வல்லினங்களின் மெல்லிதயம்

இப்போது நான் வசிப்பது இடைகால் என்னும் கிராமம். இது தனிமையும்  அமைதியுமான அழகிய ஒன்று. ஒரு வகையில், வாசிப்பதற்கும் எழுதுவதற்கும்  அது மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் இங்கே இலக்கியம் பேசவோ படித்ததைப் பகிர்ந்து கொள்ளவோ நண்பர்கள் கிடையாது. அதனாலேயே இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு  வெளியூர் சென்று  விட்டு ஊர் திரும்பும் போது, எதையோ இழந்தது மாதிரி…

மலேசிய தமிழ்மரபின் ஒற்றை அடையாளம்

நான் இரண்டுமுறை மலேசியாவுக்கும் – ஒருமுறை சிங்கப்பூரில் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டதன் பேரிலும் இரண்டாம் முறை நவீனும் நண்பர்களும் அமைப்பியல் பற்றிப் பேசக் கேட்டுக்கொண்டதன் பேரிலும் – சென்று முடிந்த அளவு இலக்கியம் மலேசியாவில் உருவாக்கம்பெறும் முறை, மலேசிய தமிழர்களின் இன்றைய வாழ்வுமுறை போன்றவற்றைக் கிரகித்துக் கொண்டேன். ஓரளவு மலேசியத் தமிழர்கள் பற்றிய அமெரிக்கப் பேராசிரியர் ஆண்ட்ரு…

மலேசிய இலக்கிய வரலாற்றில் வல்லினம்

கருவில் உதித்ததில் இருந்து வல்லினத்தை நான் பார்த்து வருகின்றேன். அதன் வளர்ச்சி மிக்க மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வல்லினம் குறித்து எப்போது பேசினாலும் எனக்குள் ஒரு நிறைவும் சந்தோஷமும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் தெரிகிறது. நானும் கடந்த 40 ஆண்டுகளாக இந்த நாட்டில் இலக்கியம் குறித்து பேசிவருகிறேன். நான் பார்த்துப்பேசி பழகக்கூடிய மனிதர்கள் எல்லாம்…

கேள்விகள் எழுப்புவதே சிறப்பு

வல்லினம் குழுவை பார்க்கும்போதெல்லாம், வெறுமனே எழுத்தாளர்களின் குழுமம் என நாம் பார்ப்பதில்லை. துடிப்பு மிக்க இளைஞர்களைக் கொண்ட சமுதாயத்தை மாற்றக்கூடிய ஆளுமை கொண்ட இளம் தலைமுறையினராகத்தான் பார்க்கின்றேன். நமது இந்திய சமுதாயத்தின் வரலாற்றைப் பார்த்தோமேயானால் கடந்த இருநூறு ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு இடையே தனி அடையாளமாக தன்னைப் பார்க்க விரும்புகிறது. மரபு சார்ந்த சிந்தனை, இப்படித்தான்…

வல்லினத்துக்கு முன்- பின்

வல்லினம் குழுவினரின் தொடர்பு கிடப்பதற்கு முன்பு என் நிலைஎன்ன?  அவர்களின் தொடர்பும் ஆதரவும் கிடைத்த பிறகு என் நிலை என்ன? என யோசிக்கிறேன். தொடக்கத்தில் எனக்குமூர்த்தி மற்றும் பாலு போன்று  கைகொடுத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் நிறையவும் எழுதினேன். மயில், வானம்பாடி போன்ற இதழ்களில் என் தொடர்கள் வெளிவந்தன. லங்காட் நதிக்கரை நாவலுக்கு பரிசு…

வல்லினத்தின் விமர்சன முன்னெடுப்பு

மலேசிய இலக்கியம், மலேசிய படைப்பாளிகளின் படைப்புகள் குறித்து மிகவும் காத்திரமான விமர்சனத்தை முன் வைத்து எழுதக்கூடிய பல படைப்புகளை வல்லினத்தில் நான் படித்திருக்கின்றேன். பழம்பெரும் எழுத்தாளர்களைக்கூட தயவுதாட்சண்யம் இல்லாமல் விமர்சிக்ககூடிய சிற்றிதழாக வல்லினம் மலேசியாவில் வந்தது. அவர்களோடு எனக்கும் தொடர்பு ஏற்பட்டு இதையொட்டிய என்னுடைய கருத்துகளையும் கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களின் கருத்துகளில் நேர்மையையும் தெளிவையும் பார்க்க…

வல்லினத்தின் உள்ளார்ந்த ஈடுபாடு

கெடா மாநில எழுத்தாளர் சங்க தலைவராக நான் இருந்த சமயத்தில் அச்சில் வந்த முதல் வல்லினம் இதழை அங்கு வெளியிட்டு அறிமுகம் செய்தோம். அவ்விதழுக்குப் பல படைப்புகளை நான் எழுதியிருக்கிறேன். இலக்கிய விமர்சனங்கள் அரசியல் விமர்சனங்கள், சமூக விமர்சனங்கள், சிறுகதைகள், சுய அனுபவ கட்டுரைகள் எனச் சொல்லலாம். அந்த காலகட்டத்திலேயே எங்களுக்குள் நெருக்கமும் தொடர்பும்  இருந்தது.…

வல்லினம் மீண்டும் அச்சிதழாக வேண்டும்

வல்லினம் இணைய இதழுக்கு முன்பு, அச்சிதழாக வந்தது எனக்கு ஒரு உந்துதலாகவும் எதையாவது எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது. எனது கதைகள் கட்டுரைகள் எல்லாம் அதில் வெளிவந்தன. தொடர்ந்து என்னை ம.நவீன் விரட்டி விரட்டி படைப்புகளை வாங்கினார். ஒரு முறை நான் எழுதிக் கொடுக்காவிட்டால் என் வீட்டின் முன் தீ குளித்துவிடுவேன் என்றும் கிண்டலாகச்…

என்னை மீட்ட வல்லினம்

திடீரென மலேசிய இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதாய் ‘காதல்’ என்ற இதழ் வந்திருந்தது. இளைஞர்கள் தங்களிடம் உள்ள மொத்த திறமைகளையும் கொட்டி அதனை உருவாக்கியிருந்தார்கள். புத்தகத்தில் வெளிவந்த நேர்காணலுக்கான படங்கள் அவ்வளவு அற்புதமாக இருந்தன. நான் அவற்றை மிகவும் ரசித்தேன். ‘காதல்’ புத்தகத்துக்குப் பிறகுதான் வல்லினம் வெளிவந்தது. வல்லினத்தின் வெளிப்பாடு என்னை எழுதத் தூண்டியது. வல்லினத்தில் தொடர்ந்து…

வல்லினத்தின் புதிய எழுத்துப்போக்கு

இன்றைய காலக்கட்டத்தில் மலேசியாவில் படைப்பிலக்கியம் கொஞ்சமும் தீவிரத்தன்மை இல்லாமல், கேளிக்கைத்தனமாகத்தான் பார்க்கப்படுகின்றது. எந்த எழுத்தாளர் சங்கமும் இதனைத்தான் முன்னெடுக்கின்றன. அவர்களுக்கு இருக்கும் அறிவை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு இருக்கும் மொழியை வைத்துக் கொண்டு பத்திரிகையில் கதை கவிதைகளை எழுதுகிறவர்கள் பலர். அவை பிரசுரமானதும் மகிழ்ச்சியடைந்து விடுகிறார்கள். அதுதான் இலக்கியம் என நினைக்கிறார்கள். கேளிக்கைகளைக் கொண்டாடுகின்ற மனம்…

வல்லினம் ஏற்படுத்திய வாழ்வின் திருப்பம்

எனக்கும் வல்லினத்திற்குமான தொடர்பு கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்டது. ஒரு நாள் திடீரென நவீன் என்னை அழைத்து அவரது சிறுகதைகளை நான் ஆய்வு செய்ய முடியுமா என வினவினார். மனதில் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் கூட நமக்கு அது ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என சொல்லி அந்த விமர்சனத்துக்கு ஒப்புக்கொண்டேன். அதனை கடந்த ஆண்டு மார்ச்…