சீ. முத்துசாமி எனும் எழுத்தாளரை நான் முதன்முறையாக சந்தித்தது 2005இல் நடைபெற்ற ஆஸ்ட்ரோ நாவல் போட்டியின் பரிசளிப்பு விழாவில்தான். அவர் எழுதிய ‘மண்புழுக்கள்’ நாவலுக்கு முதல் பரிசும் நான் எழுதிய ‘ஞானத்தின் வாசலிலே’ எனும் நாவலுக்கு இரண்டாவது பரிசும் கிடைத்தது அந்தப் போட்டியில்தான். பரிசளிப்புக்கு முன்பே தனியாக நின்றுக்கொண்டிருந்த அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். எவ்வித ஆர்வமும் இல்லாமல் பேசினார். பதில்கள் எல்லாம் ஏசுவதுபோலவே வெடுக்கென இருந்தன. அப்போது என்னை இலக்கியச் சூழலில் பலருக்கும் தெரியாது. நான் ‘நயனம்’, ‘மன்னன்’ போன்ற வெகுசன இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன். எனக்கென தனி வாசகர் பட்டாளம் இருந்தது. முத்துசாமி அந்த வெகுசன இலக்கியச் சூழலுக்கு அந்நியமானவர். வெகுசன இதழ்களில் எழுதுவோரைப் பொருட்டாகக் கருதாதவர்.
Continue readingSikandi Reading Experience – The magnificence of motherhood (Vasanth)
Dear Ma Naveen,
Myself Vasanth from Cuddalore. I completed reading Sikandi last night. I thought I could write about my reading experience.
My personal favourite is Leo Tolstoy, and Jeyamohan. I have almost read all fictional works of Je including Venmurasu. So, during this letter let me share how Sikandi impacted me relative to my favourite author’s works.
Continue readingஇன்பத்திரள்கள் அனைத்துமே நான்
நண்பர்கள் அறிந்ததுதான், புத்தாண்டுதான் நான் கொண்டாடும் முதன்மையான தினம். எனக்குத் தமிழ்ப் புத்தாண்டு இந்துப் புத்தாண்டு என எதுவும் இல்லை. அதனால் அது குறித்த குழப்பங்களும் இல்லை. பிற பண்டிகைகளும் அப்படித்தான். தீபாவளி, பொங்கலுக்கு விடுப்புக் கிடைப்பதால் அந்நாட்களைக் குடும்பத்துடன் கழிக்கிறேன். சுவையாகச் சமைத்து வைத்தால் சாப்பிடுகிறேன். என்னைச் சுற்றி உள்ளவர்களின் மகிழ்ச்சிக்காக என்னை அச்சூழலுக்கு ஏற்ப ஓரிரு நாட்கள் மாற்றி வைத்துக்கொள்கிறேன். மற்றபடி ஒரு வருடத்தில் நாள் முழுவதும் பண்டிகை எனும் குதூகலத்தில் இருப்பது வருடத்தின் முதல் தினத்தில் மட்டும்தான்.
Continue readingஆசிரியர் மாணவன் மற்றும் பலன்கள்
மகனும் மாணவர்களும் – ஜெயமோகன்
https://www.jeyamohan.in/226215
நவீன் அவர்களே, பலே! ஜெயமோகனால் நீங்கள் நிறைய பலன் அடைகிறீர்கள் போலவே. உங்கள் முயற்சிகளெல்லாம் அவரை ஆசிரியராக கொண்டதால் அடையும் பலன்களாகிவிட்டன. இன்னும் நீங்கள் புகழை அடைவீர்கள். வாழ்த்துகள்.
கர்ணா
Continue readingஆகவே செயல் புரிக!
அண்ணே வணக்கம். சற்று முன்னர் முகநூலில் அண்ணன் எழுதிய பதிவை வாசித்தேன். எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் கோபப்படமாட்டீர்கள் என நம்புகிறேன். நமது தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காப்பாற்ற போராடும் சிலரை மனமுவந்து பாராட்டும் தாங்கள், ஏன் __________ போன்ற சிலரை ஏசுகிறீர்கள்? அவர்களும் தமிழ் வளரவும் செழித்தோங்கவும்தானே பாடுபடுகிறார்கள். ஏன் இந்த பாராபட்சம்? உங்கள் விமர்சனத்தால் ____________ போல சில மனமுடைய வாய்ப்புண்டு. அவர்கள் செயல்படாவிட்டாலும் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் இழப்புதானே. நான் ஏற்கனவே கேட்ட கேள்விக்கு தாங்கள் பதில் சொல்லவில்லை. வாய்ப்பிருந்தால் சொல்லவும். என் புலன எண்ணுக்கும் __________ அனுப்பலாம்.
குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
Continue readingபசுபதி சிதம்பரம்: நம் காலத்தின் மகத்தான மனிதர்
இன்று வழக்கறிஞர் பசுபதி அவர்களுக்குப் பிறந்தநாள். பொதுவாக என் ஆசிரியர்களாகக் கருதக்கூடியவர்களை நான் ஒவ்வொருநாளும் நினைப்பதுண்டு. என் பேச்சில் அவர்கள் பெயர் இயல்பாக வந்துவிழும். இலக்கியப் பேச்சுகளில் ஜெயமோகன் பெயரை உச்சரிக்காத ஒரு நாள் இருந்ததில்லை. இலக்கியம் குறித்து பேசாமல் ஒரு நாள் கடந்ததும் இல்லை.
Continue readingநூறு சிறுகதைகளின் வாசலில்…
நேற்று (15.1.2025) தமிழாசியா சந்திப்பில் நூறாவது சிறுகதை குறித்து பேசி முடித்தோம். தமிழாசியா சந்திப்பு என்பது மாதத்தில் ஒருமுறை நடைபெறும் இலக்கியச் சந்திப்பு. ஒவ்வொரு சந்திப்பிற்கு முன்னும் நான்கு சிறுகதைகள் வழங்கப்படும். அந்தக் கதைகளை ஒட்டி நால்வர் தயார் செய்து வந்த உரையைப் பேசுவார்கள். அவர்கள் உரையை ஒட்டி உரையாடல் இடம்பெறும். இவ்வாறு 2023 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட சந்திப்பு 2025 ஆண்டு நவம்பர் மாதம் நூறு சிறுகதைகளை எட்டியுள்ளது.
Continue readingமாச்சாய் – ஒரு பார்வை
‘ஜகாட்’ வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குநர் சஞ்சை படைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாச்சாய்’. ‘ஜகாட்’ திரைப்படத்தில் வரும் சிறுவன், இளைஞனானப்பின் தேர்வு செய்யும் பாதை இருள் நிரம்பியதாக இருந்தால் அந்தப் பயணம் எவ்வாறு அமையும் எனும் அடிப்படையில் ‘மாச்சாய்’ இயக்கப்பட்டதாகப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், அதற்கான முகாந்திரம் இப்படத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். எனவே, இப்படத்தில் வரும் சியாம் தனி கதாபாத்திரம். அவன் வாழ்க்கையின் சிக்கல்களும் முற்றிலும் வேறானவை.
Continue readingஉரை: மலேசியாவில் சமகால நவீன கவிதை
அனைவருக்கும் வணக்கம்,
2025ஆம் ஆண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில், சமகால கவிதை குறித்த இந்த அமர்வில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இதன் ஏற்பாட்டாளர் ஆயிலிஷா, கடந்த 25 ஆண்டு காலமாக மலேசியத் தமிழ்க் கவிதை சூழலில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து பேசும்படி கேட்டுக்கொண்டார். மலேசிய நவீன கவிதை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் 2006இல் நடைபெற்றது. இந்த மாற்றத்தை அறிய, அதற்கு முன்னர் மலேசியக் கவிதை உலகில் என்ன நிகழ்ந்தது என்பதை ஒரு குறுக்குவெட்டாகவேணும் அறியத்தருவது அவசியம் எனக் கருதுகிறேன். அது பலருக்கும் சில தெளிவுகளை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
Continue readingகுருதிவழி நாவல்: என் உரை
எனது பத்தாவது வயது வரை நான் லூனாஸில் உள்ள கம்போங் லாமா எனும் பகுதியில் வசித்து வந்தேன். அங்கு எப்போதாவது ஒருதடவை மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்ட சீனக் கிழவி ஒருத்தியின் வருகை நிகழ்வதுண்டு. அவளை நாங்கள் கீலா கிழவி எனக்கிண்டல் செய்வோம். அவளால்தான் முன்னர் லூனாஸ் தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவள் என. என் பாட்டி சொல்வார். 1981ஆம் ஆண்டு பலரும் இறக்கக் காரணமாக இருந்த விஷச்சாராயம் அவளால் காய்ச்சப்பட்டதுதான் என்பாள் ஆங்காரமாக. அந்த மரணச் சம்பவங்களுக்கு பின், ஊரைவிட்டு ஓடிப்போன அவள் பைத்தியக்கார கிழவியாகத்தான் திரும்பி வந்து சேர்ந்திருந்தாள். அரைநிர்வாணமாகத் திரியும் அவளை எங்கள் கம்பத்து பெரியவர்கள் கல்லால் அடித்து விரட்டுவார்கள். ஒவ்வொருமுறையும் அவள் அடிபடுவதற்கென்றே வந்து போவதுபோல இருக்கும்.
Continue reading









