
தமிழாசியா முன்னெடுத்து வரும் மாதாந்திரச் சிறுகதை கலந்துரையாடலின் ஜூன் மாத அமர்வில், எழுத்தாளர் கந்தர்வனின் நான்கு சிறுகதைகள் வாசிப்புக்கும் விரிவான கலந்துரையாடலுக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டன. ‘பத்தினி ஓலம்’, ‘தண்ணீர்’ ஆகிய இரு கதைகளின் வாயிலாக கந்தர்வனின் புனைவுலகம் குறித்த அறிமுகத்தை நவீன் முன்வைத்தார். ‘பத்தினி ஓலம்’ குடும்பமும் சமூகமும் ஒரு பெண்ணின் துயரத்தை எவ்வாறு மௌனமான உள்ளக்…


