தினகரன் கவிதைகள்

தனிமையில்
எழுதி முடித்ததும்
எழுதி கொண்டிருப்பதும்
இனி எழுத போவதும்
இன்னொரு தனிமையை
பற்றி தான்.

ஒருவர் கனவை மற்றொருவர்
மற்றொருவர் கனவை இனொருவர்
திருடித்தான் வாழ வேண்டியிள்ளது

நாளை உங்கள் கனவை நானும்
என் கனவை நீங்களும்
திருட வேண்டிய நிர்பந்தத்தில் தான்
வாழ்க்கை இருப்பு கொள்கிறது.

வலிமை இழந்த வார்த்தைகளோடும்
இடைவெளி தொலைத்த வரிகளோடும்
யதார்த்த எல்லைக்குள் இயங்கும்
கவிதையோடும்
என் நெடிய தனிமை பயணிக்கிறது.

நீங்கள் தொலைத்ததும்
நான் தேடுவதும்
ஒன்றைத்தான்
கடந்த காலங்களில் தவறிய
கணங்களில் ஏதோ
ஒன்றை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...