
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியும் சமூகத்தில் அரசியலில் தனிமனிதரில் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டமாகத் திகழ்கின்றது. உதாரணமாக, உ.வே.சா நம் பண்பாட்டின் வேர்களைத் தேடிச் சென்றார். நாட்டு விடுதலைக்காக காந்தி போன்ற தலைவர்கள் பின்னால் மக்கள் திரண்டார்கள். விவேகானந்தர், பாரதி போன்றவர்கள் மக்களிடம் பேசிக் கொண்டேயிருந்தார்கள். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஆர்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்கள் அமைப்புகளை…