Author: ப.தெய்வீகன்

திருவேட்கை

01 லண்டனிலுள்ள கப்பல் கட்டுமானத் துறையில் உயர் பதவி வகித்தவர் மோர்கன். அவருடைய ஒரே மகன் அல்பேர்ட் தன்னுடைய வீட்டுப் பணிப்பெண் கரோலினாவுடன் பள்ளி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தான்.  வீதியோரச் சந்தை கடையொன்றில் சரிகை வைத்த சிறிய கைக்குட்டைகள் பல வண்ணத்தில் தொங்கின. நெரிசலான கடை தெருவில் கூடத் தொடங்கிய பலரும் பெறுமதியான கைக்குட்டைகளை ரசித்து…

கறை நதி

படிப்பதற்கு அமைதியான சூழலுடன் இனிமையான அயலவர்களும் கொண்ட தங்குமிடமொன்று அமையவேண்டும் என்று தேடித்திரிந்தபோது மெல்பேர்ன் நகரிலிருந்து நாற்பத்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்த வீட்டு உரிமையாளர்களின் அறிமுகம் கிடைத்தது. நன்கு உயர்ந்து படர்ந்து வளர்ந்த யூக்கலிப்டஸ் மரங்கள் தெருவெங்கும் மொய்த்து கிடக்கும் ரம்யமான பிரதேசத்தில் நான்கு அறைகள்கொண்ட அந்த இத்தாலிய முதியவர்களின் வீடு அமைந்திருந்தது. பிள்ளைகள்…

மிஸ்ட் கால்

நீண்டு பிளந்த மீன்னல் கதவுகளின் ஊடாக வாரிப்பொழிந்து கொண்டிருந்தது வானம். வெளிச்ச நரைகள் படிந்த இருளின் அமைதி அந்த விமான நிலையத்தை முழுமையாக ஆக்கிரமித்துக்கிடந்தது. மாறி மாறி வந்திறங்கிய விமானங்களுக்குள் பெருமூச்செறியும் பலநூற்றுக்கணக்கான உயிர்களின் நிம்மதியினாலோ என்னவோ அந்த பெருவிதானம் தொடர்ந்து காற்றோட்டம் நிறைந்ததாகவே காணப்பட்டது. வாழ்வின் சகல அழுக்குகளையும் அகத்தில் சுமந்த ஒருவனையும் மீதி…