வல்லினம் இவ்வாண்டு தொடர்ச்சியாக பல கல்லூரிகளில் இலக்கியக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. இதில் நாடு முழுவதும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்குகளை வல்லினம் சார்பாக பேராசிரியர்கள் வீ.அரசு மற்றும் எம்.ஏ.நுஃமான் ஆகியோர் வழிநடத்தினர்.
12.10.2015 (நண்பகல் 2.00)- உப்சி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் முதல் அங்கமாக இயக்குனர் சஞ்சை அவர்களின் ‘ஜகாட்’ திரைப்படம் குறித்த அறிமுகம் நடைபெற்றது. சஞ்சை தான் மாணவராக இருந்தபோது அனுபவித்தப் புறக்கணிப்புகளை சக பயிற்சி ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
12.10.2015 (இரவு 7.00) – ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி ஆசிரியர்களுடன் இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழ் ஆசிரியர்கள் அறிய வேண்டிய அடிப்படை தகவல்களை இரு பேராசிரியர்களும் சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டனர். ம.நவீனின் வகுப்பறையின் கடைசி நாற்காலி என்ற நூல் இந்நிகழ்வில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
13.10.2015 (காலை 10.00) – மலாயா பல்கலைக்கழக மொழியியல் புலத்தில் கலந்துரையாடல் நடைப்பெற்றது. தனிநாயக அடிகளாரின் வாழ்வை ஒட்டி பேசிய அரசு இன்றைய மலாயா பல்கலைக்கழத்தின் தேக்கம் குறித்த விமர்சனத்துடன் தனது பார்வையை முன்வைத்தார். இரண்டு மணி நேரம் இக்கலந்துரையாடல் நடைப்பெற்றது.
வல்லினம் தொடர்ந்து இதுபோன்ற அறிவார்ந்த கலந்துரையாடல்களைக் கல்விக்கூடங்களில் இலவசமாக நடத்த ஆர்வம் கொண்டுள்ளது. விருப்பம் உள்ள கல்விக்கூடங்கள் தொடர்புக்கொள்ளலாம்.