. முடிக்கும்போது சிரிக்கவேண்டுமல்லவா.!
இங்குள்ள பல தமிழர்களுக்கு, தமிழக/இந்திய அரசியலில் இருக்கின்ற ஈடுபாடும் அறிவும் ஞானமும் நம் நாட்டு அரசியலில் அறவே இல்லை என்பதனை இந்த உரையாடல் சொல்லும்.
கண்டீனில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, தர்மேந்திராவை போலிஸ்காரர்கள் கொடூரமான முறையில் அடித்துக்கொன்றுள்ளார்கள், என்றேன். அதற்கு என்னுடன் உணவருந்திய அந்த ஆள் சொன்ன அடுத்தத் தகவலில் நான் மூர்ச்சையானேன்.
“ஆமாம், அவன் பம்பாய் குண்டு வெடிப்பின் தீவிரவாதி, சாகட்டும். அவனால் எத்தனை ஸ்கூல் பஸ்கள் குண்டுவெட்டிப்புக்குள்ளாயிருந்
என்ன எழவுடா இது..!!?
அருமை நல்லா எழுதிற