
1 படுக்கை அருகே இருந்த மேசை மீது அலைபேசியை வைத்த சீனிச்சாமி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டார். நகங்கள் கட்டில் விளிம்பில் பலமாய் பதிந்திருக்க தொண்டை வழி இறங்கிய வியர்வை மயிரற்ற மார்பின் ஊடாக வழிந்தது. பழுப்பேறியிருந்த வேட்டியைத் தொடைகளுக்கிடையே ஒடுக்கிக்கொண்டு வாசல் பக்கம் பார்த்தார். வெயில் ஏறுவதற்கு வெகுநேரம் இருந்தது. முழுதாய் விடிந்திருக்காத இவ்வேளையில் செல்லப்பாவை…
