வேம்படியான் : கடிதங்கள் 1

வேம்படியான் சிறுகதை

அன்பு நவின்,

வேம்படியான் குறித்த அறிவிப்பு வந்த நாளில் இக்கதையை வாசிக்க வேண்டும் என்று முடிவெடுத்து வைத்தேன். இன்று வாசித்தேன். இப்படி ஒரு பேய்க்கதையை வாசித்து பல நாட்களாகிவிட்டது. ஆனால் உங்களின் ‘பூனியான்’ சிறுகதை போலவே இது உளவியல் சார்ந்த சிக்கலா? அல்லது உண்மையான பேயா? எனும் சிக்கலான இடத்திற்கு வாசகனைத் தள்ளி விட்டுள்ளீர்கள்.

Continue reading

வணிக எழுத்தாளனாக இருப்பதில் என்ன தவறு?

இதழும் இயக்கமும் எழுத்தாளனும்

//ஒருவன் வணிக எழுத்தாளனாக இருப்பதில் என்ன தவறு// இந்த சந்தேகம் எனக்கு இன்றும் இருக்கிறது. இது ஒரு form of expression தானே? ஏன் எனக்கு பிடித்ததை எழுதக்கூடாது? நான் எழுதுவது இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளாத வரையில், (விமர்சகர்களின்  விமர்சனமெல்லாம் பிரச்சனை இல்லை, வணிக இலகியம் என்பதை உணர்ந்து எழுதுகிறேன் என்பதால்)

ஹேமா, சிங்கப்பூர்

Continue reading

இதழும் இயக்கமும் எழுத்தாளனும்

ஜூன் 18இல் எழுதிய கட்டுரை குறித்து சில நண்பர்களிடம் இருந்து கேள்விகள் வந்தன. “அதெப்பாடி… இதழ்களும் இயக்கங்களும் ஒருவரை எழுத வைத்து கஷ்டப்பட்டு எழுத்தாளராக உருவாக்குகின்றன. ஆனால் தன்னை யார் உருவாக்கினார் என எழுத்தாளர்தான் முடிவு செய்வாரா? அப்படியானால் அந்த எழுத்தாளர் தனது அரசியல் நிலைபாட்டிற்கு ஏற்ப எதையும் மாற்றிச் சொல்லக்கூடும் அல்லவா? ஒருவேளை ஓர் எழுத்தாளர் வாயையே திறக்கவில்லை என்றால், ஆய்வாளர்கள் அவர் எழுதிய படைப்புகளைக் கொண்டே அதை முடிவு செய்யலாம் அல்லவா?”

Continue reading

பொன் கோகிலம், தமிழ் விக்கி, சில தெளிவுகள்

இன்று எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் பொன் கோகிலம் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு வரி இவ்வாறு அமைந்துள்ளது.

‘மூத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் மறைவிற்குப் பின்னர், மலேசிய எழுத்துச்சூழலில் புதிய அல்லது அறிமுக எழுத்தாளர்கள் உருவாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.’

Continue reading

மலேசிய யோக முகாம் 2024 – கணேஷ் பாபு

லூனாஸ் மாரியம்மன் கோயில் முன்புறம்
லங்கேஷ் & ம.நவீன்

யோக ஆசிரியர் சௌந்தர்ஜி அவர்களுடன் இதற்கு முன் ஓரிரு முறை பேசியிருந்தாலும் அவரிடமிருந்து யோகம் கற்கும் வாய்ப்பு இப்போதுதான் வாய்த்தது. மலேசியாவில் யோக முகாம் என்று நவீன் அறிவித்ததும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொண்டேன். மே மாதம் 25,26, 27 ஆகிய தேதிகளில் இந்த யோக முகாம் கூலிம் பிரஹ்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடைபெற்றது. சிங்கப்பூரில் இருந்து நான், லதா மற்றும் லங்கேஷ் ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டோம்.

Continue reading

இலக்கியச் செயல்பாட்டில் கறார் தன்மையின் தேவை என்ன?

நவம்பர் 30 – டிசம்பர் 1 ஆகிய இருநாட்கள் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள இலக்கிய முகாம் குறித்து என் முகநூலில் நேற்று (29.5.2024) நண்பகல் ஓர் அறிவிப்புச் செய்திருந்தேன். அதை வழிநடந்த இரண்டு தமிழக எழுத்தாளர்கள் வருவதைக் குறிப்பிட்டிருந்தாலும் அவர்கள் பெயர்களை அறிவிக்கவில்லை.

Continue reading

பொன் கோகிலத்தின் குறுங்கதையும் தமிழ்ப்பள்ளிகளின் நிலையும்

சில தமிழ்ப்பள்ளிகள் முன்னாள் வானொலி அறிவிப்பாளர் பொன் கோகிலம் அவர்களைக் குறுங்கதை பட்டறை நடத்த அழைத்துள்ளதாக நண்பர்கள் சிலர் கூறினார்கள்.

எனக்கு அது அதிர்ச்சியான தகவல்தான்.

Continue reading

கீலாக்காரன் (கடிதங்கள் 2)

கீலாக்காரன் சிறுகதை

ஒவ்வொரு மனிதனுக்குள் நிகழும் மனப்பிறழ்வுகளைக் காட்டியது ‘கீலாக்காரன்’ சிறுகதை. கதையில் சீத்தாராமன் அவன் தோற்றத்தினாலும் பேச்சினாலும் ஊரார் மத்தியில் கீலாக்காரன் என்றழைக்கப்படுகிறான். ஆனால், கதையை வாசித்த முடித்த பிறகு ஒருவரின் தோற்றமும் பேச்சும் மட்டும்தான் ஒருவனை மனப்பிறழ்ந்தவன் என்று கூறுவதற்கு வழிவகுக்கின்றதா என்ற கேள்வியே எழுகின்றது. இக்கதையில் நிராகரிக்கப்படும் கேலிக்குள்ளாக்கப்படும் உயிர்களின் பிரதிபலிப்பாகச் சீத்தாராமனும், தமது பலத்தைப் பலவீனமற்றவர்களிடம் காட்டி மகிழ்ச்சியடைபவர்களின் பிம்பமாக வேலுவும், தமது சுயநலமும் இயலாமையும் ஒன்றுசேர ஏதும் செய்ய முடியாமல் குற்றவுணர்வுடன் சிக்கித் தவிக்கும் சக மனிதனின் பிரதிபலிப்பாகக் கோபியும் திகழ்கின்றனர். 

Continue reading

கீலாக்காரன் (கடிதங்கள் 1)

கீலாக்காரன் சிறுகதை

60களில் பீடோங் அருகிலில் நான் வாழ்ந்த தோட்டதில் கூட ஆண் புணர்ச்சிக்காரர்கள் இருந்ததை ஒரு சிறுவனாக (4-5 வயதாக இருந்த இளம் பிரயாயத்தில்) என் கண்களால் பார்த்திருக்கிறேன். ஒரு முறை அப்படிப்பட்ட ‘காமுகனிடமிருந்து’ தப்பித்துமிருக்கிறேன்.

Continue reading

கீலாக்காரன் (சிறுகதை)

“இங்கேருந்து ஓடிப் போயிடு!”என்றேன் ரகசியமாக. அதைச் சொல்லும் தைரியம் எனக்கு எப்படி வந்ததெனத் தெரியவில்லை. யாரும் வருகிறார்களா எனச் சுற்றி முற்றி பார்த்துக்கொண்டேன்.

சீத்தாராமன் நான் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாததைப்போல கனிவுடன் பார்த்தார்.

Continue reading