
நிலவின் வெம்மையில் அசையாமல் குளிர்காயும் இருட்டு யானையைப்போல நின்றிருந்தது அக்குன்று. அதன் அடிவாரம் மெழுகுதிரி, எண்ணெய் மற்றும் லாந்தர் விளக்குகளின் வெளிச்சத்தில் மஞ்சள் கரைகட்டியிருந்தது. அக்குன்றுக்கு அருகிலிருந்த நிலத்தில்தான் மனித எலும்புகளைச் சமீபத்தில் தோண்டி எடுத்திருந்தார்கள். அக்குன்றினை நோக்கிச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் சின்னஞ்சிறு கொடிகள் ஊன்றப்பட்டிருந்தன. பாதையைவிட்டு விலகியிருந்த மரங்கள் தமக்கு அடியில் லாந்தர்…