ஆசிரியர்களின் பணிச்சுமையும் அதன் அரசியலும்!

2016-ஆம் ஆண்டு பள்ளித்தவணை தொடங்கி நான்கு மாதங்கள் முடிந்துவிட்டன. ஆசிரியர்கள் ஓட்டப்பந்தய வீரர்கள் போல் சுறுசுறுப்பாக ஓடத் தொடங்கிவிட்டார்கள். ஒரு குறுகியதூர ஓட்டப்பந்தயம் போல் பரபரப்பான சூழலில் அவர்கள் வாழ்க்கை மின்னலாய் ஓடி மறைகிறது. அந்தப் பரபரப்பில் அவர்கள் பெறுவதும் இழப்பதும் கவனிக்கப்படாமல் மறைந்து போகிறது. அவற்றில், வாழ்க்கையின் பல அற்புதத் தருணங்களும் கரைந்துபோகின்றன. மீட்டெடுக்க…

கோட்பாடுகளும் கௌரவக் கொலைகளும்!

சட்டப்படி குற்றமாகும் கொலைகளுக்கெல்லாம், சட்டப்படி  தண்டனை கிடைக்கிறதா? அல்லது கொலைகள் நியாயப்படுத்தப்பட்டு, சட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனை  குறைக்கப்படுகிறதா? மண், பொன், பெண்,  ஆகிய மூன்று பழங்குடிக் கோட்பாடுகளைக் காக்கும் கடமையில் இருப்பதாக நம்பிக்கொண்டு வாழும் குடும்பங்கள், குடும்பத் தலைவர்கள், கௌரவக் கொலை என்ற பெயரில் பெண்கள் சமுதாயத்தை அணுவணுவாகக்  கொன்று தின்ற பிறகு, மதம் அல்லது பாரம்பரியத்தைக் காரணம் காட்டிச் செய்த…

Information Anxiety – தகவல்கள் தொடர்பான கலக்கம்

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இப்படியொரு சொல் வழக்கில் இருப்பது பற்றிய பிரக்ஞைகூட இல்லாமல் இருக்கலாம்; அல்லது பொதுவாக மன அழுத்தம், குழப்பம் என்ற சொற்களின் வழியாக இதனைக் கடந்து சென்றிருப்போம். ஆனால் இதனை வாழ்வில் ஒரு முறைகூட அனுபவிக்காத ஆய்வியலாளர்களும், மாணவர்களும் இருக்கவே முடியாது. தற்போதைய சூழலில் சிறு பிள்ளைகள்கூட தகவல்கள் தொடர்பான கலக்க நிலையினை எதிர்கொள்வதாக…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள்

பொதுவாக பெண்களைவிட ஆண்களே கூச்சசுபாவம் மிக்கவர்கள் என்று நினைக்கிறேன். ஆண்கள் மட்டும் இருக்கையில் அவர்கள் வீரத்தைக் குறித்து சவடால் பேசுவதும் அதுவே ஒரு பெண்ணிடம் பேசுவதென்றால் உளறிக்கொட்டுவது அல்லது பேசத்தயங்குவதுமாக இருக்கிறார்கள். ஆணுக்கு பெண் ஒரு புதிர். தன் இரகசியங்களை வெளிக்காட்டவேண்டிய இடம். இப்படி நேரடியாக அணுகுவதில் உள்ள தயக்கத்தால், அதேநேரம் பெண்ணுடன் நெருங்கவேண்டும் என்ற…

சங்ககாலச் சிற்றூர் மக்களின் நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும்

தமிழக மக்கள் தம் அன்றாட வாழ்வினில் பல்வேறு நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கடைபிடித்துவருவது கண்கூடு. இவ்வாறான செயல்கள் கண்மூடித்தனமான மூடப்பழக்கங்கள் என்று வாதிடுவது ஒருபுறம் இருந்தாலும்; நம்பிக்கைகளும் சடங்குகளும் தற்செயலாக ஒருவருக்கு ஏற்படும் இன்பதுன்ப நிகழ்வுகளைக் காரணகாரியத்துடன் பொருத்தி, அது மற்றவர்க்குப் பாடமாக அறிவுறுத்தப்படுவது என்றே நாம் கருதவேண்டியுள்ளது. இந்நடவடிக்கைகள் உளவியல் சார்ந்த செயலாகவும் அமைகின்றன. அதாவது…

ஜின்ஜாஹோ

ஜின்ஜாஹோ என்பது அவனது பெயரல்ல. கூப்பிடும் பெயர். அவனது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. அவனை நிற்கவைத்து உண்மையான பெயரைக் கேட்டால்கூட ஜின்ஜாஹோ என்றுதான் பதில் வரும். அடையாளக் கார்டு இல்லை. அது அவனுக்கு எந்தவிதத்திலும் தேவைப்படவில்லை. ஜின்ஜாஹோ தலைநகர் குடிவாசி அல்ல. எப்போது இங்கு வந்து சேர்ந்தான் என்றுகூட துல்லியமாய்ச் சொல்ல இயலாது. ஆனால்…

நவீன் மனோகரன் கவிதைகள்

                கவிதை என்பது… கவிதை என்பது தற்கொலைக்கு முன்பான ஓர் அந்தரங்கக் கடிதம் கவிதை என்பது யாருக்கும் புரியாத கண்ணியமான கண்ணீர் கவிதை என்பது தோல்விகளை மூடிமறைக்கும் தற்காலிக மேகமூட்டம் கவிதை என்பது ரத்தம் வடியாதிருக்க தோலில் இட்டுக்கொள்ளும் ரணமான தையல் கவிதை என்பது மௌனம்…

காற்றைப்போல், நான் எழுவேன் – மாயா ஏஞ்சலோ கவிதைகள்

“எனது பணி முழுக்க, எனது வாழ்வு முழுக்க அனைத்தும் இருத்தல் தொடர்பானவை. எனது எழுத்து முழுக்க, “ நீங்கள் பல தோல்விகளை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் தோற்றுவிடக் கூடாது”, என்பதைத்தான் எனது எழுத்துகள் சொல்கிறது.                                                                           -மாயா ஏஞ்சலோ-  மே 28, 2014 அன்று -மாயா ஏஞ்சலோவின் மரணம் நிகழ்ந்தது. அவரது மரணம்தான்…

நீயின்றி அமையாது உலகு – 4

புத்தக அலமாரியை சரிப்படுத்த எத்தனிக்கும்போது சில சமயங்களில் இது நடக்கலாம்.  பழைய நினைவுகள்.  மறக்க முடியாத தருணங்கள்.   கொடுத்ததும் கிடைத்ததும்.   வலிகள்.   இன்ப அதிர்ச்சி என அடுக்கிக்கொண்டே போகலாம் கிடைத்தது நமது நாட்குறிப்பாக இருக்கும்போது. . . நாட்குறிப்பு என்பதைவிட குறிப்புகள் எழுதுவதில் இருந்துதான் என் எழுத்து இயங்க ஆரம்பித்திருக்க வேண்டும்.  எனக்கு எதையும்…

சிற்றிதழ் என்ற இலக்கிய வடிவம் இன்னும் ஐம்பதாண்டுகள் கழித்தும் தொடரும் – ந. முருகேசபாண்டியன்

ந. முருகேசபாண்டியன், சொந்த ஊர் மதுரை. கல்லூரி ஒன்றில் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாடக எழுத்தாளர், புனைவெழுத்தாளர், கவிஞர், விமர்சகர். இவர் எழுதிய ராஜபார்ட் நாடகம் 1995- ஆம் ஆண்டு புதுதில்லி, சங்கீத நாடக அகாதெமியினால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசு பெற்றது. இவருடைய முதல் நூலான முதல் நூலான பிரதிகளின் ஊடே பயணம் 2003- ஆம்…

வல்லினம் விமர்சன அரங்கு 2016 பதிவுகள் – பாகம் 2

அமர்வு இறுக்கமாக இல்லாமல் சுமுகமான நிலையிலேயே சென்றது. நண்பர்கள் எழுந்து நீர் அருந்த, கைகால்களை உதறிக்கொள்ள, கழிப்பறைக்குச் செல்ல என, தேவையான பொழுதுகளில் வெளியேறி வந்ததால் நீண்ட உரையாடல்களில் சிக்கல் இல்லாமல் மற்ற அனைத்து நேரங்களிலும் ஈடுபாட்டுடன் ஒன்றியிருக்க முடிந்தது. மூன்றாவது அமர்வும் குறித்த நேரத்தில் முடிய, அடுத்த அமர்விற்கான நேரத்தை மீண்டும் மறு உறுதிப்படுத்திக்…