Author: கங்காதுரை

மண்டை ஓடி: மண்ணின் மணத்தை நிறைத்திருக்கும் கதைகள்

ஓர் எழுத்தாளனாகப் பிறர் நூலை விமர்சனம் செய்யும் அளவுக்குத் தகுதி கொண்டிருக்கவில்லையென்றே நம்புகின்றேன். இதுவரையிலும் சிறுகதை இலக்கியம் என் கைக்கு அடங்காதொரு கலையாக இருக்கும் பட்சத்தில் ம.நவீனின் ‘மண்டை ஓடி’ சிறுகதைத் தொகுப்பை ஒரு வாசகனின் பார்வையிலிருந்து விமர்சனம் செய்வது சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன்.

யார் அந்தப் பண்டிதன்?

அங்கியை அணிந்துகொண்டு மாபெரும் மாணவர்கள் கூட்டத்திற்கும் அவர்களை உள்ளே வரவேற்றுக்கொண்டிருந்த மண்டபத்திற்கும் இடையில் விரிவுரையாளர்களின் அணிவகுப்பில் நின்றுக்கொண்டிருந்தேன். துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் பகுதி. புலங்களின் தலைவர்கள் பிரத்யேக அங்கிகளை அணிந்துகொண்டு விரிவுரையாளர்களுக்கு நேரெதிரில் அணிவகுத்து நின்றுக்கொண்டிருந்தனர். விழாவின் தொடக்கத்திற்கான அறிவிப்பைத் தொடர்ந்து பின்னணி இசை முழங்கியது. மாணவர்களும் பெற்றோர்களும் எழுந்து…

ஆதிசேடன்

ஸ்ரீவைகுண்டத்துப் பாற்கடலில் தனது உடலாலேயே ஆதிசேடன் மூன்றடுக்கு மஞ்சத்தை எழுப்பி தனது ஐந்து படங்களையும் விரித்து மூவுலக காப்பகமான திருமாலுக்குக் குடைப்பிடித்தான். சுதர்சனன், சங்கு முதலிய ஆயுதங்களும் கருடனும் திருமாலைச் சேவித்து நின்றனர். திருமகள் நாதனின் அருகில் அடக்கமாய் வீற்றிருந்தாள். எல்லாம் வல்ல திருமால் யோக நித்திரையில் ஆழ்ந்த வண்ணமே ஆதிசேடன் மேல் சயனித்திருந்தார். எல்லாமே…

படைப்பு சுதந்திரம் உள்ளவனே கலைஞன் – ஜேம்ஸ் லீ

சுதந்திரத்திற்கு எல்லா நேரங்களிலும் சுதந்திரம் இருப்பதில்லை. எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரத்தின் வரையறையை ஆளும் அதிகாரங்களே நிர்ணயிக்கின்றன. அதிகாரங்களையும் அதன் வரையறைகளையும் கடந்து தனது கருத்துகளை படைப்பின் வாயிலாக வெளியிடவே ஒவ்வொரு கலைஞனும் முயல்கிறான். ஆனால் பல நேரங்களில் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டு தன்னை சமரசரம் செய்துகொள்வது பெரும்பாலான கலைஞர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்கு அவர்களது…

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் – எனது பார்வை

முதலில் இந்தச் சிறுகதையை எழுதிய நண்பர் தயாஜியை மனதார பாராட்டுகிறேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறுகதை அதிகம் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது இதுவே முதன் முறை. இம்மாதிரியான கருவை கையில் எடுத்துக்கொண்டு எழுதுவது என்பது சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்ள ஒரு ‘தில்’ வேண்டும். அது தயாஜிடம் இருப்பதை எண்ணி பெருமை…

பெருந்தன்மையும் பெண்ணியமும்

மற்றவர் பிரச்சனையில் மூக்கை நுழைக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. எதுவும் தெரியாமல் மற்றவரைப் பற்றி பேசுவதும் கிடையாது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் (பெ.இரா) அவர்களின் விசயத்திலும் இதுவரை அப்படியே இருந்துள்ளேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அவரைப் பற்றிய விமர்சனங்கள் பரவலாக இருந்தாலும் அதை எதையும் மனதில் வைத்து நான் இதை எழுதவில்லை.…