சீனா

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 13

காலையிலேயே மேற்கு ஏரிக்குப் புறப்பட்டோம். இதைச் சீனாவின் அழகிய இதயம் எனக் குறிப்பிடுவதால் இதயத்தைக் காண ஆவலாக இருந்தது. இயற்கை அழகு, கலாசார முக்கியத்துவம், வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றால் கவனம் பெற்ற ஏரி இது.

அஸ்ரின் அங்குள்ள வாடகை வண்டி பிடிக்கும் செயலியைத் தறவிரக்கம் செய்திருந்ததால் காலை 9 மணிக்கெல்லாம் அவ்விடத்தை அடைந்தோம். காலைக் காற்று புத்துணர்ச்சியைக் கொடுத்தது.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 12

காப்பி இதமான இருந்தது. நடுங்கி உதறச் செய்த குளிரைக் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டியது. பால்கனிக்குச் செல்லும் தைரியம் எழவில்லை. முன்னறைக்குச் சென்று சாய்ந்து அமர்ந்தேன். தூரமாகக் கிடந்த சிவப்பு நிற அட்டை பயமுறுத்தியது. அதில் ‘சிப்’ இருக்கலாம் என விளையாட்டாகத்தான் சொன்னேன். ஆனால் ‘இருக்கலாமோ’ என இப்போது தோன்றியது. அறையைச் சுத்தம் செய்யும் கிழவி ஒரு விசையை அழுத்தி நான் யார் என உறுதிப்படுத்திக்கொண்டதும் அமரும் இடம் தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் என் இருப்பை ஏற்பாட்டுக்குழு உறுதி செய்துகொண்டதும் யாரோ எந்த நேரமும் என்னை உற்றுப் பார்ப்பதுபோன்ற உணர்வை உண்டாக்கியது. ஒட்டுமொத்தசத சீனாவும் ஏதோ ஒரு பிரமாண்ட கண்ணினால் பார்க்கப்பட்டுக்கொண்டே இருக்கிறதோ எனத் தோன்றியது.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 10

‘லியாங்ஸு பண்பாட்டுக் கருத்தரங்கு’ எனும் தலைப்பில் நடைபெற்ற அனைத்துலகச் சந்திப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டபோதே அதன் தலைப்பில் ஈர்க்கப்பட்டு லியாங்ஸு பண்பாடு குறித்து ஆராயத் தொடங்கியிருந்தேன். மிகக்குறைவாகவே தமிழில் அதுகுறித்து எழுதப்பட்டிருந்தது.

உலகின் தொன்மையான பண்பாடுகள் குறித்து பள்ளிக் காலத்தில் இருந்தே படித்திருப்போம். அவற்றை இப்படித் தொகுத்துக்கொள்ளலாம்.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 9

காலையில் எந்தப் பதற்றமும் இல்லை. நிதானமாக எழுந்து குளித்துவிட்டு உணவுண்ணச் சென்றேன். விருப்பமான உணவுகளைச் சாப்பிட்டேன். முக்கியமாக வாத்துக்கறி. நான் சிறுவனாக இருந்தபோதிருந்தே வாத்துக்கறி சாப்பிட்டு வருகிறேன். நான் பிறந்து வளர்ந்த ஊரான லூனாஸில் வாத்துக்கறி மிகவும் பிரபலம். கோழியைவிட சற்று கடினமாக இருந்தாலும் எனக்கு அது அவ்வளவு பிடிக்கும்.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 8

மதியம் விட்டதை இரவில் பிடித்துவிட்ட திருப்தியுடன் அறைக்குத் திரும்பினேன். இனி நாளைய உரைக்குத் தயாராக வேண்டியிருந்தது. எங்கள் அரங்கில் பத்துப் பேர் பேசுவார்கள் என்றும் ஒருவருக்கு ஐந்து நிமிடம் என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. அரங்கில் பேச அழைப்பிதழ் போல ஒன்றைக் கொடுத்திருந்தனர். இதை மலேசியாவில் இருக்கும்போதே கொடுத்திருந்தால் பேருரைக்கே தயார் செய்திருப்பேன்.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 7

அஸ்ரினுடன்

நேர்காணல் முடிந்தபின்னர் வெளியில் நின்றுகொண்டிருந்தேன். கிட்டத்தட்ட கருத்தரங்கு முடியும் தருவாயில் இருந்ததால் உள்ளே செல்லச் சங்கடமாக இருந்தது. வெளியே மாதிரி புத்தகம் ஒன்றை பெரிதாக வைத்திருந்தார்கள். அதில் ஒவ்வொரு எழுத்தாளரும் அவரவர் தாய்மொழியில் கையொப்பம் வைத்திருந்தார்கள். நான் தமிழில் என் கையொப்பத்தை வைத்து தூர நின்று பார்த்தேன். மொத்த கையொப்பங்களில் ஒரே தமிழ்க் கையொப்பம். இன்னொரு பக்கம் வெளிநாட்டு எழுத்தாளர்களின் பட்டியல் கொடுத்திருந்தார்கள். ஒவ்வொருவரையாக வாசித்து சிலரை கூகுளில் தேடிப்பார்த்தேன்.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 6

காலை 9.00 மணிக்குத் தொடங்கிய கருத்தரங்கின் அறிமுக உரைகளும் சிறப்புரைகளும் காலை 11.30க்குள் நிறைவு பெற்றன. மூன்றரை மணி நேரமும் அந்தப் பெண்கள் அங்கேயே நின்றுக்கொண்டிருந்துவிட்டு சிரித்த முகத்துடன் அனைவரும் அரங்கை விட்டு வெளியேறும் வரை காத்திருந்தனர்.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 5

எனக்காக வழங்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தபோது அங்கும் என் பெயர் ஓர் அட்டையில் அதே பிழையுடன் எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். ஒரு வேளை ‘வீ’ எனும் நெடில் எழுத்தை ‘W’ போட்டுதான் சமன் செய்ய முடியுமோ என்னவோ. தூக்கம் இன்னும் கண்களில் இருந்தது. பொறுமையாக அரங்கைப் பார்த்தேன்.

முதல்நாளில் இருந்து நான் கண்ட பதாகைகள், அறிவிப்புகள், கொடிகள் எனத் தொடங்கி இன்றைய அரங்கின் மின்திரை வரை கருநீலம் மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் மட்டுமே அனைத்தும் இருப்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் எங்குமே சீனாவை ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளங்கள் இல்லை. எந்தத் தலைவர்களின் படங்களும் இல்லை. இந்தக் கருத்தரங்கை அரசாங்கம் ஏற்று நடத்தினாலும் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 4

கண் விழித்தபோது பொன்னுருண்டை கையில் இல்லை. எரிந்துகொண்டிருந்த விளக்கொளி சூரிய வெளிச்சத்தில் அமிழ்ந்துவிட்டன. நல்லவேளையாக நேற்று இரவு பால்கனியின் திரைசீலையைத் திறந்துவிட்டதால் விடிந்துவிட்டது தெரிந்தது. அலாரம் வைத்திருக்கவில்லை. களைப்பில் அப்படியே தூங்கிவிட்டது மூளைக்கு உரைத்தபோது துள்ளிக்குதித்து எழுந்தேன்.

கைப்பேசியைத் தேடி மணியைப் பார்த்தேன். காலை 7.15. அதிர்ச்சியடையக் கூட அவகாசம் இல்லை. 7.45க்குப் பயணத்திற்குத் தயாராக இருக்க வேண்டும். பரபரப்பாகக் கிளம்பினேன். எனக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். அவசரமாக எதைச் செய்தாலும் கோளாறாகிவிடும். ஆனால் இப்போது அவசரமன்றி வேறு வழியில்லை. பல் துலக்கிக்கொண்டே எதையும் தவற விட்டுவிடக்கூடாது என மனதிலேயே கணக்கிட்டுக்கொண்டேன். நேற்று கருத்தரங்கு குழுவைச் சேர்ந்தவர் அந்தச் சிகப்பு நிற அட்டையை அவசியம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்றது மட்டும் நினைவில் இருந்தது.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 3

அறையை நோக்கி நடக்கவே அரைநாள் பிடிக்கும்போலத் தோன்றியது. விடுதியின் வரவேற்பறை திடல்போல விரிந்து கிடந்தது. பல இடங்களில் ‘லியாங்சூ கருத்தரங்கின்’ (Liangzhu Forum) அடையாளங்களைப் பார்க்க முடிந்தது. அக்கருத்தரங்கை ஜெஜியாங் பல்கலைக்கழகம் (Zhejiang University) முன்னெடுப்பதால் அப்பல்கலைக்கழக மாணவிகள் ஆங்காங்கு நின்றுக்கொண்டு “தோ இப்படிக்கா போ!” என வழிகாட்டினர். சீன யுவதிகளைப் பார்க்க பொம்மைபோல இருந்தனர். எவ்வளவு நேரமாக அப்படி நிற்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் முகத்தில் சோர்வைக்காட்டாமல் சிரித்து வைத்தனர்.

Continue reading