கலை இலக்கியம்

இதழியல் முயற்சிகள் :

காதல் – இணை ஆசிரியர் (2005 – 2006)

முகவரி (2011)

வல்லினம்- இலக்கிய இதழ்

பறை – ஆய்விதழ்

யாழ் – சிறுவர் இதழ்

அவை குறித்த சுருக்கமான  அறிமுகம் :

வல்லினம் மாற்று இலக்கிய முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது. பொதுவில் பேசும் தயங்கும் தடுமாறும் விடயங்களை வல்லினம் இலக்கியம் வழி பேச முற்பட்டது. உலக இலக்கியப் போக்குடன் ஒத்து செயல்படும் வல்லினம் முதலில் ஒரு கலகம் செய்யும் இதழாகவே கருதப்பட்டது. உண்மையில் தமிழகத்தில் சிற்றிதழ் சூழலில் பெரும் மாற்றம் நிகழ்த்திய ‘கசடதபற’ எனும் இதழின் வீச்சே வல்லினத்தின் சாரம். எனவே வல்லினம் அதற்கு முந்தைய தலைமுறை இலக்கியத்துக்குச் செய்த தியாகங்களைப் பாராட்டிய அதே வேலையில் முரணான செயல்களை விமர்சிக்கவும் செய்தது. இதனால் பலரது கடும் புறக்கணிப்புக்கு வல்லினம் உள்ளானது. யாருடனும் சமரசம் செய்துக்கொள்ள விரும்பாத வல்லினம் ஆசிரியர் தனது கொள்கைக்கு முரணான யாரிடமும் பணம் பெற தயாராக இல்லை. இதன் காரணமாக வல்லினம் தொடர்ந்து அச்சு இதழாக வெளிவரமுடியாமல் இணைய இதழாக 2009ல் வெளிவரத்தொடங்கியது. எவ்வித பொருளாதார அவசியமும் இன்றி வல்லினம் தாராளமாக இணைய உலகில் விரிந்து பலரது ஆதரவைப் பெற்றது.

பறை எனும் ஆய்விதழ் 2014 தொடங்கி காலாண்டிதழாக வெளிவந்து 6 இதழ்களுடன் நின்றது.  பல மாற்று கருத்துகளை ஆய்வு பூர்வமாக நிறுவிய இதழ். இதன் இலவச இணைப்பாகவே மாணவர்களுக்காக ‘யாழ்’ எனும் இதழ் வந்தது. மலாய்/ சீன இலக்கியம், ஆற்றுகை, ஈழ இலக்கியம், குடிமை, உலக இலக்கியச் சிறப்பிதழ் என ஒவ்வொரு தலைப்பின் கீழ் முழு ஆய்வுகளோடு இதழ் தயாரிக்கப்பட்டது.

யாழ் 2015ல்  உருவாக்கி வெற்றிகரமாக இன்று மாணவர் பதிப்பகமாகச் செயல்பட்டு வருகிறது.

மாற்று முயற்சிகள்

ராயல்டி – இதற்கு முன் அரசியல் மற்றும் வணிகர்கள் தயவில் இயங்கிய மலேசியத் தமிழ் இலக்கிய உலகை எழுத்தாளன் வாசகன் பலம் கொண்டு நிர்க்க வைக்க முனைந்தது. எனவே வல்லினம் பதிப்பகம் மூலம் தொடர்ந்து எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்து அவர்களுக்கு 20% ராயல்டி வழங்கப்பட்டது.

வீதி நாடகம் – மை ஸ்கீல் அரவாறியத்துடன் வல்லினத்தை இணைந்து முதன் முறையாக நவீன வீதி நாடகத்தை தமிழக வீதி நாடகக் கலைஞர் பிரளயன் துணையுடன் மலேசியாவில் 2013ல் நடத்தினோம்.

ஆவணப்படம் – மலேசிய சிங்கப்பூர் ஆளுமைகளின் வாழ்வை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல எழுத்தாளர்களையும் நேர்காணல் செய்து அதை ஆவணப்படங்களாக தயாரித்து வருகிறேன். இதுவரை 14 ஆவணப்படங்கள் தயாரித்துள்ளேன்.

படைப்பிலக்கியத்தில்:

நூல்கள் – மலேசியாவில் வானம்பாடி ரக புதுக்கவிதைகளில் திழைத்திருந்த சூழலில் நவீன கவிதை வகை குறித்த அறிமுகத்தை மலேசியாவில் ஏற்படுத்திய  முதல் தலைமுறையைச் சேர்ந்தவன் எனலாம். இதுவரை என் நூல்கள் 12 வெளிவந்துள்ளன.

வல்லினம் விருது:

2014ல் ‘வல்லினம் விருது’ எனும் விருதினை உருவாக்கி அதில் 5000 ரிங்கிட் வழங்குவதுடன் விருது பெரும் எழுத்தாளரின் ஆவணப்படம் மற்றும் வாழ்க்கை வரலாறையும் வல்லினம் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளோம்.

இதுவரை எழுதிய நூல்கள்:

  1. சர்வம் பிரமாஸ்மி – 2007 (கவிதை நூல்)
  2. கடக்க முடியாத காலம் – 2010 (பத்தி தொகுப்பு)
  3. விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு – 2012 (விமர்சன கட்டுரைகள் தொகுப்பு)
  4. வெறி நாய்களுடன் விளையாடுதல் – 2013 (கவிதை நூல்)
  5. மண்டை ஓடி – 2015 (சிறுகதை தொகுப்பு)
  6. வகுப்பறையின் கடைசி நாற்காலி – 2015 (கட்டுரைத் தொகுப்பு)
  7. உலகின் நாக்கு 2017 (உலக இலக்கிய அறிமுகக் கட்டுரை)
  8. போயாக் 2018 (சிறுகதை தொகுப்பு)
  9. நாரின் மணம் 2018 (பத்தி தொகுப்பு)
  10. மீண்டு நிலைத்த நிழல்கள் 2018 (நேர்காணல் தொகுப்பு)
  11. பேய்ச்சி (2019) நாவல்
  12. மகாராணியின் செக் மெட் (2019) கவிதை
(Visited 1,934 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *