
விழித்ததிலிருந்து வரிசைக் கிரமம் குலையாமல் அனைத்தும் நடந்திருந்தபோதிலும் அவற்றின் கூட்டுத்தொகையென எஞ்சிய உணர்வில் புதுமை சாயம் அப்பிக்கிடப்பதை உணர்ந்தான் முருகேசன். எதிர்புறம் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு மீண்டும் சாலையைப் பார்த்தபோது என்றைக்கும் இல்லாத அளவிற்கு எழில் நாடி மேய்ந்தன விழிகள். கதகதப்பூட்டும் வண்ணங்களையும், பரபரத்தோடும் மக்களிடம் வெளிப்பட்ட உயிர்ப்பையும் கவனித்தபோது புறங்கழுத்தில் துவங்கி அடிமுதுகுவரை…


