
வாசலுக்குள் நுழைந்து அரசமரத்தைக் கடந்து செல்ல, கிளையில் இருந்து குதித்து வந்து மண்டைஓடு கூவினான், “லேய் வாத்து, நேத்து ஏம்பில வரல?” “ஊர்ல இல்லல. நேத்துதான் வந்தேன்”, என் பதிலை அவன் கவனித்ததாக தெரியவில்லை. “ஏறிச்சாடி விளாட வாரியா?”, மண்டைஓடு புதிதாக ஒரு விளையாட்டை கண்டுபிடித்துவிட்ட உற்சாகத்தில் இருந்தான். அவன் கண்கள் இரண்டும் விரிந்து வட்டமாக,…




