
கண் விழித்தபோது பொன்னுருண்டை கையில் இல்லை. எரிந்துகொண்டிருந்த விளக்கொளி சூரிய வெளிச்சத்தில் அமிழ்ந்துவிட்டன. நல்லவேளையாக நேற்று இரவு பால்கனியின் திரைசீலையைத் திறந்துவிட்டதால் விடிந்துவிட்டது தெரிந்தது. அலாரம் வைத்திருக்கவில்லை. களைப்பில் அப்படியே தூங்கிவிட்டது மூளைக்கு உரைத்தபோது துள்ளிக்குதித்து எழுந்தேன்.
கைப்பேசியைத் தேடி மணியைப் பார்த்தேன். காலை 7.15. அதிர்ச்சியடையக் கூட அவகாசம் இல்லை. 7.45க்குப் பயணத்திற்குத் தயாராக இருக்க வேண்டும். பரபரப்பாகக் கிளம்பினேன். எனக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். அவசரமாக எதைச் செய்தாலும் கோளாறாகிவிடும். ஆனால் இப்போது அவசரமன்றி வேறு வழியில்லை. பல் துலக்கிக்கொண்டே எதையும் தவற விட்டுவிடக்கூடாது என மனதிலேயே கணக்கிட்டுக்கொண்டேன். நேற்று கருத்தரங்கு குழுவைச் சேர்ந்தவர் அந்தச் சிகப்பு நிற அட்டையை அவசியம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்றது மட்டும் நினைவில் இருந்தது.
Continue reading