Author: அனார்

அனார் கவிதைகள்

 விடுதலைக்கு அப்பால் உள்ளிருக்கும் பட்டுப்பூச்சியால் நெய்யப்படுகிறது பட்டுக்கூடு மின்னல் கீற்றுகள் பழிச்செனத் தெறித்து மங்குகின்றன கண்கூசச்செய்யும் கோடிவண்ணங்களின் பிரகாசத்தை யாராலும் தாங்கமுடியாது பொன்னிழைத் தூவல்களால் இழைத்த பட்டுக்கூடு ஆகாயவெளியின் பிடிமானத்தில் அசைகிறது வினோத ஒலிகளால் நேர்த்தியான சத்தங்களை எழுப்பும் பறவைகள் சிறு குருவிகள் நிகழ்த்தும் நாட்டிய அணிவகுப்பு சூழ்ந்திருக்க சர்ப்பமாகவும் சாத்தானாகவும் மாறித்தோன்றும் பேர் எழிலை…