
பதியம் போடப்பட்டச் செடிகள் வேகமாய் வளர்கின்றன என்கிறார்கள். அது உண்மையா அல்லது பிரமையா என்பது தெரியாது. ஆனால் தமது தாய் வேர்களைத் தமிழகத்தில் விட்டுவிட்டுச் சிங்கை வந்து பதியம் பிடிக்கும் எழுத்தாளர்கள் ஊக்கமாகத்தான் இருக்கிறார்கள். கோவில் உண்டியலில் போட்ட காசு போல தமிழகத்தில் ஆயிரத்தில் ஒன்றாய் கலந்து காணாமல் போகும் அபாயம் இல்லாமல் சிங்கையில் படைப்பாளர்களின்…