தேர்தல் நெருங்கும் இந்தக் காலக்கட்டத்தில் நான் பல நண்பர்களிடம் தொடர்ந்து தேர்தல் குறித்தே உரையாடி வருகிறேன். எனது நோக்கம் யாரையும் வலிந்து குறிப்பிட்டு ஒரு கட்சிக்கு ஓட்டைப் போட வைப்பதல்ல. அவ்வாறு செய்வதும் ஒரு வன்முறைதான். பாரிசான் எப்படி மக்களைச் சிந்திக்க வேண்டாம்…சொல்லும் இடத்தில் ஓட்டைப் பதிவு செய் என அரசு ஊழியர்களை மிரட்டி வைத்துள்ளதோ அவ்வாறான ஒரு மிரட்டல் முறையின் மூலமாக ஜனநாயகம் சாத்தியம் இல்லை.
Continue reading Ini Kalilah: தேர்தலுக்கு முன்பான இறுதி கேள்விகள்
ஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களின் நலன்களை பிஎன் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற சொல்லை எல்லா இந்தியர்களும் பரப்பத் தொடங்க வேண்டும் என்று கூறியது தொடங்கி சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் பெரும்பாலும் படித்தவர்கள். அவர்கள் தொணி இவ்வாறு இருந்தது.


