
வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள் எனும் இலக்கிய விழா ஜூன் 1 ஆம் திகதி தலைநகரில் நடைபெற உள்ளது. மூன்று நூல்கள் இந்த விழாவில் வெளியீடு காண உள்ளன.
எஸ். எம். ஷாகீரின் மலாய் சிறுகதைகள் தமிழில் மொழியாக்கம் கண்டு நூலாக வெளிவரும் சூழலில் சீன எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு தமிழிலும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் மலாய் மொழிபெயர்ப்பிலும் நூல்களாக வெளியீடு காண்கின்றன.

மலேசிய இலக்கிய வரலாற்றில் மூன்று மொழியில் இயங்கும் சமகால எழுத்தாளர்கள் ஒன்றுகூடும் விழாவாக இது அமையும். அதே சமயம் மூன்று மொழி இலக்கியங்களுடனான உரையாடலுக்கும் இந்த நூல் வெளியீடுகள் வித்திடும்.
நிகழ்ச்சி விபரங்கள்:
நாள்: 1.6.2025 (ஞாயிறு)
நேரம் : மதியம் 2.00 – மாலை 6.00
இடம் : YMCA பிரிக்ஸ் பில்ட்
இவ்விழாவில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். கீழ் உள்ச்ள இணைப்பில் முன்பதிவு செய்யவும். கூடுதல் தகவல்களுக்கு ம.நவீன் 0163194522, அ. பாண்டியன் 0136696944 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்.
முன்பதிவு செய்ய / For Registration: https://forms.gle/LBp5dq3B9snSF54K9