லீகாட் நாவலை வாசித்தேன். விடலைப் பருவத்தில் நான் கண்ட பல்வேறு முகங்களை மீண்டும் ஒருமுறை கண்முன்னே இந்நாவல் நிழலாட வைத்துச் சென்றது என்றுதான் சொல்ல வேண்டும். நாவலின் கதைப்போக்கை ஒவ்வொரு கதைப்பாத்திரத்தின் வழி உற்றுநோக்கி அலசினேன். அதனை அனுபவத்தோடு ஒத்திசைத்துப் பார்க்கும் வேளையில் புரிதல்கள் ஆழப்பட்டன.
உணர்வின் அசைவுகளை அதன் இயக்கத்தால் மனிதன் தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் விதங்களை அதன் எல்லையற்ற பெருவெளியைப் படம் பிடித்துக் காட்டும் விதமாக இந்நாவல் எழுதப்பட்டிருப்பதைக் கண்டறிய முடிந்தது. லீகாட் நாவல் குறிப்பாக விடலைப் பருவ மானிடரின் உணர்வு நிலையில்லாமையைத் திரையிடுகிறது. குறிப்பாக மனதின் ஆழத்தில் ஒடுங்கிக்கிடக்கும் காமம் எனும் பெருவுணர்வு தூண்டியெழுப்படும்போது அதன் வீரியம் எப்படியெல்லாம் ஒருவனை ஆட்டுவித்து வதைத்திடுகிறது; அவ்வுணர்வு தணிக்கப்பட்ட வேளையில் அவன் என்னவாகிறான் என்பதை விவரித்துக் காட்டும் கதைக்களத்தை மையமிட்டு இந்நாவல் எழுதப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
Continue reading









