
“டாக்டர்! நா திரும்ப அத பாத்தேன்… ரொம்ப கிட்டத்துல” அகிலின் கைகள் உதறின. வார்த்தைகளை வெளிவிடாதபடி ஏதோவொன்று தடுத்தது. அறையுள் நுழையும்போதே ஒருவித பதற்றத்தோடிருந்தான். ‘நான் உடனே தங்களைச் சந்தித்தாக வேண்டும்’ என்று அவன் குறுஞ்செய்தி அனுப்பியபோதே மருத்துவர் குணாவிற்கு ஏதோ அவனை உறுத்துவது விளங்கியது. அவனை நாற்காலியில் அமரச் செய்து குடிக்க தண்ணீர் கொடுத்தார்.…