நவீன இலக்கிய முகாம்

பேனர்வல்லினம் இலக்கியக்குழு மற்றும் கூலிமில் இயங்கும் நவீன இலக்கியக் களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூன்று நாள் இலக்கிய முகாம் டிசம்பர் 20,21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் கூலிமில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர் ஜெயமோகன்,  எழுத்தாளர் சு.வேணுகோபால், சாம்ராஜ் மற்றும் அருண்மொழி நங்கை ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

சுமார் 100 பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாமில் நவீன இலக்கியம் சார்ந்த கலந்துரையாடல்கள் மட்டுமே இடம்பெறும். எனவே நவீன இலக்கியப் பரிட்சயம் உள்ளவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை ஏற்பாட்டுக்குழு வலியுறுத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஐந்து மலேசிய நூல்கள் வெளியிடப்படுவதோடு வல்லினம் விருதளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

நேரடியாக இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் திரு.குமாரசாமி: 0134315359 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்.

வல்லினம் இந்த நிகழ்ச்சிக்காக இலவச பேருந்து வசதியை ஏற்பாடு செய்து வருகிறது. பேருந்து கோலாலம்பூரிலிருந்து 20.12.2019 காலை 10.00 மணிக்குப் புறப்படும். பேருந்தில் இணைந்து வர விரும்புபவர்கள் ம.நவீன்: 0163194522 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான கட்டணம் ரி.ம 100 ஆகும். இக்கட்டணத்திற்கான இருநாள் தங்கும் வசதி உணவுகள் என அனைத்தும் ஏற்பாடு செய்துத்தரப்படும். முகாமில் அனைவரும் முழுமையாகப் பங்கெடுக்க வேண்டும்.

நிகழ்ச்சி நிரல்

20.12.2019 – வெள்ளி (பொது நிகழ்ச்சி)

மாலை 4.00 : பதிவு
மாலை 6.00 : சிற்றுண்டி

இரவு 7.00 –  7.30 :
– சீ.முத்துசாமி நாவல் (மலைக்காடு) வெளியீடு
– சு.வேணுகோபால் உரை

இரவு 7.30 – 8.00 :
– ம.நவீன் நாவல் (பேய்ச்சி) வெளியீடு
– அருண்மொழி நங்கை உரை
 
இரவு 8.00 – 9.00 :
– நாவல் எனும் கலை – ஜெயமோகன் உரை

இரவு 9.00 : இரவு உணவு

21.12.2019 – சனி

காலை 7.30 – 8.30 : காலை சிற்றுண்டி

காலை 8.30 – 10.30 :
– வல்லினம் பரிசுக்கதைகள்
– (அமர்வு 1) – சமகால சிறுகதைகள் :  சு.வேணுகோபால்
– கேள்வி பதில் அங்கம்

காலை 10.30 – 11.00 : தேநீர்

காலை 11.00 – மதியம் 1.00 :
– (அமர்வு 2) – தற்கால உலக இலக்கியம் – ஜெயமோகன்
– கேள்வி பதில் அங்கம்

மதியம் 1.00 – 2.30 : மதிய உணவு

மதியம் 2.30 – மாலை 4.30 :
– (அமர்வு 3) – நாட்டார் வழக்காற்றியல் – சு.வேணுகோபால்
– கேள்வி பதில் அங்கம்

மாலை 4.30 – 5.00 : தேநீர்
மாலை 5.00 – இரவு 7.00 : ஓய்வு

இரவு 7.00 ~ 9.00 :
– (அமர்வு 4) – மரபு இலக்கியம் – ஜெயமோகன்
– கேள்வி பதில் அங்கம்

இரவு 9.00 : இரவு உணவு.

22.12.2019 ஞாயிறு

காலை 7.00 – 8.00 : காலை சிற்றுண்டி

காலை 8.00 – 10.00 :
– மகாராணியின் Checkmate (ம.நவீன்) கவிதை தொகுப்பு வெளியீடு
– ( அமர்வு 5) – சமகால கவிதைகள் – கவிஞர் சாம்ராஜ்

காலை 10.00 – 10.30 : தேநீர்
 
காலை 10.30 – மதியம்1.00: (பொது நிகழ்ச்சி)
– சை.பீர்முகம்மதுவுக்கு வல்லினம் விருது  விழா
– அக்கினி வளையங்கள் நாவல் வெளியீடு
– சு.வேணுகோபால் நாவல் விமர்சனம்
– ஜெயமோகன் உரை: இலக்கியம் , விமர்சனம், படைப்பாளன்

மதியம் 1.00: மதிய உணவு/ நிறைவு

1 comment for “நவீன இலக்கிய முகாம்

  1. Sunthari Mahalingam
    November 1, 2019 at 8:41 am

    Nigalvu sirappaga nadaipera valthukkal.

Leave a Reply to Sunthari Mahalingam Cancel reply