எனக்காக வழங்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தபோது அங்கும் என் பெயர் ஓர் அட்டையில் அதே பிழையுடன் எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். ஒரு வேளை ‘வீ’ எனும் நெடில் எழுத்தை ‘W’ போட்டுதான் சமன் செய்ய முடியுமோ என்னவோ. தூக்கம் இன்னும் கண்களில் இருந்தது. பொறுமையாக அரங்கைப் பார்த்தேன்.
முதல்நாளில் இருந்து நான் கண்ட பதாகைகள், அறிவிப்புகள், கொடிகள் எனத் தொடங்கி இன்றைய அரங்கின் மின்திரை வரை கருநீலம் மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் மட்டுமே அனைத்தும் இருப்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் எங்குமே சீனாவை ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளங்கள்
இல்லை. எந்தத் தலைவர்களின் படங்களும் இல்லை. இந்தக் கருத்தரங்கை அரசாங்கம் ஏற்று நடத்தினாலும்
எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை.
Continue reading →