
படைப்பிலக்கிய வடிவங்களில் நாவல் வாசிப்பது நல்ல அனுபவம். சிறுகதைகள் போலல்லாமல் வாசகனைத் தொடர்ச்சியாக சிலபல நாட்களுக்கு தன்னுடன் பயணம் செய்யவைத்து அதன் தட்ப வெப்பச் சூழலோடு நம்மையும் பிணைத்து பரவசமூட்டக்கூடிய இலக்கியப் புனைவு நாவல். அதிலும் வாசகன் அறியா ஒரு கதைக்களத்தையும், கதை மனிதர்களையும், நில அமைப்பையும் அறிமுகம் செய்து அவனுக்குள் புதிய அனுபவத்தை ஏற்றி அறிவார்ந்த சூழலுக்குள்ளேயே அவனை வைத்துக்கொள்வது நாவல் எழுத்தின் பயனாகும். நாவல் நெடுக புனைவுத்தர்க்க எல்லைக்குள் இயங்கவைத்து, வாசித்து முடித்த பின்னரும் அதன் இயங்கு விசையை வாசகனிடம் கடத்தி பாதிப்படையச் செய்யும் நாவல் சிறந்த படைபென்பேன். ‘தாரா’ அதனை செவ்வனே செய்திருக்கிறாள்.
Continue reading