
“பாக்கறதுக்கு இது கலவை மாதிரியே தெரியலையே மேஸ்திரி. மாரியாத்த கோயில்ல ஊத்தறதுக்கு கூழு கரைச்சி வச்ச மாதிரி இருக்குது. இதை வச்சி எப்படி பூச்சுவேலை செய்வீங்க? சிமெண்ட் வேணாமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் ஜெயலட்சுமி. அவள் தன் கையில் வைத்திருந்த குச்சியை பக்கத்தில் ஒரு சிறிய தொட்டிக்குள் விட்டுத் துழாவினாள். தொட்டியில் வேப்பம்பட்டை, ஈச்சம்பட்டை, கற்றாழை,…


