Author: வல்லினம்

முதல் எழுத்து இலக்கிய விழா

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் நான் ஆச்சரியமாகப் பார்க்கும் தன்மை ஒன்று உண்டு. இந்நாட்டு இலக்கியவாதிகளுக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்குவதுபோன்ற விருதுகளோ பரிசுத்தொகைகளோ அங்கீகாரங்களோ இல்லை. தமிழக இலக்கியவாதிகளுக்குக் கிடைப்பதுபோன்ற வாசகர் பரப்போ நூல் விற்பனைக்கான சந்தையோ அரசு விருதுகளோ இல்லை. மலேசியாவில் நவீன இலக்கியத்தில் ஈடுபடும் ஒருவன் ஒருவகையில் தனியன். அவர்களை யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்தப்போவதும்…

“என்னுடைய உள்ளுணர்வும் அதை வெளிக்கொணரும் கோணங்களும்தான் ஒரு காட்சியைக் கலையாக மாற்றுகின்றன.”  தினேஷ் புஸ்பராணி

தினேஷ் புஸ்பராணி ஒரு நிழற்படக் கலைஞர். ‘ஃபிரி மலேசியா டுடே’ இணையச் செய்தி ஊடகத்தில் நிழற்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார். இதற்கு முன்னர் கோலாலம்பூர் பெருநகரத் தெருவோர மனிதர்களைச் சித்திரிக்கும் நிழற்படங்களை எடுத்திருக்கிறார். நிழற்படத்துறையில் இருக்கும் தொடர் ஆர்வத்தால் மலேசியா முழுதும் இருக்கும் நாட்டார் கோவில்களுக்குச் சென்று எடுத்த நிழற்படங்களைக் கொண்டு ‘அறம்’ எனும் தலைப்பில் கண்காட்சியொன்றை…

மலேசியப் பாட்டிகள் சொன்ன கதைகள் – ஜி.எஸ்.தேவகுமார்

மஞ்சள் நீர் ராமுவும் அவர் மனைவி ராணியும் காட்டை ஒட்டிய ஊரில் வசித்து வந்தனர். எழை குடும்பம். காட்டுக் கோழி, முயல்கள், காட்டுப் பன்றிகள் போன்றவையே அவர்களின் அன்றாட உணவு வகைகள். அதற்காக ராமு காலையிலேயே காட்டுக்குள் கத்தி, கோடரியோடு சேர்த்து குடிக்க தண்ணீரும் கொண்டு செல்வார். வீடு வர எவ்வளவு நேரமாகும் என அவருக்கே…

முதல் எழுத்து இலக்கிய விழா – இலக்கியப் பட்டறை

மலேசிய கலை இலக்கியச் சூழலில் பல்வேறு தளங்களிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது வல்லினம். மூத்த எழுத்தாளர்களை விருது வழங்கி அங்கீகரிக்கும் அதே சமயத்தில் அவர்களது பங்களிப்பை ஆவணப்படங்கள் வழியாகப் பதிவு செய்தும் வருகிறது. அதே போல சமகால எழுத்தாளர்களின் ஆக்கங்களை வல்லினம் இதழ் வழியாக வெளியிட்டும் நூல்களைப் பதிப்பித்தும் வருகிறது. இதுதவிர, வல்லினத்தின் முதன்மையான…

வல்லினம் முகாம் 2025

முதல் பகுதி: சிறுகதையின் வரலாறு சாலினி வருடந்தோறும் வல்லினம் விருது விழாவுக்கு முன் நடத்தப்படும் வல்லினம் முகாமில் 2021ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு முறையும் பங்கெடுத்து வந்திருக்கிறேன். இம்முறையும் 21 டிசம்பர் முதல் 22 டிசம்பர் என 2 நாட்களுக்கு  எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களால் வழிநடத்தப்பட்ட வல்லினம் இலக்கிய முகாமில் கலந்துகொண்டேன். இதற்கு முன்…

”விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்துவதும் விழுமிய மீறல்களைக் கவனம் எடுத்துப் பரிசீலிப்பதும் நவீன இலக்கியம்”

உலக இலக்கிய வாசகர்கள் அறிந்து வைத்துள்ள தமிழ் எழுத்தாளர்களில் பெருமாள்முருகன் குறிப்பிடத்தக்கவர். இவரது ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் கண்டுள்ளன. போலிஷ், ஜெர்மன், செக் போன்ற உலக மொழிகளிலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இவரது புனைவுகள் மொழியாக்கம் கண்டு வாசிக்கப்படுகின்றன. எழுத்தாளராக மட்டுமல்லாது கவிஞராகவும் ஆய்வறிஞராகவும் அறியப்படும் பெருமாள்முருகனிடம்…

இளையோர் குறுநாவல் போட்டி – நாள் நீட்டிப்பு

வல்லினம் ஏற்பாடு செய்த குறுநாவல் போட்டியின் கால அளவு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. பல கல்லூரி மாணவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நவம்பர் 30க்குள் உங்கள் குறுநாவலை novelletecontest@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் போட்டி தொடர்பான சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் +601123822472 எனும் புலன…

Aside

இவ்வாண்டு வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மலேசியக் கல்விச் சூழலில் நவீன இலக்கியத்தை வலுப்படுத்தியதோடு சிறுவர் இலக்கியம் மலேசிய நாட்டில் வளர பங்காற்றியவர் பி. எம். மூர்த்தி அவர்கள். எஸ்.பி.எம் இலக்கிய வளர்ச்சிக்கும் மலேசிய இளையோர் சிறுகதை எழுச்சிக்கும் பி.எம்.மூர்த்தியின் பங்களிப்பு முதன்மையானது. அவர் வாழ்நாள் சேவையைப் போற்றி இவ்விருது வழங்கப்படுகிறது. விருது தொகையாக RM 5000 ரிங்கிட் வழங்கப்படுவதுடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட விருது கேடயமும் வழங்கப்படும்.

“மலேசிய நாட்டுப்புறப் பாடல் மரபின் தொடர்ச்சி விடுபட்டு விட்டது” – கோகுலராஜன்

மலேசியத் திரைத்துறையில் இயங்கி வருபவர் கோகுலராஜன். இளம் இயக்குநர், தொகுப்பாளர், நடிகர் எனும் பரிணாமங்களைக் கொண்டவர். இவர் இயக்கிய ‘Bird on the 27th floor’ எனும் குறும்படம் சீ ஷோர்ஸ் திரைப்பட விழாவில் (Seashores Film Festival)  திரையிடப்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் இயக்கிய ‘வைரஸ் மைரஸ்’ குறும்படம் குமான் குறும்படப் போட்டியிலும் வென்று…

பி. எம். மூர்த்திக்கு வல்லினம் விருது

பி. எம். மூர்த்திக்கு வல்லினம் விருது 2025க்கான வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.  மலேசியக் கல்விச் சூழலில் தமிழிலக்கியப் பாடம் நிலைத்திருப்பதற்கும் அதில் மலேசிய நாவல் இடம்பெறுவதற்கும் வித்திட்டவர் பி. எம். மூர்த்தி. ஆரம்பப்பள்ளி அடைவுநிலை தேர்வுத்தாள் வடிவத்தை முழுமையாக மாற்றியமைத்து அதில் படைப்பிலக்கியம் எனும் புதிய பகுதியை உருவாக்கியவர்.   படைப்பிலக்கியப்…

இளையோர் குறுநாவல் போட்டி

வல்லினம் இலக்கியக் குழு இளையோர் குறுநாவல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இளையோரின் வாழ்வைப் புனைவுகள் வழியாகப் பதிவு செய்வதும் அவர்களிடையே எழுத்தார்வத்தை உருவாக்குவதும் இந்தப் போட்டி நடத்தப்படுவதின் அடிப்படை நோக்கங்களாகும். இந்தக் குறுநாவல் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை: முதல் பரிசு: RM 1500.00 இரண்டாம் பரிசு: RM 1000.00 மூன்றாம்…

“சினிமா துறை என்பதை சமுராய் வீரனின் பாதை அல்லது துறவியின் பாதை என்று சொல்வேன்,” – சஞ்சய் பெருமாள்

இயக்குநர் சஞ்சய் பெருமாள் மலேசியத் திரையுலகச் சூழலில் ‘ஜகாட்’ படத்தின் வழி நன்கு அறியப்பட்டவர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 28வது மலேசியத் தேசியத் திரைப்பட விருது விழாவில் ‘ஜகாட்’ படம் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றதோடு சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதையும் சஞ்சய்க்குப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து, இவர் இயக்கிய ‘ப்ளூஸ்’, ‘மாச்சாய்’ ஆகிய…

முக்கோண கதைகள்/ Triangle of Tales

அறிவிப்பு காணொளி வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள் எனும் இலக்கிய விழா ஜூன் 1 ஆம் திகதி தலைநகரில் நடைபெற உள்ளது. மூன்று நூல்கள் இந்த விழாவில் வெளியீடு காண உள்ளன. இந்த விழாவுக்கு வழக்கறிஞர் பசுபதி அவர்கள் தலைமை தாங்குகிறார். மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் தோற்றுனரான அவர் வல்லினம் உள்ளிட்ட…

நூல்களின் முன்பதிவும் நிதி சேகரிப்புத் திட்டமும்

வல்லினம் இலக்கியக் குழு இவ்வருடம் மொழிபெயர்ப்புக்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. மலாய் சீன சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதோடு மலேசிய தமிழ் சிறுகதைகளை மலாய் மொழிக்கு மொழியாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் மூன்று நூல்களை ஒரே நேரத்தில் பதிப்பிப்பதுடன் அவற்றை ஒட்டிய கலந்துரையாடல்களை உருவாக்கும் திட்டத்தையும் வடிவமைத்துள்ளது. இத்திட்டத்தில் ‘தமிழாசியா’ பதிப்பகமும் இணை…

“எல்லா இலக்கியமும் அறம் என்னும் மாபெரும் மதிப்பீட்டை வலியுறுத்தவும் நிலைநிறுத்தவும் எழுதப்படுபவையே” – பாவண்ணன்

பாவண்ணன் சமகால  நவீனத் தமிழ் இலக்கியச்சூழலில்முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள்எனஇடையறாதுதமதுபங்களிப்பைஅளித்துவருகிறார். கன்னடத்திலிருந்து தலித் இலக்கியங்களை மொழியாக்கம் செய்து தமிழ் தலித் இலக்கிய அலை உருவாக அடிப்படைகளை அமைத்தவர்களில் ஒருவர். மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருது,  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடா)  வாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது , விளக்கு…