Author: ஹேமா

அந்தம்

நிலவின் வெம்மையில் அசையாமல் குளிர்காயும் இருட்டு யானையைப்போல நின்றிருந்தது அக்குன்று. அதன் அடிவாரம் மெழுகுதிரி, எண்ணெய் மற்றும் லாந்தர் விளக்குகளின் வெளிச்சத்தில் மஞ்சள் கரைகட்டியிருந்தது. அக்குன்றுக்கு அருகிலிருந்த நிலத்தில்தான் மனித எலும்புகளைச் சமீபத்தில் தோண்டி எடுத்திருந்தார்கள். அக்குன்றினை நோக்கிச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் சின்னஞ்சிறு கொடிகள் ஊன்றப்பட்டிருந்தன. பாதையைவிட்டு விலகியிருந்த மரங்கள் தமக்கு அடியில் லாந்தர்…

இறுதி யாத்திரை

ஒன்றாக செத்துப்போக முடிவு செய்ததும் அந்த புளோக்கின் பன்னிரண்டாம் மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து விடும் யோசனை தான் முதலில் வந்தது. இன்றைய சூழலில் ஆகச் சுலபமானது, ஆனால் சிறந்த முறையல்ல.  அந்த வழியைத் தேர்ந்தெடுத்தவர்கள் ஏதோவொரு புள்ளியில் வாழ்க்கையின் மீது தீராத வெறுப்பைக் கொண்டிருந்தவர்கள். ஒருகணம் உச்சமேறிய அச்சமோ, கோபமோ, விரக்தியோ ஏதோவொன்று அந்தப்…