சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 6

காலை 9.00 மணிக்குத் தொடங்கிய கருத்தரங்கின் அறிமுக உரைகளும் சிறப்புரைகளும் காலை 11.30க்குள் நிறைவு பெற்றன. மூன்றரை மணி நேரமும் அந்தப் பெண்கள் அங்கேயே நின்றுக்கொண்டிருந்துவிட்டு சிரித்த முகத்துடன் அனைவரும் அரங்கை விட்டு வெளியேறும் வரை காத்திருந்தனர்.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 5

எனக்காக வழங்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தபோது அங்கும் என் பெயர் ஓர் அட்டையில் அதே பிழையுடன் எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். ஒரு வேளை ‘வீ’ எனும் நெடில் எழுத்தை ‘W’ போட்டுதான் சமன் செய்ய முடியுமோ என்னவோ. தூக்கம் இன்னும் கண்களில் இருந்தது. பொறுமையாக அரங்கைப் பார்த்தேன்.

முதல்நாளில் இருந்து நான் கண்ட பதாகைகள், அறிவிப்புகள், கொடிகள் எனத் தொடங்கி இன்றைய அரங்கின் மின்திரை வரை கருநீலம் மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் மட்டுமே அனைத்தும் இருப்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் எங்குமே சீனாவை ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளங்கள் இல்லை. எந்தத் தலைவர்களின் படங்களும் இல்லை. இந்தக் கருத்தரங்கை அரசாங்கம் ஏற்று நடத்தினாலும் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 4

கண் விழித்தபோது பொன்னுருண்டை கையில் இல்லை. எரிந்துகொண்டிருந்த விளக்கொளி சூரிய வெளிச்சத்தில் அமிழ்ந்துவிட்டன. நல்லவேளையாக நேற்று இரவு பால்கனியின் திரைசீலையைத் திறந்துவிட்டதால் விடிந்துவிட்டது தெரிந்தது. அலாரம் வைத்திருக்கவில்லை. களைப்பில் அப்படியே தூங்கிவிட்டது மூளைக்கு உரைத்தபோது துள்ளிக்குதித்து எழுந்தேன்.

கைப்பேசியைத் தேடி மணியைப் பார்த்தேன். காலை 7.15. அதிர்ச்சியடையக் கூட அவகாசம் இல்லை. 7.45க்குப் பயணத்திற்குத் தயாராக இருக்க வேண்டும். பரபரப்பாகக் கிளம்பினேன். எனக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். அவசரமாக எதைச் செய்தாலும் கோளாறாகிவிடும். ஆனால் இப்போது அவசரமன்றி வேறு வழியில்லை. பல் துலக்கிக்கொண்டே எதையும் தவற விட்டுவிடக்கூடாது என மனதிலேயே கணக்கிட்டுக்கொண்டேன். நேற்று கருத்தரங்கு குழுவைச் சேர்ந்தவர் அந்தச் சிகப்பு நிற அட்டையை அவசியம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்றது மட்டும் நினைவில் இருந்தது.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 3

அறையை நோக்கி நடக்கவே அரைநாள் பிடிக்கும்போலத் தோன்றியது. விடுதியின் வரவேற்பறை திடல்போல விரிந்து கிடந்தது. பல இடங்களில் ‘லியாங்சூ கருத்தரங்கின்’ (Liangzhu Forum) அடையாளங்களைப் பார்க்க முடிந்தது. அக்கருத்தரங்கை ஜெஜியாங் பல்கலைக்கழகம் (Zhejiang University) முன்னெடுப்பதால் அப்பல்கலைக்கழக மாணவிகள் ஆங்காங்கு நின்றுக்கொண்டு “தோ இப்படிக்கா போ!” என வழிகாட்டினர். சீன யுவதிகளைப் பார்க்க பொம்மைபோல இருந்தனர். எவ்வளவு நேரமாக அப்படி நிற்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் முகத்தில் சோர்வைக்காட்டாமல் சிரித்து வைத்தனர்.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 2

இருளைச் சாம்பல் நிறமாகக் காட்டும் பனிப்படலத்தைக் கிழித்தபடி எங்கள் கார் சென்றுகொண்டிருந்தது. நான் சீனர்களுடன் கலந்திருந்த என் பாலியப் பருவம் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன்.

நான் பதினேழு வயது வரை சீனக்கம்பத்தில்தான் வாழ்ந்து வந்தேன். பெரும்பாலும் சீனர்களின் பண்டிகைகளை அவர்களுடன் இணைந்தே கொண்டாடியுள்ளேன். சீனர்களின் உணவுகளே எனக்குப் பிடித்தமானவையாகவும் இருந்துள்ளன. எப்போதுமே சீனர்கள் சூழவே என் இளமை பருவம்  கழிந்துள்ளது.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 1

“ஏழு மணி நேரம் விமானத்தில் பயணிக்கணுமாக்கும்,” எனச் சீனப்பயணம் குறித்து கேட்பவரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். விமானம் ஏறியவுடன்தான் ஐந்து மணி நேரப்பயணம் என்பதே உரைத்தது. இடையில் என் மூளைக்குள் ஏழு மணி நேரம் என யார் புகுத்தினார்கள் என்பது குறித்து அதிகம் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. நானே எனக்கு அப்படி ஒரு சூனியத்தை வைத்துக்கொள்வது வழக்கம்.

Continue reading

சீனப் பயணம்

இன்று சீனாவுக்குப் புறப்படுகிறேன்.

சீனாவின் கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சும் ஜெஜியாங் மாநிலமும் இணைந்து லியான்ஸு கலாசார கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. அக்கருத்தரங்கில் கலந்துகொள்ள சீன அரசாங்கத்தின் அதிகாரத்துவ அழைப்பில், மலேசியாவிலிருந்து புறப்படும் இலக்கியக்குழுவில் நானும் இடம்பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Continue reading

பசுபதியும் கபாலியும்

இன்று (18.11.2024) வழக்கறிஞர் பசுபதி அவர்களின் பிறந்தநாள். பொதுவாக அவர் பிறந்தநாளின் போது அவர் குறித்த சில எண்ணங்களை எழுதுவது வழக்கம். வரலாற்று நாயகர்களை சமூகத்திற்கு நினைவூட்டுவது எழுத்தாளனின் கடமைதானே.

அப்படி ஒரு சம்பவத்தை நினைவுகூறலாம் என நினைக்கிறேன்.

Continue reading

வீட்டு நாய்களாகும் வீதி நாய்கள்

சில மாதங்களுக்கு முன் நண்பர்கள் வழியாகக் கைவிடப்பட்ட விலங்குகளின் நலன் மற்றும் பாதுகாப்புக் கழகம் (Persatuan Penyelamat dan Kebajikan Haiwan Terbiar) குறித்துக் கேள்விப்பட்டிருந்தேன். முதலில் அது என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

முதலாவது, இதுபோன்ற கழகங்கள் திடீரென முளைப்பது மனிதர்களின் கருணையைக் காசாக்குவதற்கு என்ற எண்ணம் எனக்குண்டு. தோற்றுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே விலங்குகளின் பரிதாப நிலையை காணொளியாகக் காட்டி, சமூக ஊடகங்களில் வசூல் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

Continue reading

உரை: பாரதி

(செப்டம்பர் 15, 2024இல் சுங்கை கோப் பிரம்மவித்யாரணத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் ஆற்றிய உரையின் முழு வடிவம்)

அனைவருக்கும் வணக்கம்,

சில ஆண்டுகளுக்கு முன்னர், நண்பர் ஒருவருடன் காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது எதிரில் இருந்த காரின் கண்ணாடியில் ‘தமிழன் என்று சொல்லடா’ எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த வாசகத்துடன் பாரதியாரின் முறுக்கிய மீசையும் கொதிக்கும் கண்களும் கொண்ட படம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.

Continue reading