Author: பெருமாள் முருகன்

மேன்மகன் மூர்த்தி

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 21-12-25 ஞாயிறு அன்று நடைபெற்ற ‘வல்லினம் விருது’ வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன்.  ஆசிரியராக இருந்து பின்னர் தேர்வுத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் மலேசியத் தமிழ்ப் பள்ளிப் பாடத்திலும் தேர்வுமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்ததோடு நவீன இலக்கிய விழிப்பைக் கல்விக்குள் உண்டாக்கிய பி. எம். மூர்த்தி அவர்கள் இவ்வாண்டு விருதுக்குரியவர்.…

செங்குன்னியார் பூசை

மாலையில் ஊர்க்கூட்டம் என்று தெரிந்ததும் பிரகாசு மௌனமாகி விட்டான். அதிகம் பேசாதவன் என்றாலும் வழக்கமாகப் போடும் ‘ம்’ கூட அவனிடமிருந்து வரவில்லை. அதைப் பார்க்கச் சரசம்மாவுக்கு மனதில் கருக்கென்றது. வலியப் பேசினாலும் பதில் இல்லை. கைவேலைகளை ஏனோ தானோவென்று செய்தபடி அவனையே கவனித்துக் கொண்டிருந்தார். தன் பார்வையில் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போல. ஆனால்…

முனி

எதிர்வீட்டுக்கு ஒரு நாயோடு அவர்கள் குடிவந்திருந்தார்கள். முதல் நாள் பால் காய்ச்சுவதற்கே முருகேசையும் லட்சுமியையும் அழைத்தார்கள். “சொந்த வீடா கட்டிப் பால் காய்ச்சறாங்க? வாடக வீட்டுக்கு அழப்பு வேறயா? அதுக்குப் போவோணுமா?” என்று கேட்டான் முருகேசு. “சொந்த வீட்டுல இருக்கறமுன்னு பீத்தாதீங்க. வர்றவங்க அலுப்பசிலுப்பமான ஆள் கெடையாது. பெரிய மாளிக மாதிரி ஊடு இருக்குதாம். எதோ…

வாயில் விழைச்சு

ஒவ்வோர் ஆண்டும் பெரும் நிறுவனங்களில் ஜனவரி தொடங்கி மார்ச் வரை நிதிக் கணக்குகள் முடிக்கப்படும் காலம் என்பதால் முசுவாக இருப்பார்கள். அதுபோலக் கல்வி நிறுவனங்களில் இது கருத்தரங்கக் காலம். முன்பு பல்கலைக்கழகங்களில்தான் கருத்தரங்குகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெறும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல பயிலரங்குகளுக்கும் கருத்தரங்குகளுக்கும் நிதி உதவி செய்வதால் கல்லூரிகளிலும் இன்று ஆய்வுகள்…