வல்லினம் குறுநாவல் பட்டறை & சிங்கப்பூர் இலக்கிய அறிமுகம்

jemoவல்லினம் இவ்வாண்டு குறுநாவல் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் குறுநாவல் பட்டறையைத் தமிழக எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் பிரபஞ்சன் ஆகியோர் வழிநடத்துவர். இரண்டு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் மலேசிய சிங்கை எழுத்தாளர்கள் கலந்துகொள்ளலாம்.

மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் குறுநாவல் இலக்கியம் வளர வல்லினம் சில செயல்திட்டங்களை வகுத்துள்ளது. அவ்வகையில் வல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டத்திற்காக இந்தப் பட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. பட்டறையின் மூலம் குறுநாவல் வடிவம் குறித்த சிறந்த அறிமுகத்தை ஏற்படுத்தி அதன் வழி உருவாகும் குறுநாவல்களை நூலாகப் பதிப்பிப்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

27.05.2017 & 28.05.2017 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாள்களில் நடைபெறும் இப்பட்டறையில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள இயலும். பங்குபெற விரும்பும் எழுத்தாளர்கள் 0163194522 (ம.நவீன்) என்ற எண்ணிலோ அல்லது valllinamm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ 31.3.2017-க்குள் பதிவு செய்ய வேண்டும். குறைந்த அளவு இடங்களே இருப்பதால் உடனடியாகப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

கட்டணம் 100.00 ரிங்கிட் (தங்கும் வசதி, உணவு என அனைத்தும் அடக்கம்)

நிகழ்ச்சியில் பதிவு பெற்றவர்களுக்கு மட்டும் முழுமையான நிகழ்ச்சி நிரலும் பிற விபரங்களும் அனுப்பப்படும்.

 

சிங்கப்பூர் இலக்கிய அறிமுகம்

28.5.2017 – சிங்கப்பூர் இலக்கிய அறிமுகம் நிகழ்ச்சியை வல்லினமும் சிங்கப்பூர் வாசகர்pirapanjan வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் முக்கியமான நான்கு ஆளுமைகளின் ஆவணப்படங்கள் வல்லினம் மற்றும் சிங்கப்பூர் வாசகர் வட்டக் கூட்டுத்தயாரிப்பில் வெளியீடு காண்பதுடன் சிங்கப்பூரின் சமகால இலக்கியம் குறித்த கலந்துரையாடலும் சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஏற்பாட்டில் நடைபெறும். பொதுமக்களுக்கான இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் பிரபஞ்சன் ஆகியோரின் இலக்கிய உரைகளும் இடம்பெறும். மேலும் சிங்கப்பூர் இலக்கியம் குறித்த எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைத்தொகுப்பும் இந்நிகழ்ச்சியில் வெளியீடு காணும்.

வருகையாளர்களின் முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு ம.நவீன் (0163194522)

நாள் : 28.5.2017 (ஞாயிறு)

இடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலம்பூர் (ம.இ.கா தலைமையகம் எதிர்ப்புறம்)

நேரம் : பிற்பகல் 2.00

நுழைவு இலவசம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...