Author: சாலினி

இளந்தமிழன் சிறுகதைகள்: பொது உண்மைகளின் பெட்டகம்

கடந்த 2 மார்ச் 2024 முதல் 3 மார்ச் 2024 வரை மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நிகழ்ந்த வல்லினம் முகாமின் இரண்டாவது அமர்வில் எழுத்தாளர் இளந்தமிழன் எழுதிய ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்நூலில் மொத்தம் 45 சிறுகதைகள் அடங்கியுள்ளன. ‘இளந்தமிழன் சிறுகதை’ நூலைக் குறித்து எழுத்தாளர்கள் கோ. புண்ணியவான்,…

ஜெயகாந்தன் சிறுகதைகள்: தமிழாசியா கலந்துரையாடல்

தமிழ் இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்ட மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனை அறியாத இலக்கிய வாசகர்கள் மிக அரிது. என் நவீன இலக்கிய வாசிப்பைக்கூட ஜெயகாந்தனின் எழுத்துகளின் மூலமே தொடங்கினேன். தமிழாசியாவில் தொடர்ந்து நடத்தப்படும் சிறுகதை கலந்துரையாடலில் இம்முறை(17.2.2024) ஜெயகாந்தனின் சிறுகதைகள் கலந்துரையாடப்பட்டது மிகுந்த மன நெருக்கத்தைக் கொடுத்தது. ‘நான் இருக்கிறேன்’, ‘முன்…

கரிப்புத் துளிகள்: மானுட அகம்பாவமும் அகூபாராவும்

மனிதனுக்குத் தனிச்சொத்துகள் மீது ஆர்வம் எழுந்தபோது, அது பேராசையாக வளர்ந்து லாபத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் எதையும் செய்யலாம் எனும் நிலை எழுந்தது. இயற்கை வளங்கள் அப்படித்தான் தனி மனிதர்களின் உடமைகளாகப்பட்டு சுரண்டப்பட்டன. சுயத் தேவை, பேராசை, பொருளாதாரம், அதிகாரம் போன்றவற்றை நிலைநாட்டிக்கொள்ளவதற்காக அழிக்கப்பட்டு வருகின்ற இயற்கை வளங்களோடு எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளும் நந்தைச் சுவடுகளாக தத்தம் தடயங்களை…

எஸ். எம். ஷாகீர் ஓர் அறிமுகம்

மலேசியாவில் நவீன மலாய் இலக்கியச் சூழலைத் தொடக்கி வைத்தவர்கள் அசாஸ் 50 எழுத்தாளர்கள். அவர்களைத் தொடர்ந்து 60ஆம், 70ஆம், 80ஆம் ஆண்டு படைப்பாளர்கள் தங்களின் பங்கினையாற்றி வந்தனர். நவீன மலாய் இலக்கியச் சூழலில் யதார்த்தவியலை மையமாகக் கொண்ட எழுத்துப் படைப்புகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கிய காலக்கட்டத்தில் யதார்த்தவியலோடு புராணங்களையும் வரலாற்றையும் தொடர்புப்படுத்தி புனைவுலகில் புதிய முயற்சியில்…

புதுமைப்பித்தனின் மூன்று சிறுகதைகள்: தமிழாசியா கலந்துரையாடல்

சிறுகதை என்பது ஒரு கலை வடிவம். அதன் எளிமையும் வாசிக்க எடுத்துக்கொள்ளப்படும் நேரமும் பலரையும் அதன்பால் ஈர்க்கிறது. இச்சூழலில் மொழியால் ஆன அக்கலை வடிவத்தை முழுமையாகச் சென்றடைகிறோமா என்பது புதிய வாசகர்களிடம் எப்போதும் உள்ள பிரதானமான கேள்வி.  சிறுகதை வாசிப்பு என்பது அதனுள் பூடகமாகச் சொல்லப்படும் கருத்தை உருவி எடுத்து ஒப்புவிப்பதாகவே மலேசியாவில் பழக்கமாகிவிட்ட சூழலில்…

அரவின் குமார் படைப்புலகம்

மலேசிய தமிழ் இலக்கியச் சூழல் என்பது 50-களில் தொடங்கப்பட்டு இன்றைய நிலையிலும் பல மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டடைந்து கொண்டு வருகின்றது. பாலபாஸ்கரன், சை. பீர்முகம்மது, ம. நவீன் போன்றவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வாசிக்கும்போது மலேசியாவில் தனித்துவமான இலக்கியம் உருவாக வேண்டும் எனும் எண்ணம் விதைபட்டு, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்து வந்த தலைமுறையால்தான் 70களில் நவீன இலக்கியத்தின்…

கோ. புண்ணியவான் : காலங்களுள் தக்கவைத்த கலைஞன்

மலேசியாவில் தமிழ் இலக்கியத்திற்குத் தேசிய அங்கீகாரம் கிடைக்காதது பற்றிய பேச்சுகள் அவ்வப்போது எழுவதுண்டு. அப்பேச்சுகள் அனைத்தும் எழுந்த வேகத்திலே உடனடியாக அடங்கிவிடும். மலேசியத் தமிழ் இலக்கியம் எனும் தனித்த அடையாளத்தைக் கண்டடையும் முயற்சி தொடங்கிய காலத்திலிருந்தே, மலேசிய தமிழ் இயக்கவாதிகளும் இலக்கியவாதிகளும் தங்களின் அடையாளத்தை இம்மண்ணில் விதைப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வந்தனர். சஞ்சிக்கூலிகளாகப் வந்த…