விமர்சனம்

விமர்சனம் ஏன் தேவையாகிறது: பொன்.கோகிலத்தின் ‘அகிலம் நீ’ நூலை முன்வைத்து

ஒரு புனைவிலக்கியம் குறித்து விமர்சனம் எழுத பல காரணங்கள் உள்ளன. படைப்பின் நுண்தளத்தைச் சுட்டிக்காட்டி அதன் வழி அப்படைப்பைப் பொது வாசகர்கள் மேலும் தீவிரமாக அறியும் வழிகளை உருவாக்குவது; அதிகரித்து வரும் நூல் பிரசுரங்களுக்கு மத்தியில் மேம்பட்ட படைப்புகளை அடையாளம் காட்டுவது; தத்துவம், வரலாறு என ஒரு படைப்பில் தொய்ந்துள்ள பிற அறிவுசார் தகவல்களை உரையாடல்களாக மாற்றுவது; மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என கோட்பாட்டு ரீதியில் ஒரு படைப்பை அணுகிப் பார்ப்பது என அவற்றில் சிலவற்றைச் சொல்லலாம். இப்படி ஒரு பொருட்படுத்தத் தகுந்த படைப்பை வாசித்து அது குறித்த மனப்பதிவை எழுதும்போது அப்புனைவில் உள்ள எதிர்மறைகளையும் சுட்டுவது விமர்சனத்தின் இயல்புதான்.

Continue reading