நேற்று (15.1.2025) தமிழாசியா சந்திப்பில் நூறாவது சிறுகதை குறித்து பேசி முடித்தோம். தமிழாசியா சந்திப்பு என்பது மாதத்தில் ஒருமுறை நடைபெறும் இலக்கியச் சந்திப்பு. ஒவ்வொரு சந்திப்பிற்கு முன்னும் நான்கு சிறுகதைகள் வழங்கப்படும். அந்தக் கதைகளை ஒட்டி நால்வர் தயார் செய்து வந்த உரையைப் பேசுவார்கள். அவர்கள் உரையை ஒட்டி உரையாடல் இடம்பெறும். இவ்வாறு 2023 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட சந்திப்பு 2025 ஆண்டு நவம்பர் மாதம் நூறு சிறுகதைகளை எட்டியுள்ளது.
Continue readingமாச்சாய் – ஒரு பார்வை
‘ஜகாட்’ வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குநர் சஞ்சை படைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாச்சாய்’. ‘ஜகாட்’ திரைப்படத்தில் வரும் சிறுவன், இளைஞனானப்பின் தேர்வு செய்யும் பாதை இருள் நிரம்பியதாக இருந்தால் அந்தப் பயணம் எவ்வாறு அமையும் எனும் அடிப்படையில் ‘மாச்சாய்’ இயக்கப்பட்டதாகப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், அதற்கான முகாந்திரம் இப்படத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். எனவே, இப்படத்தில் வரும் சியாம் தனி கதாபாத்திரம். அவன் வாழ்க்கையின் சிக்கல்களும் முற்றிலும் வேறானவை.
Continue readingஉரை: மலேசியாவில் சமகால நவீன கவிதை
அனைவருக்கும் வணக்கம்,
2025ஆம் ஆண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில், சமகால கவிதை குறித்த இந்த அமர்வில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இதன் ஏற்பாட்டாளர் ஆயிலிஷா, கடந்த 25 ஆண்டு காலமாக மலேசியத் தமிழ்க் கவிதை சூழலில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து பேசும்படி கேட்டுக்கொண்டார். மலேசிய நவீன கவிதை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் 2006இல் நடைபெற்றது. இந்த மாற்றத்தை அறிய, அதற்கு முன்னர் மலேசியக் கவிதை உலகில் என்ன நிகழ்ந்தது என்பதை ஒரு குறுக்குவெட்டாகவேணும் அறியத்தருவது அவசியம் எனக் கருதுகிறேன். அது பலருக்கும் சில தெளிவுகளை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
Continue readingகுருதிவழி நாவல்: என் உரை
எனது பத்தாவது வயது வரை நான் லூனாஸில் உள்ள கம்போங் லாமா எனும் பகுதியில் வசித்து வந்தேன். அங்கு எப்போதாவது ஒருதடவை மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்ட சீனக் கிழவி ஒருத்தியின் வருகை நிகழ்வதுண்டு. அவளை நாங்கள் கீலா கிழவி எனக்கிண்டல் செய்வோம். அவளால்தான் முன்னர் லூனாஸ் தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவள் என. என் பாட்டி சொல்வார். 1981ஆம் ஆண்டு பலரும் இறக்கக் காரணமாக இருந்த விஷச்சாராயம் அவளால் காய்ச்சப்பட்டதுதான் என்பாள் ஆங்காரமாக. அந்த மரணச் சம்பவங்களுக்கு பின், ஊரைவிட்டு ஓடிப்போன அவள் பைத்தியக்கார கிழவியாகத்தான் திரும்பி வந்து சேர்ந்திருந்தாள். அரைநிர்வாணமாகத் திரியும் அவளை எங்கள் கம்பத்து பெரியவர்கள் கல்லால் அடித்து விரட்டுவார்கள். ஒவ்வொருமுறையும் அவள் அடிபடுவதற்கென்றே வந்து போவதுபோல இருக்கும்.
Continue readingவிருது; அரசியல்வாதிகள்; நூல் வெளியீடுகள்; சில சர்ச்சைகள்
‘வல்லினம் விருது: சில தெளிவுகள் சில விளக்கங்கள்’ கட்டுரைக்கு எதிர்வினைகள் வரும் என நான் எதிர்ப்பார்த்ததுதான். மின்னஞ்சலிலும் புலனத்திலும் சிலர் கேள்விகளைக் கருத்துகளாக முன்வைத்தனர். சிலர் கேள்விகளில் கருத்துகள் மட்டுமே இருந்தன. சிலர் தான் கூறுவது எதிர்வினை இல்லை என்றும் அது தனது தனிப்பட்ட கருத்து என்றும் குறிப்பிட்டிருந்தனர். ஓர் உரையாடலில் தனிப்பட்ட கருத்தென ஒன்றில்லை. அது ஒரு கூட்டுமனதின் வெளிபாடுதான். சில வழக்கமான வசைகள். அதிக பட்சமாக தங்களுக்குத் தெரிந்த கொச்சை சொற்களைப் பயன்படுத்தியிருந்தனர். அவர்கள் கொஞ்சம் முதிர்ச்சி அடையும்போது நான் சொல்லும் கருத்தின் பொருளை உணரக்கூடும். இல்லாதுபோனாலும் ஒன்றும் குறைவில்லை. நான் உருவாக்க விரும்புவது உரையாடல்களை, அதன் வழியாக சிந்திக்கும் மனிதர்களை.
Continue readingவல்லினம் விருது: சில தெளிவுகள் சில விளக்கங்கள்
டிசம்பர் 21 வல்லினம் விருது விழா. இம்முறை பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வல்லினம் விருது வழங்கப்படுவதை பலரும் அறிந்திருக்கலாம். இதுவரை அ. ரெங்கசாமி, சை. பீர்முகம்மது, மா. ஜானகிராமன் எனச் சிலர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். விருது தொகையாக ஐயாயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது. ஆனால் இவ்விருது, அதன் விருது தொகையால் முக்கியத்துவம் பெறவில்லை. நாளையே யாராவது ஒருவர் புதிய விருது ஒன்றை உருவாக்கி, இதைவிட பெருந்தொகையை வழங்கினால் அதனால் மட்டுமே அவ்விருது சிறப்பு அடைந்துவிடப்போவதில்லை.
Continue readingக. நா. சு உரையாடல் அரங்கு

நாளை க. நா. சு உரையாடல் அரங்கில் பங்கெடுக்கிறேன். க. நா. சு உரையாடல் அரங்கு என்பது கோவிட் பெருந்தொற்று முடியும் காலத்தில் உருவாக்கப்பட்ட உரையாடலுக்கான தளம். அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஆஸ்டின் சௌந்தரராஜன் அவர்களின் முன்னெடுப்பில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட ஆதரவுடன் கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளாக இயங்கிவருகிறது.
Continue readingபறந்து போகலாம்

பெற்றோரின் வேலைச் சூழலால், வீட்டில் நாள் முழுவதும் பூட்டி வைக்கப்படும் அன்பு எனும் சிறுவன், தன்னைச் சாமர்த்தியமாக வீட்டிலிருந்து விடுவித்துக்கொண்டதோடு தன் பெற்றோருக்கும் இறக்கைகள் உள்ளன என நினைவுறுத்தி அவர்களையும் பறக்க வைக்கும் படம் ‘பறந்து போ’.
Continue readingமுத்து நெடுமாறன்: எழுத்துகளை அடுக்கி விளையாடும் சிறுவன்

தமிழ் எழுத்துகளைக் கணினியில் உபயோகிக்கும் அனைவருமே அறிந்த சொல் ‘முரசு’. முரசு அஞ்சல் மென்பொருள் பல்வேறு புதிய கூறுகளுடன் மேம்படுத்தப்பட்டு ஜூன் 27 ஆம் திகதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிஏசி (Brickfields Asia College) மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு வெளியீடு காண்கிறது. இந்நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்த அம்சம் ‘உரு’ எனும் நூலின் வெளியீடு. முத்து நெடுமாறனின் வாழ்வைச் சொல்லும் நூல். கோகிலாவின் எழுத்தில் வெளிவருகிறது.
Continue readingஅறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 4

1999இல் பாலச்சந்திரன் அவர்களால் தமிழில் இருந்து மலாய்க்கு மொழியாக்கம் கண்ட ‘Seruling Di Persimpangan’ எனும் தொகுப்பு குறிப்பிடத்தக்க முயற்சி என்றாலும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் எனச் சொல்ல மாட்டேன். கோ. புண்ணியவான், பாவை, மு. அன்புச்செல்வன் போன்றவர்களின் சிறுகதைகள் அதில் இடம்பெற்றிருந்தாலும் சிறுகதைகளின் அடிப்படை கூட அறியாதவர்களின் கதைகளும் அதில் இடம்பெற்றிருக்கின்றன. இக்கதைகள் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பேரவைக் கதைகள்’ தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. ‘டேவான் பாஹாசா’ வெளியிட்டுள்ளது.
Continue reading





