
பள்ளியின் வாசல் திறந்தவுடன் மாணவர்கள் ஈசல் கூட்டம்போல ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும் முந்திக்கொண்டும் அரக்கப் பரக்க வெளியே விரைந்தனர். கட்டொழுங்கோடு வரிசையாகப் புறப்படாமல், முடிச்சுக்களிலிருந்து அவிழ்த்துக்கொண்டது போன்று சிதறிக்கொண்டும் திட்டுத் திட்டாகவும், கூட்டமாய்ப் பேசிக்கொண்டும் கலைந்தும் மாணவர்கள் இரவு உணவுக்காக விரைந்துகொண்டிருந்தனர். மாலை வேளை. லா பிளாஞ்ச்சோட் அந்த ஊருக்குப் புதிதாய்க் குடியேறி இருக்கிறாள் என்பதை…

