
மலேசியத் தமிழ் இலக்கியத்தில் நான் ஆச்சரியமாகப் பார்க்கும் தன்மை ஒன்று உண்டு. இந்நாட்டு இலக்கியவாதிகளுக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்குவதுபோன்ற விருதுகளோ பரிசுத்தொகைகளோ அங்கீகாரங்களோ இல்லை. தமிழக இலக்கியவாதிகளுக்குக் கிடைப்பதுபோன்ற வாசகர் பரப்போ நூல் விற்பனைக்கான சந்தையோ அரசு விருதுகளோ இல்லை. மலேசியாவில் நவீன இலக்கியத்தில் ஈடுபடும் ஒருவன் ஒருவகையில் தனியன். அவர்களை யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்தப்போவதும்…
