Author: சுசித்ரா

மேலங்கி

மலைகளின் சிங்கம் என்று அறியப்பட்ட மூத்த சிற்பியான லியோனிடாஸ் அல்லோரி ராஜதுரோக குற்றச்சாட்டின் பெயரால் கைதுசெய்யப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது அவருடைய மாணவர்கள் கலங்கிப்போய் அழுது ஓலமிட்டார்கள். அவர்களுக்கு அவர் ஞானத்தந்தை. தேவதூதர். காலத்தை வென்ற அமரத்துவர். ஊருக்கு வெளியே பியெரினோவின் விடுதியில் சிலரும் கலைக்கூடங்களில் சிலரும் வீட்டுப்பரன்களில் சிலரும் என்று மறைவான இடங்களாக பார்த்து…

வலசைப்பறவைக்குத் திசைகள் கிடையாது

செந்நிறமாக எங்களைச்சுற்றி ஒளி விழுந்துக்கொண்டிருந்தது. செந்நிறமான மண். வானெங்கும் கோடுகோடாக செந்தீற்றல்கள். கடல் தீயாக அலைகொண்டிருந்தது. ஆலிஸின் கண்ணை என் மீது உணர்ந்தேன். அவள் முகமும் தீக்கொண்டதுபோல் சிவந்திருந்தது. கன்னங்கள் பழுத்திருந்தன. தோளில் பருக்கள் நட்சத்திரக்கோவையாக நடனமிட்டன. அவள் என் பக்கமாக திரும்பிப் புன்னகைத்தாள். “மின், இந்த ஒளியில் ஒரு நொடிக்கு, நீ உன் அப்பாவைப்போலவே…