
மலேசியாவில் தமிழ் இலக்கியத்திற்குத் தேசிய அங்கீகாரம் கிடைக்காதது பற்றிய பேச்சுகள் அவ்வப்போது எழுவதுண்டு. அப்பேச்சுகள் அனைத்தும் எழுந்த வேகத்திலே உடனடியாக அடங்கிவிடும். மலேசியத் தமிழ் இலக்கியம் எனும் தனித்த அடையாளத்தைக் கண்டடையும் முயற்சி தொடங்கிய காலத்திலிருந்தே, மலேசிய தமிழ் இயக்கவாதிகளும் இலக்கியவாதிகளும் தங்களின் அடையாளத்தை இம்மண்ணில் விதைப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வந்தனர். சஞ்சிக்கூலிகளாகப் வந்த…