Author: கெளதம் நாராயணன்

நச்சுப்புன்னகை

விழித்ததிலிருந்து வரிசைக் கிரமம் குலையாமல் அனைத்தும் நடந்திருந்தபோதிலும் அவற்றின் கூட்டுத்தொகையென எஞ்சிய உணர்வில் புதுமை சாயம் அப்பிக்கிடப்பதை உணர்ந்தான் முருகேசன். எதிர்புறம் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு மீண்டும் சாலையைப் பார்த்தபோது என்றைக்கும் இல்லாத அளவிற்கு எழில் நாடி மேய்ந்தன விழிகள். கதகதப்பூட்டும் வண்ணங்களையும், பரபரத்தோடும் மக்களிடம் வெளிப்பட்ட உயிர்ப்பையும் கவனித்தபோது புறங்கழுத்தில் துவங்கி அடிமுதுகுவரை…

கூத்தன் மலை

1 மலைச்சரிவில் ஒரு மின்மினி பேருவகையும் பெருமழையும் அருகிவிட்டிருந்த அந்த வறண்ட நிலம் அன்று விழாக்கோலம் கொண்டிருந்தது. ஒருவார காலமாய் களைகட்டிய கட்டுங்கடங்காத கொண்டாட்டங்களும் கொந்தளிப்புகளும் உச்சம் ஒன்றை எட்டிவிடும் மும்முரத்தில் இருந்தது. ஏழாம் நாளான அன்றைய இரவில் நடக்கவிருந்தது மிக முக்கியமான இணைவு. ஊரின் முதன்மை வீரன் என அறிவிக்கப்பட்டு, ஒரு வருடகாலமாய் போற்றப்பட்டு…

சருகு

1 படுக்கை அருகே இருந்த மேசை மீது அலைபேசியை வைத்த சீனிச்சாமி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டார். நகங்கள் கட்டில் விளிம்பில் பலமாய் பதிந்திருக்க தொண்டை வழி இறங்கிய வியர்வை மயிரற்ற மார்பின் ஊடாக வழிந்தது. பழுப்பேறியிருந்த வேட்டியைத் தொடைகளுக்கிடையே ஒடுக்கிக்கொண்டு வாசல் பக்கம் பார்த்தார். வெயில் ஏறுவதற்கு வெகுநேரம் இருந்தது. முழுதாய் விடிந்திருக்காத இவ்வேளையில் செல்லப்பாவை…