Author: சந்துரு

இல்லாத திசைகள் 6 – நெருப்பு ஆசிரியர்

நெருப்பு ஆசிரியர் பொறுப்பெடுத்த பின் அப்பத்திரிக்கையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. சிறிய அறைக்குள் இருந்த வாரப் பத்திரிகை அலுவலகத்தைப் பக்கத்தில் இருந்த கட்டடத்திற்கு மாற்றினார்கள். பெரிய இடத்தில் வசதியாக இருந்தது. அதுதான் நெருப்பு ஆசிரியரின் குணம். யாரோடும் ஒட்டாமல் தனித்தீவு அமைக்கும் குணம். மலேசிய நண்பன்  நாளிதழில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் நெருப்பு ஆசிரியர்.…

இல்லாத திசைகள் 5 – முதல் முழு சம்பளம்

பாடாவதி ஓவியரிடமிருந்து தப்பித்து வார இதழ் ஆசிரியரின் தம்பி நடத்திவந்த நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தேன். மறக்க முடியாத வருடங்கள் அவை. அங்கு வேலைக்குச் சேர்ந்து முதல் மாத சம்பளத்தை வாங்கிய நாள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. ஒரு வெள்ளைக் கவரில் சம்பள பணத்தைப் போட்டு கொடுத்தார்கள். கவரின் மேல் என் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கவரைக்…

இல்லாத திசைகள் 4 – பழிவாங்கும் படலம்

என் 21-ஆவது வயதில் அந்த வாரப்பத்திரிகையில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். ஆனால் அதற்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அது தானாக நடந்தது. அரசாங்கம் நடத்திய ஒரு மாத தமிழ்ப்பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நான் வேலை செய்த வாரப்பத்திரிகை அலுவலகத்திற்கு வந்தார். அவர் இப்போதிருக்கும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கெல்லாம்…

இல்லாத திசைகள் 3 – காத்திருத்தல்

எனக்கும் என் மனைவிக்கும் பெரும்பாலும் நிகழ்கிற சண்டைக்குக் காரணம் சொன்ன நேரத்துக்கு வந்து சேர்வதில்லை நான் என்பதுதான். பெரும்பாலும் அவரை காக்க வைத்து விடுவேன். அதனாலையே சண்டை வந்துவிடும். தப்புதானே… அதுவும் காத்திருக்கும் கோடூரம் அறிந்த நானே காக்கவைப்பது பெரிய தப்புதானே. கோலாலம்பூருக்கு வந்திறங்கிய முதல் நாள் இரவு காத்திருப்பை மறக்க முடியுமா? கோலாலம்பூருக்கு வந்து…

இல்லாத திசைகள் 2 – கோலாலம்பூர்  எனக்குத்  தண்ணீர்  காட்டியது

தண்ணீர்… இது இல்லாமல் ஏதும் உண்டா. என் இளமைக் காலங்கள் தண்ணீர் நிறைந்ததாய்த்தான் இருந்தது. எனக்கு விபரம் அறியும் வயதில் என் அப்பா அம்மா பால் மரம் சீவிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களோடு செல்வேன். அம்மாதான் மரம் சீவுவார். அப்பா நல்ல நிழல்தரும் மரமாக பார்த்து அதற்கடியில் பாய்விரித்து தூங்கி விடுவார். அம்மா பாலைச் சேகரித்து…

இல்லாத திசைகள் 1 – ஏமாற்றங்களும் பின் தொடரும் நம்பிக்கையும்

இன்று கம்பீரமாய் நிற்கும் ‘மலேசிய நண்பன்’ அலுவலகக் கட்டடத்திற்கு நேர் எதிர்புறத்தில் இருக்கும் இப்போதும் வெறிச்சோடிக் கிடக்கும் பேருந்து நிறுத்தத்தில்தான் 25 வருடங்களுக்கு முன் 14 வயதில் வந்திறங்கினேன். அப்போதும் அது வெறிச்சோடிதான் கிடந்தது. என்னை அழைத்து வந்த என் மாமா என்னிடம் கேட்டார் “நீ இப்போ எங்கே இருக்கேன்னு தெரியுமா?” “தெரியலை” என்றேன். அதற்கு…

சூப்பர்மேன் மற்றும் சில சாபங்கள்

“இவரு பெரிய சூப்பர்மேனு வந்துட்டாரு காப்பாத்த…” என்று பலர் கிண்டலாகவும் கேலியாகவும் பேசிக்கேட்டிருப்பீர்கள். நாம் அறியாமலேயே நம் வார்த்தைகளுக்கு நடுவில் வந்து அமர்ந்து கொள்ளும் ஒரு கதாப்பாத்திரம்தான் இந்த “ சூப்பர்மேன்” பாத்திரம். சாகசங்களின் குறியீடாக ‘சூப்பர் மேன்’ எனும் பெயர் மாறியுள்ளது.  யார் இந்த சூப்பர்மேன்? 1938-இல் இரண்டு உயர்க்கல்வி மாணவர்கள் வெர்ரி சீகன்…