
மஹாத்மன் இறந்துவிட்டார்.
அவர் இறந்து மூன்று வாரங்கள் ஆகின்றன என சற்று முன்னர்தான் தெரிய வந்தது. அவர் இறந்ததை அவர் மனைவியும் அண்ணனுமே இன்றுதான் தெரிந்துகொண்டனர் என்பது மேலும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த மஹாத்மனை மூன்று வாரங்களாக அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் பார்க்க வரவில்லை எனும் உண்மை சங்கடத்தை அளித்தது. நெஞ்சு வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் வழியிலேயே இறந்துள்ளார். இறுதி காரியங்கள் மருத்துவமனையிலேயே செய்துமுடிக்கப்பட்டு இஸ்லாமிய முறைபடி அடக்கம் செய்யப்பட்டார் எனக்கூறப்பட்டது.
Continue reading