Author: சிவானந்தன் நீலகண்டன்

பாலபாஸ்கரன் ஆய்வுகள் : அக்கறையும் அணுகுமுறையும்

‘ரேடியோ மலாயாவில்’ ஒலிபரப்பாளர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், சிங்கப்பூர்த் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர் எனப் பல்வேறு முகங்களை வெளிப்படுத்திய பாலபாஸ்கரன், புதுச்சேரியில் பிறந்து பினாங்கில் வளர்ந்து, கடந்த சுமார் நாற்பதாண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருபவர். இவரது இன்னொரு பரிமாணம் இலக்கிய, இதழியல், சமூக வரலாற்று ஆய்வாளராகத் தொடர்ந்து துல்லியமும் செறிவும்கூடிய ஆய்வுகளை வெளியிட்டு வருவதாகும். தன்னுடைய…

கூலி தரும்

திரைப்பாடல்களைக் கூர்ந்து கேட்பதும், அவை மனதில் பதிந்ததும், சன்னமாக முனகிக்கொள்வதும் எனக்கு சுமார் பத்துவயதிலிருந்தே வழக்கமாக இருந்தது. ஆனால் இசையை முறையாகக் கற்கவேண்டும் என்றோ இசைக்கருவிகளை வாசிக்கவேண்டும் என்றோ தோன்றியதில்லை. பின்னாளில் ஶ்ரீபெரும்புதூரில் வேலைக்குச் சென்றபோது கிடார் வாசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை பிறந்துவிட்டது. ஏன் குறிப்பாக கிடாரைத் தேர்வுசெய்தேன் என்பதற்கு இன்றுவரை காரணம் கிடைக்கவில்லை. …

இறுதி சாகசம்

என்னுடைய அப்பாவழித் தாத்தாக்கள், அப்பாவின் அப்பாவும் சித்தப்பாவும், பள்ளிப்படிப்போடு நிறுத்திக்கொண்டனர். இருவரும் சிறுவயதிலிருந்தே எந்த வேலையையும் சொந்தமாகக் கற்றுக்கொள்வதில் தேட்டையாக இருந்தனர். பதின்மவயதிலேயே எண்ணெய் வியாபாரத்தைத் தொடங்கினர். அதற்கு அதிக முதலீடு தேவையில்லை. ஒரு செக்குக் கட்டையும் ஒருஜோடி மாடும் போதும். குலத்தொழில்தான் என்றாலும் அவர்கள் தொழிலுக்குப் புதிது.

பிச்சைப் புகினும்

இந்தக் கொரோனா காலகட்டத்தின் அளவுக்கு மோசமில்லை என்றாலும், பத்தாண்டுகளுக்கு முந்தைய சிங்கப்பூரிலும் பலருக்கும் எங்கே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்றொரு பயம் இருந்தது. அதற்குக் காரணம் 2007-2009 காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சுணக்கம், அதைத்தொடர்ந்த ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள். எனக்குப் பரவாயில்லை. அதற்கு முந்தைய இரண்டாண்டுகளில் இருந்ததுபோல நிறுவனத்தில் கூடுதல்பணி கிடைக்கவில்லை. அதனால் கூடுதல்…

இரண்டொழிய இன்னொன்று

அது 1998ஆம் ஆண்டின் பிற்பகுதி. தமிழ்நாட்டில் ஒரு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பட்டயப் படிப்பை முடித்திருந்தேன். பட்டப் படிப்பைத் தொடர எண்ணியிருந்தேன். ஆனால் குறைந்த கட்டணப் பிரிவில் இடம் கிடைக்காமல் போனது. தேவையான அளவைக்காட்டிலும் சுமார் இரண்டு விழுக்காடு என்னுடைய மதிப்பெண் குறைவு. அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்கும் பிரிவில் சேரலாம். ஆனால் விருப்பமில்லை. அதனாலென்ன?…

வல்லினம் 100 விமர்சனக் கட்டுரை – ஒரு பார்வை

வல்லினம் 100′ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆறு விமர்சனக் கட்டுரைகளுள் சீ.முத்துசாமியின் ‘இருளுள் அலையும் குரல்கள்’ குறுநாவல்கள் தொகுப்பைக் குறித்து நான் எழுதியுள்ள கட்டுரையும் ஒன்று. அக்கட்டுரையைத் தவிர்த்து மற்ற ஐந்து விமர்சனக் கட்டுரைகளைக் குறித்து என் கருத்துகளை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன். முதலாவது, முத்தம்மாள் பழனிசாமியின் ‘நாடு விட்டு நாடு வந்து‘ நூல் குறித்த அழகுநிலாவின் விமர்சனக் கட்டுரை. தற்காலத்தில்…