Author: ஜா.ராஜகோபாலன்

மலேசியப் பயணம்

நடுநிலைப் பள்ளி பயிலும் வயதில் என் வகுப்பு நண்பன் அவனது மாமா மலேசியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னான். எனக்கு அந்த வரியைச் செரிக்கவே முடியவில்லை. மலேசியா ஒரு ‘ஃபாரின் கண்ட்ரி’. வெளிநாட்டுக்காரர் ஒருவர் எப்படி எங்கள் ஊரில் இருக்கும் ஒருவருக்கு உறவினராக இருக்க முடியும்? அன்றைக்குப் புகழ் பெற்ற படமான ‘விதி’ திரைப்படத்தின்  நீதிமன்ற காட்சிகளில் நடிகை …

பீஷ்மரின் மகன் – ஹரிலால் நாவலை முன்வைத்து

1 காந்தி – கடந்த 125 ஆண்டுகளில் உலகை வெவ்வேறு விதங்களில் பாதித்த பெயர்களில் முக்கியமான பெயர். மிக அதிகமான எண்ணிக்கையில் நூல்கள் எழுதப்பட்ட பெயர்களில் முதன்மையான பெயர். ஒருவரது பெயர் ஒரு விழுமியத்தின், சிந்தனைமுறையின், லட்சியத்தின் சொற்பொருளாக மாறும் அதிசயத்தை உலகுக்கு இன்று வரை காட்டிக் கொண்டிருக்கும் பெயர். இந்தியா உட்பட உலகின் ஒவ்வொரு…

வெண்முரசு முன் ஒலிக்கும் மூன்று கேள்விகள்

வெண்முரசு படைப்பு குறித்த உரையாடலின்போது நண்பர் ஒருவர் இக்கேள்வியை முன்வைத்தார் – இன்றைய காலத்தில் இப்படைப்பின் அவசியம் என்ன? நான் இந்தக் கேள்வியை அப்படைப்பு உருவான நாள்முதல் வெவ்வேறு விதங்களில் சந்தித்து வருகிறேன். ஆகவே இம்முறை நண்பரிடம் நிதானத்துடன் அணுக முயன்றேன். “சரி, இந்தப் படைப்பு இன்றைய காலத்திற்குப்  பொருந்தாது எனில் எந்தக்காலத்திற்குப் பொருந்தும் என…

அம்பாரி யானை

9௦ களின் தொடக்கத்தில் நவீன தமிழ் இலக்கியம் வாசிக்கத் தொடங்கிய எனக்கு பத்தாண்டுகள் கடந்த பின் சில கேள்விகள் இருந்தன. தமிழ் எழுத்தாளர்களை பொதுவாக வகைப்படுத்தும்போது வணிக எழுத்தாளர்கள், இலக்கிய எழுத்தாளர்கள் எனச் சொல்கிறோம். இலக்கிய எழுத்தாளர்களுக்குள் வந்தால் அதிலுமே சில பிரிவுகள் இருக்கின்றன. எழுத்தின் வகையாலன்றி பேசுபொருளின் அடிப்படையில் நான் வகுத்துக் கொண்ட விதத்தால்…