
அப்பாவின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வருகிறது. ஒரு மாதமாக டெல்லியிலிருக்கும் உறவினர் வீட்டிலிருந்து அதற்கான வேலைகளைச் செய்தோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பா மனு போட்டார். ஒரு அரசாங்கத்திற்கு எதிராக தனி மனிதர் போராடுவது கடினம். அதோடு வெற்றி பெறுவதென்பது அரிது என பல்வேறுவிதமாக சொல்லியபோதும்…