Author: வல்லினம்

விஷ்ணுபுரம் விருது 2017

2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது. கோவையில் டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது. 16 ஆம்தேதி காலை ஒன்பது மணிக்குச் சந்திப்புகள் தொடங்கும். இரவு பதினொரு மணிவரை எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் நிகழும். 17 ஆம்தேதி காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கி…

சீ.முத்துசாமி : ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்.

யு.பி தோட்டத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் பெரியாற்றின் மேல் பரப்பில் விரிந்திருக்கும் மரக்கிளையில் இருந்து குதித்து, எல்லா சிறுவர்களும் ‘சொரப்பான்’ பாய்ந்துகொண்டிருக்க கரை ஓரமாக நீந்தியபடியே பாய்ந்த வேகத்தில் தன் நண்பர்கள் ஆற்றின் ஆழம் சென்று மீள்வதை  ரசித்துக்கொண்டிருந்த சிறுவன்தான் முத்துசாமி. ஆற்றில் ஆழ நீந்துவதில் பயம் இருந்தாலும் அதில் கால்களை நனைக்காமல் அவரால் இருக்க முடிவதில்லை.…

உண்மைகளை மறைக்க என் புனைவுகளை நான் அனுமதிப்பதில்லை!

கேள்வி: உங்கள் தொடக்க கால வாழ்வைப் பற்றி கூறுங்கள். அ.ரெங்கசாமி: தந்தை தாயார் எல்லாம் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்கள் 1927-ல் இந்நாட்டிற்கு வந்தார்கள். அப்போது பெற்றோருடன் அண்ணனும் அக்காவும் வந்திருந்தார்கள். 1928இல் இன்னொரு அண்ணன் இங்கு பிறந்தார். 1930-ல் நான் பிறந்தேன். அதன் பிறகு என் தங்கை பிறந்தாள்.அப்பாவும் அம்மாவும் பால்மரம் சீவும் தொழிலாளிகளாக…

வல்லினம் கலை இலக்கிய விழா 9 : ஒரு பார்வை

கடந்த 17.9.2017 (ஞாயிறு) கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் வல்லினம் குழுவினரின் வருடாந்திர நிகழ்ச்சியான கலை இலக்கிய விழா ஒன்பதாவது ஆண்டாக நடைபெற்றது. சரியாகப் பிற்பகல் 2.00க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 280க்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கென தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரிந்த எழுத்தாளர் கோணங்கியுடன் சிங்கையிலிருந்தும் பல இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.…

வல்லினம் 100 : சர்ச்சைகள், கேள்விகள், விவாதங்கள்

தமிழ் நூல்களைப் பதிப்பித்தல், அதனை விற்பனைக்குக் கொண்டு வருதல் போன்றவை மலேசிய இலக்கியச் சூழலில் ஆபத்தான காரியங்களாகவே பலகாலமாக வர்ணிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் ஒருவர் பெரும் நஷ்டங்களைச் சந்திக்க நேரும் எனவும் அதனை சரிகட்ட அரசியல்வாதிகள் அல்லது தனவந்தர்களை முன்னிலைப்படுத்துவதன் மூலமாகவே தமிழ் நூல் பதிப்புத்துறையில் இயங்குபவர்களும் எழுத்தாளர்களும் காக்கப்பட முடியும் எனவும்…

கலை இலக்கிய விழா 9

வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட…

வல்லினம் போட்டி படைப்பு முடிவுகள்

வாசகர்களும் எழுத்தாளர்களும் வழக்கமாக வல்லினத்துக்கு அனுப்பும் படைப்புகளையே ஒரு போட்டியாக நடத்தி, அதன் வழி சிறந்த படைப்புகளை வெளிக்கொணரலாம் என்ற திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் கம்பாரில், நண்பரும் வல்லினம் குழு எழுத்தாளருமான கங்காதுரையின் வீட்டில் நடந்த சந்திப்பில் முடிவானது. வல்லினம் போட்டி படைப்புகள் குறித்த அறிவிப்பு வந்தது முதலே வாசகர்களிடம் நல்ல வரவேற்பு…

மலேசியாவில் நடந்தது என்ன? – அ.மார்க்ஸ்

கோலாலம்பூரில் ‘உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு’ 24-25.06.2017 ஆகிய இரு தினங்கள் நடைப்பெற்றது. மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் என்ற அமைப்பு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் உரையாற்றவும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவும் தமிழக திராவிட கழக பேச்சாளர்களும், திராவிட கருத்தாக்க சிந்தனையாளர்களும் திரளாக வந்திருந்தனர். மாநாடு முடிந்த பிறகு மாநாட்டிற்கு வருகை…

“எளிய வாசிப்புத்தளத்தைத் திருப்திப்படுத்த நகர்த்தப்படும் எழுத்து நீர்த்துப்போவதை தவிர்க்கவியலாது” – சீ.முத்துசாமி

சீ.முத்துசாமி 1949-ஆம் ஆண்டு மலேசியாவின் கெடா மாநிலத்தில் அமரர்களான சீரங்கன் முத்தம்மாள் தம்பதிகளின் மூத்தமகனாகப் பிறந்தார். 1973 முதல் இலக்கிய ஈடுபாடு கொண்டு சிறுகதைகளும், குறுநாவல்களும், நாவல்களும் எழுதி வருகிறார். இவர் படைப்புகள் மலேசியாவில் தனித்துவமான எழுத்து பாணியைக்கொண்டவை என்பதோடு பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றன. குறிப்பாக இவரது ’இரைகள்’ சிறுகதை, தமிழகத்தின் குமுதம் இதழின்…

சிங்கை ஆளுமைகள் பற்றிய ஆவணப்பட வெளியீடும் இலக்கியச் சொற்பொழிவும்

சிங்கப்பூரில் தமிழ்ச்சூழலில் இயங்கும் மூத்த எழுத்தாளர்கள் பி.கிருஷ்ணன், இராம கண்ணபிரான், மா.இளங்கண்ணன் ஆகியோரின் ஆவணப்படங்களைச் சிங்கப்பூர் வாசகர் வட்ட ஆதரவில் வல்லினம் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படங்களின் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் சிறப்பு வருகை புரிகின்றனர். ஆவணப்பட வெளியீட்டுடன் பழந்தமிழ் மற்றும் நவீன இலக்கியச் சொற்பொழிவும் இடம்பெறும் இந்நிகழ்ச்சி…

நடமாடும் பள்ளிக்கூடம்

13.5.2017- மலாயா பல்கலைக்கழகத்தில் வெளியீடுகாணும் ம.நவீனின் ‘மாணவர் சிறுகதை’ எனும் நூலுக்கு மேனாள் தேர்வு வாரிய அதிகாரி பி.எம்.மூர்த்தி அவர்கள் எழுதிய அணிந்துரை. யூ.பி.எஸ்.ஆர் பயிற்சிப்பட்டறையுடன் நடைபெறும் இந்த வெளியீட்டில் கலந்துகொள்ள மாணவர்களின் முன் பதிவு அவசியம். தொடர்புக்கு: தயாஜி 0164734794 / 0149005447 சிறுகதை என்கிற நவீன இலக்கியவடிவம் தமிழில் தோன்றிய நாள் முதலே…

வல்லினம் பொறுப்பாசிரியர் அ.பாண்டியன்

வல்லினம் தொடர்ந்து புதிய சாத்தியங்களை மலேசிய இலக்கியச் சூழலில் உருவாக்க முயன்றுவருகிறது. அவ்வகையில் கடந்த சில மாதங்களாக எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான ஶ்ரீதர் ரங்கராஜ் அவர்கள் வல்லினம் இதழை வழிநடத்தினார். அவரது மேற்பார்வையில் வல்லினத்தில் மொழிப்பெயர்ப்பு இலக்கியங்களும் தமிழகத்தில் புதிய தலைமுறையினரின் படைப்புகளும் சங்க இலக்கிய அறிமுகங்களும் அதிகம் இடம்பெற்றன. இது வல்லினம் இதழுக்குப் புதிய முகத்தைக்…

இறுதிச்சுற்றுக்கான படைப்புகள்

வல்லினம் இவ்வாண்டு தொடங்கியப் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஏப்ரல் 2017 இறுதியுடன் நிறைவடைந்தது. இம்மாதம் (மே மாதம்) தொடங்கி அனுப்பப்பட்டப் படைப்புகளில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றவை மட்டும் வல்லினத்தில் பிரசுரமாகும். அவ்வகையில் இம்மாதம் ஒரு கட்டுரை, ஒரு பத்தி இரு சிறுகதைகள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெறுகின்றன. தொடர்ந்து செப்டம்பர் வரை இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் படைப்புகள் வல்லினத்தில் பிரசுரமாகும்.…

படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம் 2017 – நாள் நீட்டிப்பு

வல்லினம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக சிறுகதைப் போட்டியை நடத்தி முடித்ததைத் தொடர்ந்து இவ்வருடமும் வல்லினத்தில் பிரசுரமாகும் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி சிறுகதை, கட்டுரை, பத்தி ஆகிய மூன்று இலக்கிய வடிவங்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்புக்கு மட்டும் RM 1000.00 ( ஆயிரம்  ரிங்கிட்) பரிசு வழங்க வல்லினம் முடிவெடுத்துள்ளது. சிறந்த சிறுகதை…