Author: அஜிதன்

ஆசிர்வாதம் ஸ்டூடியோஸ்

என் வாழ்நாளில் மகிழ்ச்சி என்ற ஒன்றை நான் எப்போதுமே  அறிந்திருக்கவில்லை. இளமையில் பசியோ வேதனையோ உடலில் தூலமாக  உணர்ந்ததைபோல அதை நான் உணர்ந்ததில்லை. சற்று நேரம் எல்லாவற்றையும் மறந்திருந்த தருணங்கள் உண்டு. கரிசல் காட்டின் அந்தியில் வானம் சிவக்கும்போது சில சமயங்களில். அதையும் சிறுவயதில் அச்சத்துடன்தான் கண்டிருக்கிறேன். மொத்த வானமும் தலைக்கு மேல் தீப்பற்றி எரிவதுபோல…

மாரிட்ஜானின் உடல்

அந்தியில் நாங்கள் கினரெஜோவுக்குச் சென்று சேர்ந்தபோது கிராமத்தின் பெரும்பாலான மக்கள் கீழே பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். செல்லும் வழியெங்கும் அடர்ந்த காட்டிற்குள் மின்மினிகள் கூட்டம் கூட்டமாக மின்னித் துடித்துக் கொண்டிருந்தன. எங்கள் குழுவில் மூத்தவரான எண்பது வயது கடந்த ம்பாஹ் சுரக்ஸோ கூட தன் வாழ்நாளில் அதுவரை இத்தனை மின்மினிகளைப் பார்த்ததில்லை என்று வியந்தார். இருள்…

மரணம்: மூன்று குறுங்கதைகள்

மெழுகுடல் எம்.டி.சி பேருந்தின் அத்தனை அத்தனை கண்களும் என்னைத்தான் பார்க்கின்றன, துருவேறி தோலைக் கீறிட கரந்து காத்திருக்கும் சிறு கம்பி நுனிகளைப் போல. சிறு வயதில் அப்பா ஒரு முறை சொல்லியிருக்கிறார் “சிறு துரு உடலில் ஏறினால் கூட அது நீரி நீரி உயிரை எடுத்துவிடும்.” இப்போது நான் நூறு மடங்கு மென்மை கொண்டது போல…

ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்

ஃபோன் பேசிவிட்டு ஜஸ்டின் கொஞ்சம் பதற்றத்துடன் திரும்பி வருவதைக் கசாயம் கவனித்தான். “என்ன மக்கா? மாமாவா?” “ஆமா வர சொல்லுகாரு. என்னவொ பெரிய சோலியாம். வண்டி எடுல” கசாயத்துக்கு அவன் சொல்லும் தொனியிலேயே சங்கதி ஓரளவு புரிந்தது. பள்ளி நாட்களிலிருந்தே அவனுடன் இருப்பவன் கசாயம். ஜஸ்டினின் அப்பா மோகன் ராஜ் அவன் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு…