கடிதங்கள் (அற்புதம்)

அற்புதம் என்றே தலைப்பு வைத்துவிட்டதால், வேறு எதுவும் சொல்லமுடியாது 😁 புனைவு எழுத்தாளரை அமெரிக்கா அழைத்துவந்தால் இப்படித்தான் நம்மையே பாத்திரங்களாக மாற்றி அழகு பார்ப்பார்கள் போலும். மானுடத்தின் சிறப்பைச் சொல்லும் இக்கதை அற்புதம்!

சௌந்தர், ஆஸ்டின்

Continue reading

கடிதங்கள் (கொயோட்டி)

கொயோட்டி கதை அருமை. நாங்கள் வசித்த குடியிருப்புப் பகுதியில் ஸ்கங்க் மற்றும் ரக்கூன் நடமாட்டம் எப்போதும் உண்டு. வீட்டின் அருகே இருந்த மலையின் பெயரே கொயோட்டே ஹில்ஸ் தான். அடுத்தவர் பசிக்கு உணவிட்ட பழகிய தாய் மனதிற்கு அமெரிக்க வாழ்க்கை ஒரு பெரும் தடைச்சுவரென எழுந்து நிற்பதும், அதை மீறி கொயோடேவிற்கும் உணவிட்டு அன்னையென எழுந்து நிற்பதும் நெகிழ வைக்கிறது.

சாரதா

Continue reading

சிறுகதை: கொயோட்டி

சான் ஓசே நகருக்குள் அம்மா வலது காலை எடுத்து வைத்தது முதலே மாலதியின் முணுமுணுப்புத் தொடங்கிவிட்டது. மூன்றாவது நாள், அது முழு வாக்கியமாக உருகொண்டது.

“அவ்ளோ பாசம் இருந்தா ஒரு மாசம் லீவு போட்டுட்டு ஒங்க அம்மாவுக்கு பாதுகாப்பா  சென்னைக்கே போக வேண்டியதுதான,” என்றாள். அவள் தொலைவாகச் சென்றபிறகு ‘லீவு கெடைச்சா போவ மாட்டனா’ என எனக்குள் கூறி ஆறுதல் தேடிக்கொண்டேன்.

Continue reading

சிறுகதை: அற்புதம்

மூன்றாவது அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி கெய்லா குறித்து விசாரித்தபோது கால்களில் தளர்விருந்தது. அவள் ஐந்தாவது மாடியில்தான் வசிக்கிறாள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். காற்றில் குளிர் அதிகரித்திருந்ததால் கைகளை குளிராடை பாக்கெட்டில் விட்டுக்கொண்டேன். நெடுநேரமாக நான் அவளைத் தேடி வந்த காரணத்தை ஒரு வயதான மூதாட்டியிடம் விளக்க முயன்றுக்கொண்டிருந்தேன். அவளுக்குக் காது மந்தம் என அறிந்தபோது கொஞ்சம் சத்தமாகப் பேச வேண்டியிருந்தது. என் குரல் கேட்டு உள்ளே இருந்து என்னை வினோதமாகப் பார்த்த கண்களுக்குரியவன் வாட்டச்சாட்டமான இளைஞன் எனத் தெரிந்தபோது அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றேன். சொல்லப்போனால் முயற்சியிலிருந்து விடுபட்டு ஆஸ்டினை விட்டே புறப்பட்டுவிட தீர்மானித்தேன்.

Continue reading

அஞ்சலி: சீ. முத்துசாமி வேண்டிய தனிமை

சீ. முத்துசாமி எனும் எழுத்தாளரை நான் முதன்முறையாக சந்தித்தது 2005இல் நடைபெற்ற ஆஸ்ட்ரோ நாவல் போட்டியின் பரிசளிப்பு விழாவில்தான். அவர் எழுதிய ‘மண்புழுக்கள்’ நாவலுக்கு முதல் பரிசும் நான் எழுதிய ‘ஞானத்தின் வாசலிலே’ எனும் நாவலுக்கு இரண்டாவது பரிசும் கிடைத்தது அந்தப் போட்டியில்தான். பரிசளிப்புக்கு முன்பே தனியாக நின்றுக்கொண்டிருந்த அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். எவ்வித ஆர்வமும் இல்லாமல் பேசினார். பதில்கள் எல்லாம் ஏசுவதுபோலவே வெடுக்கென இருந்தன. அப்போது என்னை இலக்கியச் சூழலில் பலருக்கும் தெரியாது. நான் ‘நயனம்’, ‘மன்னன்’ போன்ற வெகுசன இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன். எனக்கென தனி வாசகர் பட்டாளம் இருந்தது. முத்துசாமி அந்த வெகுசன இலக்கியச் சூழலுக்கு அந்நியமானவர். வெகுசன இதழ்களில் எழுதுவோரைப் பொருட்டாகக் கருதாதவர்.

Continue reading

Sikandi Reading Experience – The magnificence of motherhood (Vasanth)

Dear Ma Naveen,

Myself Vasanth from Cuddalore. I completed reading Sikandi last night. I thought I could write about my reading experience.

My personal favourite is Leo Tolstoy, and Jeyamohan. I have almost read all fictional works of Je including Venmurasu. So, during this letter let me share how Sikandi impacted me relative to my favourite author’s works.

Continue reading

இன்பத்திரள்கள் அனைத்துமே நான்

நண்பர்கள் அறிந்ததுதான், புத்தாண்டுதான் நான் கொண்டாடும் முதன்மையான தினம். எனக்குத் தமிழ்ப் புத்தாண்டு இந்துப் புத்தாண்டு என எதுவும் இல்லை. அதனால் அது குறித்த குழப்பங்களும் இல்லை. பிற பண்டிகைகளும் அப்படித்தான். தீபாவளி, பொங்கலுக்கு விடுப்புக் கிடைப்பதால் அந்நாட்களைக் குடும்பத்துடன் கழிக்கிறேன். சுவையாகச் சமைத்து வைத்தால் சாப்பிடுகிறேன். என்னைச் சுற்றி உள்ளவர்களின் மகிழ்ச்சிக்காக என்னை அச்சூழலுக்கு ஏற்ப ஓரிரு நாட்கள் மாற்றி வைத்துக்கொள்கிறேன். மற்றபடி ஒரு வருடத்தில் நாள் முழுவதும் பண்டிகை எனும் குதூகலத்தில் இருப்பது வருடத்தின் முதல் தினத்தில் மட்டும்தான்.

Continue reading

ஆசிரியர் மாணவன் மற்றும் பலன்கள்

மகனும் மாணவர்களும் – ஜெயமோகன்

https://www.jeyamohan.in/226215

நவீன் அவர்களே, பலே! ஜெயமோகனால் நீங்கள் நிறைய பலன் அடைகிறீர்கள் போலவே. உங்கள் முயற்சிகளெல்லாம் அவரை ஆசிரியராக கொண்டதால் அடையும் பலன்களாகிவிட்டன. இன்னும் நீங்கள் புகழை அடைவீர்கள். வாழ்த்துகள்.

கர்ணா

Continue reading

ஆகவே செயல் புரிக!

விஜயலட்சுமி

அண்ணே வணக்கம். சற்று முன்னர் முகநூலில் அண்ணன் எழுதிய பதிவை வாசித்தேன். எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் கோபப்படமாட்டீர்கள் என நம்புகிறேன். நமது தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காப்பாற்ற போராடும் சிலரை மனமுவந்து பாராட்டும் தாங்கள், ஏன் __________ போன்ற சிலரை ஏசுகிறீர்கள்? அவர்களும் தமிழ் வளரவும் செழித்தோங்கவும்தானே பாடுபடுகிறார்கள். ஏன் இந்த பாராபட்சம்? உங்கள் விமர்சனத்தால் ____________ போல சில மனமுடைய வாய்ப்புண்டு. அவர்கள் செயல்படாவிட்டாலும் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் இழப்புதானே. நான் ஏற்கனவே கேட்ட கேள்விக்கு தாங்கள் பதில் சொல்லவில்லை. வாய்ப்பிருந்தால் சொல்லவும். என் புலன எண்ணுக்கும் __________ அனுப்பலாம்.

குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

Continue reading

பசுபதி சிதம்பரம்: நம் காலத்தின் மகத்தான மனிதர்

இன்று வழக்கறிஞர் பசுபதி அவர்களுக்குப் பிறந்தநாள். பொதுவாக என் ஆசிரியர்களாகக் கருதக்கூடியவர்களை நான் ஒவ்வொருநாளும் நினைப்பதுண்டு. என் பேச்சில் அவர்கள் பெயர் இயல்பாக வந்துவிழும். இலக்கியப் பேச்சுகளில் ஜெயமோகன் பெயரை உச்சரிக்காத ஒரு நாள் இருந்ததில்லை. இலக்கியம் குறித்து பேசாமல் ஒரு நாள் கடந்ததும் இல்லை.

Continue reading