Author: பாரதி மூர்த்தியப்பன்

தனியனின் பெருவெளி

புராதனக் கோயில் விமானத்தில்பன்னெடுங்காலமாய் ஒட்டிக்குந்தி வெளிறிய புறாஏனென்றே தெரியாமல்பறந்து செல்ல முனைந்தது.எண்ணற்ற மின்னல்களைஇடிகளை பொழியும் தாரைகளைஓயாமல் உரசும் காலத்தைதாண்டிவந்தபோது இல்லாதஅவசரம் இன்று ஏனோ.கணக்கற்றதூதுப் புறாக்கள்பந்தயப் புறாக்கள்காதல் புறாக்கள்பறந்து கடந்த வானம்மேகத் துணுக்கும் இன்றிவெறிச்சிட்டு இருந்ததுவோகோபுரத்தை நீங்காதுஅழுத்தி வைத்த விசையேதான்மண்ணை நோக்கிஈர்த்ததுவோ,கீழ் நோக்கி உடல்இழுபடும் அதே வேகத்தில்உயரத் துடித்த ஆன்மாவின்உந்துதலோகாலங்காலமாய் ஒடுங்கிவிரிய மறுத்த இறக்கைகளைமீறிமேல்நோக்கி எழும்பிஅல்லாடி அல்லாடிமெல்ல…