|
|

ஆத்மாநாமுக்கு அடுத்து என்னால் மிகத்தெளிவாக மீட்டுக் கொணர முடிபவை மனுஷ்ய புத்திரன் கவிதைகள்தான். குறைந்தபட்சம் அவரது இருபது கவிதைகள் தொட்டாவது என்னால் தொடர்ந்து உரையாட முடிந்திருக்கிறது. பலமுறை அவரிடம் பேசும்போதுகூட கூறுவதுண்டு, ‘எனக்கு உங்கள் மேல் நிறைய கோபம் உண்டு. அதனால் நான் உங்கள் கவிதைகளை வாசிக்க மறுக்கிறேன். அது என்னை உங்களின் அந்தரங்கமான ஒரு மனநிலையைப் புரியவைக்க முயல்கிறது. அதன் மூலம் உலகில் உள்ள அனைவரையும் நிரபராதிகள் போல காட்டுகிறது. அதை நான் விரும்புவதில்லை’.
Continue reading மனுஷ்ய புத்திரன் திருடிய மலேசியக் கவிதை!

தமிழக எழுத்தாளர்களில் நேரில் அதிக நெருக்கமாக நான் உரையாடியது ஜெயமோகன் மற்றும் மனுஷ்ய புத்திரனிடம்தான். இருவரும் மலேசியா வந்துள்ளனர். இருவருடனும் நெடும்பயணங்கள் செய்துள்ளேன். இருவருக்கும் உள்ள ஒற்றுமையாக நான் கருதுவது பிற படைப்பாளிகள் குறித்த அவர்களின் அக்கறை.
Continue reading ஜெயமோகன்; விஷ்ணுபுரம் விருது; எழுத்தாளனை போற்றுதல்
கட்டுரைக்குச் செல்லும் முன்:
இதை நான் விமர்சனமாக முன்வைக்க விரும்பவில்லை. மாறாக படைப்பாக நம்பப்படும் ஒன்றை அப்படியே மீண்டும் சுறுக்கி முன்வைக்கிறேன் எனலாம். ஓர் உணவகத்தில் நம்மைக் கவரும் உணவுகள் குறித்தும் அதன் பதம், சுவை, போதாமை குறித்து விவரிக்கலாம். ஆனால் உணவின் தோற்றத்தில் எவ்வித சுவையையும் வெளிப்படுத்தாத ஒன்றை விமர்சிப்பது கடினமானது. அதை மற்றவருக்கு ஒரு பிடி தருவதன் மூலமே அதன் பலவீனத்தை உணர்த்த முடிகிறது. ‘ராமனின் நிறங்கள்’ விசயத்தில் நான் செய்ய நினைப்பது அதைதான். இக்கட்டுரையில் சேர்க்கப்படாத ஒரு தகவலும் உண்டு. தனது முந்தைய எதிர்வினையில் கோ.மு அந்நாவல் காலச்சுவடு பதிப்பித்தது என கூறியிருந்த தகவல் தவறு. தமிழகத்தில் சில பதிப்பகங்கள் தரமான படைப்புகளை பதிப்பிக்க ஒரு பதிப்பகத்தையும் வணிகத்துக்காகப் பதிப்பிக்க ஒரு பதிப்பகத்தையும் வைத்துள்ளன. உயிர்மை, தமிழினி போல காலச்சுவடும் ‘சுவடி’ எனும் பதிப்பகத்தை நடத்திவருகிறது. அதில் யார் பணம் கொடுத்தாலும் நூல் வெளியாகும். அவ்வாறே இராமனின் நிறங்கள் பதிப்பிக்கப்பட்டது. மற்றபடி இது காலச்சுவடு பதிப்பு என அவர்கள் சொல்ல முன்வரமாட்டார்கள் என்பதே உண்மை.
Continue reading கோ. முனியாண்டி கொட்டிய குப்பை
 கருணாகரனுடன்
கோட்டையிலிருந்து மீண்டும் தங்கும் விடுதி நோக்கி நடந்தோம். கோட்டைக்கு அருகில் விற்ற கொண்டை கடலையைச் சூடுபறக்க அம்மதியம் சாப்பிட்டது இனிமையான அனுபவம். கடலையை நம்மூர் போல காகிதத்தில் சுற்றிதான் கொடுக்கிறார்கள். ஆனால் அக்காகிதம் மாணவர்களின் நோட்டு புத்தகத்தினுடையவை. பல்வேறு பதார்த்தங்கள் இவ்வாறு நோட்டு புத்தகத்தின் காகிதத்தில் மடித்தே கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் அவை முகம் தெரியாத ஒரு மாணவனை கொண்டுவந்து நிறுத்தியது. அனேகமான நேரங்களில் நான் ஒரு ஆசிரியர் மன நிலையில் இருப்பதில்லை, ஆனால் நோட்டு புத்தகங்களில் காணப்பட்ட மாணவர்களின் எழுத்துகளும் ஆசிரியரின் சிவப்பு மையும் அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று பார்க்கும் ஆவலைத் தூண்டியது.
Continue reading இலங்கையில் ஏழு நாட்கள்…6
 கோணேஸ் , கர்ணன், சேனாவுடன்
மதிய உணவுக்குத் தங்கும் விடுதி வந்ததும் ஒரு பிரச்சனை எழுந்தது. ஏ.பஹாருடின் சொல்லிச்சென்ற உணவுவகைகள் தயாரிக்கப்படாமல் வேறு வகையான உணவுகள் இருந்தன. ‘எனக்கு என் வாக்குதான் முக்கியம்’ எனக்கூறிய பஹாருடின் உடனடியாகத் தங்கும்விடுதியை மாற்றினார். எங்கள் பேருந்து யாழ் டில்கோ ஹோட்டலுக்குச் சென்றது. முன்னதைவிட அதிக வசதி கொண்ட பெரிய தங்கும்விடுதி. பேருந்திலிருந்து பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் போது கர்ணன் அழைத்தார். டில்கோ ஹாட்டலுக்கு வழி கேட்டார். நான் மலேசியாவிலேயே வழி சொல்ல திணறுபவன். என் சமத்தை அவரிடம் சொல்ல அவகாசம் இல்லாததால் என் நினைவில் இருந்த யாழ் பொதுஅஞ்சலகத்தைக் குறிப்பிட்டு அதன் பின்புறம் என்றேன். நான் பெட்டியை அறைக்கு ஏற்றிக்கொண்டிருந்தபோது யோ.கர்ணன் சக நண்பர்களுடன் வந்திருந்தார். சட்டென யோ.கர்ணன் முன்னமே பழக்கமானவராகத் தோன்றினார். தொலைபேசியிலும் முகநூலிலும் மட்டுமே பேசிய ஒருவர் அவ்வாறு தோன்றுவது ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு ஷோபா சக்தி அப்படித் தோன்றியுள்ளார். இலங்கையர்கள் முகம் அவ்வாறானதுதான் போல.
Continue reading இலங்கையில் ஏழு நாட்கள்…5
‘சோளகர் தொட்டி’ கு றித்து எழுத தடையாக வந்தமைவது எது என்ற கேள்வியை நான் இந்த வாக்கியத்தைத் தொடங்கும் போதும் கேட்டுப் பார்க்கிறேன். ஒருவேளை இந்நாவலை விவரிக்கத் தொடங்கும் போது உறுவி எடுக்க முடியாமல் விரவி கிடக்கும், அதன் அடர்த்தியான வாழ்வு ஒருவித தயக்கத்தைக் கொடுக்கலாமோ என்று தோன்றுகிறது. வெவ்வேறு சம்பவங்களைக் கொண்டிருக்கும் ஒரு பிரதியை விவரிக்க முனையும் போது சம்பவங்களைச் சொல்லி கதையை உணர்த்துதல் எளிது. ஆனால் ‘சோளகர் தொட்டி’ மானுட விரோதத்துக்கான எதிர்ப்புணர்வை வெவ்வேறு தொணியின் மூலம் அதன் ஆழம்வரை கொண்டு செல்ல முனைகிறது.
Continue reading சோளகர் தொட்டி : வதையும் வன்முறையும்
எல்லோருடைய லட்சியங்களையும் கேட்டப்பின்
நான் எதிர்காலத்தில்
ஒரு நோயாளியாக முடிவெடுத்தேன்
Continue reading லட்சியம்
மறுநாள் காலையிலேயே கிழம்பினோம். தங்கும் விடுதியில் பசியாறை. ஏ.பஹாருடின் அன்று இரண்டு கோயில்களுக்கு எங்களை அழைத்துப் போகப் போவதாகச் சொன்னார். ஒன்று நாக பூசனி அம்மன் கோயில் மற்றது ஒரு சிவன் கோயில். நயினா தீவில் இருக்கும் நாக பூசனி அம்மன் கோயிலுக்குச் சென்று திரும்பவே அரை நாள் பிடிக்கும் என்பதால் சிவன் கோயிலுக்குப் போகும் திட்டத்திலிருந்து நானும் மணிமொழியும் விலகிக் கொண்டோம். அன்று மதியத்துக்குப் பிறகு இலக்கிய நண்பர்களைச் சந்திக்கத் திட்டம்.
Continue reading இலங்கையில் ஏழு நாட்கள்…4

ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பே சிங்கப்பூரில் நடைப்பெறவிருக்கும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்த தகவல்கள் தெரியவந்தது. அதன் மையக்கருப்பொருள் ‘தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்’ என்று இருந்தது திருப்தி அளிக்கக்கூடியதாகவும் இருந்தது. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் தகவல், தொடர்பு, கலைகள் அமைச்சின் கீழுள்ள தேசிய கலைகள் மன்றத்தின் (National Arts Council) ஆதரவுடன் உலகத் தமிழ் எழுத்தாளர் விழாவை இவ்வாண்டு அக்டோபரில் நடத்துகிறது.
Continue reading உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு : பாலில் விழுந்த நஞ்சு
 அ.யேசுராசாவுடன்...
ஏசுராசா என்றவுடன் என் நினைவுகள் வேகமாகச் செயல்படத்தொடங்கின. இலங்கை – ஏசுராசா என மனதில் எழுந்த குறிப்புகள் அவர் எனக்கு ஏதோ ஒருவகையில் அறிமுகமாகியிருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. எனக்கு ஏசுராசாவைத் தெரியும். பெரிய சண்டைகாரர். யார் என்னவென்று பார்க்காமல் சண்டித்தனம் எல்லாம் செய்வார் என நினைவு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியது. கொஞ்ச நேரம் மௌனமாகி வங்கியருகே நின்றிருந்தபோதுதான் எனக்கு தெரிந்த ஏசுராசா யார் என நினைவுக்கு வந்தது. அவர் ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ நாவலில் வரும் ஏசுராசன். அந்த நாவலிலேயே இப்படி ஒரு வரி வரும். ‘குஞ்சன் வயலில் ஊருப்பட்ட ஏசுராசன்கள் இருந்தபடியால் அவர்கள் வில்லங்கம் ஏசுராசன், காற்றாற்ற ஏசுராசன், நான்தான் ஏசுராசன் என அழைக்கப்பட்டனர்’
Continue reading இலங்கையில் ஏழு நாட்கள்…3
|
பதிவுகளை மின்னஞ்சலில் பெற
|